Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
First topic message reminder :
வெள்ளந்தி மனுசியாய் மனசில் சிரித்த நிஷா அக்காவின் தங்கை கணவர் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். அவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும் அந்தக் குழந்தைக்கு அப்பாவின் இறப்பை தெரியப்படுத்தவில்லை என்றும் கேள்விப்பட்டேன். எவ்வளவு கொடுமை பாருங்கள். சிறிய வயதில் மரணம்... அப்பாவை இழந்த மகள் என என்னை வாட்டிய மனவேதனையில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நமக்கே இப்படி என்றால் அக்கா, அவர்தான் அவர் தங்கைகளுக்கும் தம்பிக்கும் அம்மாவாக இருந்தார் என்பதை நான் அறிவேன்... எனவே அக்க அந்த வேதனையில் இருந்து விரைவில் மீள்வது என்பது சாத்தியமில்லை என்ற போதிலும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் வந்து நன்றி சொல்லியிருக்கிறார்கள். இதுதான் நிஷா அக்காவின் மனசு. அவர் வேதனைகளில் இருந்து விரைவில் மீளவும் என்றும் எப்போதும் சந்தோசமாக இருக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
***
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்றன. சென்ற வருடங்களைக் காட்டிலும் இந்த முறை பதிவர் விழாவுக்கான வேலைகள் இன்னும் சிறப்பாக நடந்து வருகின்றன. போட்டிகள் அறிவித்து நிறையப் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என்று சொல்லும் விமர்சனப் போட்டியும் அதற்கான பரிசுகளும் அறிவித்திருக்கிறார்கள். வரும் 9 ஆம் தேதி இரவுக்குள் அனுப்ப வேண்டும்... பதிவர்களும் பதிவர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு சிறப்பியுங்கள் நண்பர்களே... விபரம் அறிய இங்கு சொடுக்குங்கள்.
***
வலைப்பதிவர் விழாவுக்கு முத்துநிலவன் ஐயாஉள்ளிட்ட புதுக்கோட்டைப் பதிவர்கள் அனைவரும் எவ்வளவு தீவிர மாக உழைக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மதுரை வலைப்பதிவர் விழாவுக்கு உழைத்த தனபாலன் அண்ணா புதுக்கோட்டை விழாவுக்கும் மிகச் சிறப்பாக உழைக்கிறார் என்பதை நாம் அறிவோம். மதுரை, புதுக்கோட்டை என்றில்லை நாளை கில்லர்ஜி அண்ணாவுடன் இணைந்துதேவகோட்டையில் விழா வைத்தாலும் ஓடி ஓடி வேலை பார்ப்பவர் யாரென்றால் அது எங்கள்தனபாலன் அண்ணாவாகத்தான் இருக்கும். இன்று விழா குறித்து அண்ணன் அவர்கள் எழுதிய அழகான பாடலை முகநூலில் படித்தேன்.
"ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே..."
என ஆரம்பித்து மிக அழகாக எழுதியிருக்கிறார். அவரின் வலையில் தேடினேன்... கிடைக்கவில்லை... இந்தப் பாடலை சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்அவர்கள் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள்... அங்கு செல்ல... இங்கு சொடுக்குங்கள் மிக அருமையாக எழுதியிருக்கிறார். விழாவுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் புதுக்கோட்டை நட்புக்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் அண்ணன் தனபாலன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் சொல்வோம்.
***
கிருமி படம் பார்த்தேன். போலீசுக்கு தகவல் சொல்லும் உளவாளிக்கு நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. நாயகந் கதிருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. அழகான மனைவி, அன்பான அக்காதான் மாமியார், அழகிய பூவாய் குழந்தை எல்லாம் இருந்தும் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு தண்ணி, சூதாடம் என்று இருக்கிறார். இடையில் போலீசிடமும் மாட்டுகிறார். போலீஸ் உளவாளியாக இருக்கும் சார்லி, இவரை போலீஸ் உளவாளி ஆக்குகிறார். அதன் பின்னான நிகழ்வுகளில் முக்கியமான புள்ளியை போலீசில் மாட்டிவிட அதன் காரணமாக சார்லியின் மரணம், அவரின் குடும்ப நிலை, நாயகனைத் துரத்தும் வில்லன்கள், போலீசின் இரட்டை நிலை என்று பயணிக்கும் கதை கடைசி வரை தொய்வில்லாமல் செல்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாய் இருப்பதால் பார்க்கலாம்.
***
சண்டி வீரனில் வரும் 'அலுங்குறேன் குலுங்குறேன்' பாடல் அடிக்கடி கேட்கும் பாடலாக ஆகியிருக்கிறது. ரொம்ப அருமையாக இருக்கிறது... அதிலும் முரளியின் மகன் அதர்வாவும் ஆனந்தியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்கள். ஆனந்தி பல இடங்களில் களவாணி ஓவியாவை நினைவூட்டுகிறார். பின்னணிக் குரலும் ஒருவர்தான் போலும்... அந்தக் குரலும் விளையாட்டுத்தனமான செய்கைகளும் அப்படியே... இது எனக்கு மட்டுந்தானான்னு தெரியலை... ஆனா ஓவியாதான் ஞாபகத்தில் வந்தார். ஆமா அழகா பாவாடை தாவணியில் வர்ற இந்தப் பெண்ணைத்தானே திரிஷா இல்லைன்னா நயன்தாராவுல ரொம்ப மோசமா நடிக்க வச்சிட்டாங்கன்னு அழுது சண்டையெல்லாம் போட வச்சாங்க...
இதே போல் ஜிப்பா ஜிமிக்கியில் மொட்டை ராஜேந்திரன் பாடும் 'ஜிப்பா போட்ட மைனரு' பாடலும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அந்த அழகான அருவியும், பச்சைப் பசேல் என்ற வயல்வெளியும், மாட்டு வண்டி, அரிக்கேன் விளக்கு என நம்மை சின்ன வயதில் வயல் வரப்புகளில் ஓடி விளையாண்ட நினைவுகளை மீட்டெடுக்க வைத்துவிட்டார் இயக்குநர் நண்பர் ரா.ராஜசேகரன்.
***
புலி படம் பார்க்க பைக்கில் வந்து விபத்துக்குள்ளாகி உயிரைவிட்ட இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று பெற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி பண உதவியும் செய்த விஜயை பாராட்டுவோம். அதே நேரத்தில் உனக்குன்னு குடும்பம் இருக்கு அதுதான் முக்கியம் அதைப் பாரு என் படமெல்லாம் அப்புறம்தான் என்று சொல்ல அஜீத்தைத் தவிர வேறு யாருக்கும் மனம் வரவில்லையே ஏன்..? படம் ரிலீஸ் அன்னைக்கு கட் அவுட் வைக்கவும் அதற்கு பாலாபிஷேகம் செய்யவும் இன்னும் சொல்லப் போனால் வேல் போட்டு பால்குடம் எடுக்கவும் படம் வெளியாவதில் தாமதம் ஆனால் பள்ளி கல்லூரி செல்லும் பெண்களின் பேருந்துகளை மறித்து வெறியாட்டம் நடத்தவும் ரசிகன் தேவை என்று நினைத்து பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். குடும்பம், குழந்தை, குட்டி எதுவும் தேவையில்லை... நடிகன் போதும் என்று ஆட்டம் போடும் உனக்கு அவன் செய்வதென்ன...? அவனுக்காக இறந்தால் உன் வீட்டுக்கு வருவான்.... பணம் கொடுப்பான்... அவ்வளவுதான்... உன் உயிர் உன் உறவுகளுக்காகத்தானே ஓழிய கோடிகளை சம்பளமாகப் பெறும் நடிகனுக்காக அல்ல... திரு. அப்துல்கலாம் இறந்த போது செல்ல முடியாதவர்கள்தான் பப்ளிசிட்டிக்காவும் பணத்திற்காகவும் அலங்கார விளக்குகளின் முன்னே அழகாக பவனிவருகிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.
***
பாக்யாவின் மக்கள் மனசு பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து என் கருத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கேள்விகளைக் கேட்டு அதை அழகாக தொகுத்து கலர் புகைப்படங்களுடன் வெளியிடும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர்சாருக்கு எனது நன்றி.
***
எல்லோருடைய பதிவுகளையும் படிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன்... பலருக்கு இடவில்லை... கஷ்டமாய்த்தான் இருக்கிறது... என்ன செய்ய வேலையும் கொஞ்சம் அதிகம்... இப்போதுதான் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்து எங்கள் இல்லத்தில் தென்றல் வீசுகிறது. வந்த புயலை வாசலோடு அனுப்பிவிட்டோம் என்றாலும் அது கொடுத்த வலிகளும், உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்க வைத்த நிகழ்வுகளும் எங்களுக்குள் இன்னும் காயவில்லை. அதனால்தான் அதிகம் எழுதவும் முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே... கண்டிப்பாக வாசிப்பேன்.
***
அன்பு அண்ணன்கள் ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா இருவருக்கும் இன்று பிறந்தநாள். காலையில் வாழ்த்து சொல்லியாச்சு என்றாலும் எல்லாரும் மீண்டும் அவர்களை வாழ்த்தலாம். கதிர் அண்ணா இப்போது மிகப் பிரபலமானவர். வேரில் இருந்து நுனி வரையின்னு புத்தகம் போட்டிருக்கிறார். சிறப்பான பேச்சாளர்... எல்லாருடனும் நட்பு பாராட்டுபவர் என்பது மிக முக்கியம். நான் அவருடன் வலைப்பூ மூலமாக தொடர்பில் இருந்தேன். சில சமயம் முகநூல் வாயிலாக சிறிய அரட்டை அடித்திருக்கிறேன். அவ்வளவே... ஆனால் அவரின் பகிர்வுகளையும் அவர் குறித்த செய்திகளையும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் தேவா அவர்களைப் பற்றி.... துபாயில்தான் இருக்கிறார்... எங்க மாவட்டக்காரர்... இரண்டு முறை நேரிலும் சில முறை போனிலுமாய் எங்கள் உறவு என்றாலும் தம்பி என்று சொல்லும் பாசக்காரர். இப்போது இவரின் புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன. விரைவில் வெளிவர இருக்கின்றன. ஆழ்ந்த சிந்தனை... நம்மை ஆட்கொள்ளும் எழுத்து... இதுதான் தேவா அண்ணா.... இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
***
இருங்க ஒரு முக்கியமான விஷயம், நம்ம சரவணன் அண்ணன்... அதாங்ககுடந்தையூர் தளத்தின் உரிமையாளர் குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் பக்காவான திரைக்கதையில் எங்க கணேஷ் பாலா அண்ணன், துளசி சார்,அரசன் அப்படின்னு நம்ம குரூப் ஆட்களை எல்லாம் நடிகர்களாக்கி ஒரு திரில்லர் கதையை குறும்படமாக எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் அகம் புறம்.... இந்த மாதத்தில் வெளியிடுவார் என்று நினைக்கிறேன்... அவரின் இளமை எழுதும் கவிதை நீ... என்னும் முதல் நாவல் அழகான திரைக்கதை. அப்புறம் சில நொடி சிநேகம்... நல்லதொரு கருவோடு வந்த முதல் குறும்படம்... இப்போ அகம் புறம்... நான் ஆவலாய்... அப்ப நீங்க...?
***
சிங்கையில் புத்தகம் வெளியிட்டு அதே புத்தகத்தை புதுகை வலைப்பதிவர் விழாவில் வெளியிட இருக்கும் தம்பி தவரூபன் அவர்களை வாழ்த்துகிறேன். வரலாற்று நாயகர்களை அற்புத எழுத்தில் நாமெல்லாம் அறியத் தரும் கணித ஆசிரியர். கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களை வாழ்த்தும் வயதில்லை என்பதால் அவரின் பாதம் பணிந்து இன்னும் நிறைய வரலாற்றுப் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
***
அப்புறம் புதுக்கோட்டை விழாவுக்கு எல்லாரும் கண்டிப்பாக போய்விட்டு வந்து நிகழ்வின் அற்புத நிஜங்களை எங்களுக்காக பகிருங்கள்... வெளிநாட்டில் இருந்து வரமுடியாத சூழலில் இருக்கும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
சே.குமார் wrote:வாங்க நண்பன்...நண்பன் wrote:மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
அருமையாக உள்ளது எங்கள் நிஷா அக்கா குறித்தும் எழுதியவை அருமை இன்னும் எதிர் பார்க்கிறேன் அவ்வளவு எழுதலாம் நிஷா அக்கா குறித்து நீங்கள் எழுதும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
பட விமர்சனங்கள் சிறப்பு எனக்குத்தான் படங்கள் பார்க்க டைம் கிடைப்பதில்லை மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை அனைத்தும் சிறப்பு
தொடருங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி...
தாங்களும் எழுதுங்களேன்... உங்கள் பார்வையில் நாங்களும் வாசிப்போம் அல்லவா...?
படங்கள் அதிகம் பார்த்தேன்...
எதை பத்தி எழுதணும் குமார்? நிஷாக்கா பத்தியா? அவர் என்ன எழுதுவார்னு நான் எழுதட்டுமா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
யாரிடம் வசதி பாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் தான் பரிசில்கள் கொடுக்க முடியும் அல்லவா? அப்படி என்றால் நீங்கள் தான் வங்கியில் பணம் போட வேண்டும்.Nisha wrote:*சம்ஸ் wrote:சே.குமார் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....
சம்ஸ்... என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமா...? ஸ்... அப்பா.... இப்படியும் சம்பாதிக்கலாம் போலவே...
ஆமா! உங்க வங்கி கணக்கு எண்ணை நிஷா மேடத்திற்கு அனுப்பிவையுங்கள் அவங்க பணத்தை வங்கியில் போடுவாங்க!ஹாஹாஹா
நானா சொன்னேன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
இது சரி வராது! நானா சொன்னேன் பணம் போடுறேன் எழுதுங்கன்னு..
என் தும்பியை பத்தி பணம் போட்டுத்தான் எழுத வைக்கணும் என நான் கனவிலும் நினைக்க மாட்டேனாக்கும். அவர் கூட கொஞ்ச நாள் பழகினாலே போதும். காசெல்லாம் தூசாகிரும் என எனக்கு தெரியும் சாரே!
என் தும்பியை பத்தி பணம் போட்டுத்தான் எழுத வைக்கணும் என நான் கனவிலும் நினைக்க மாட்டேனாக்கும். அவர் கூட கொஞ்ச நாள் பழகினாலே போதும். காசெல்லாம் தூசாகிரும் என எனக்கு தெரியும் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
அப்படி என்றால் நீங்கள் என்ன சொல்ல வாறீங்க.
எங்களைப் பத்தி எழுதத்தான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுறீங்களா?
எங்களைப் பத்தி எழுதத்தான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுறீங்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
ஆஹா!
மீண்டுமா? அம்மாடி நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா! என்னை விட்டிருங்கோப்பா! நிஷா பாவம்பா!
மீண்டுமா? அம்மாடி நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா! என்னை விட்டிருங்கோப்பா! நிஷா பாவம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
ஹா ஹா உங்கள் இருவரின் அரட்டையும் ஆரம்பம் முதல் படித்ததால் புரிந்து கொண்டேன்
இந்த ஆட்டத்திற்கு நான் வரலப்பா
இந்த ஆட்டத்திற்கு நான் வரலப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
Nisha wrote:இது சரி வராது! நானா சொன்னேன் பணம் போடுறேன் எழுதுங்கன்னு..
என் தும்பியை பத்தி பணம் போட்டுத்தான் எழுத வைக்கணும் என நான் கனவிலும் நினைக்க மாட்டேனாக்கும். அவர் கூட கொஞ்ச நாள் பழகினாலே போதும். காசெல்லாம் தூசாகிரும் என எனக்கு தெரியும் சாரே!
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
வந்திட்டு வரல்லன்னு எதுக்கு சாக்கு போக்கு சொல்லணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
Nisha wrote:வந்திட்டு வரல்லன்னு எதுக்கு சாக்கு போக்கு சொல்லணும்?
சரி இப்ப நானும் அரட்டை அடித்தால் குமார் அண்ணன் வருவார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
ஹலோ அக்கா சொன்னா சரிதான் என்றால் நான் சொன்னால் பிழையா?நண்பன் wrote:Nisha wrote:இது சரி வராது! நானா சொன்னேன் பணம் போடுறேன் எழுதுங்கன்னு..
என் தும்பியை பத்தி பணம் போட்டுத்தான் எழுத வைக்கணும் என நான் கனவிலும் நினைக்க மாட்டேனாக்கும். அவர் கூட கொஞ்ச நாள் பழகினாலே போதும். காசெல்லாம் தூசாகிரும் என எனக்கு தெரியும் சாரே!
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
நீங்க சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்*சம்ஸ் wrote:ஹலோ அக்கா சொன்னா சரிதான் என்றால் நான் சொன்னால் பிழையா?நண்பன் wrote:Nisha wrote:இது சரி வராது! நானா சொன்னேன் பணம் போடுறேன் எழுதுங்கன்னு..
என் தும்பியை பத்தி பணம் போட்டுத்தான் எழுத வைக்கணும் என நான் கனவிலும் நினைக்க மாட்டேனாக்கும். அவர் கூட கொஞ்ச நாள் பழகினாலே போதும். காசெல்லாம் தூசாகிரும் என எனக்கு தெரியும் சாரே!
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
அட!
இது சரி வராது
இது சரி வராது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
Nisha wrote:அட!
இது சரி வராது
உங்க முடிவுதான் நல்லாருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
அது சரி முடிவா நீங்க என்ன சொல்றீங்க நண்பா?நண்பன் wrote:Nisha wrote:அட!
இது சரி வராது
உங்க முடிவுதான் நல்லாருக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|