சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

புகை படிந்த போதிமரங்கள்.. Khan11

புகை படிந்த போதிமரங்கள்..

4 posters

Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty புகை படிந்த போதிமரங்கள்..

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 7:01

பட்டணத்து மரங்கள்
பாவம்.

புழுதிப்போர்வைக்குள்
மூச்சடைத்து
சாகும்
சாபம்.

உச்சிக்குடுமி
கட்சிக்கொடி
பறக்கும்...

கிளிகள்
வந்து போவதில்லை.
கிளையில்
ஒரு
ஊஞ்சல் இல்லை.

செத்த
ஓர் உறவுக்காய்
சிறுதீபம்
வேரில் இல்லை.
கொத்து விளக்கெரியும்
சில இரவில்.

மற்றபடி
பட்டினிதான்.
மின்கம்பி
தாண்டவிடா
பத்தினி தான்.

உலுக்கிப்
பழம் பொறுக்க
உற்றார்
வருவதில்லை..

தாகம் எப்போதும்.

தார்ச்சாலை
சுரப்பதில்லை.

வேட்டிவிலகாத
துயில்
கண்டதில்லை
நிழல் வீட்டில்.

பெரும்போதை
யாத்திரைகள்..
பெரும்பாலும்
முடியுமிங்கு...
ஆடையின்றி.

இலைகிள்ளி
சிறு
பீப்பி
செய்வாரில்லை..

விலையில்லாப்
பொருளாக
வீதியிலே
நிற்க வைத்தார்..

கரும்புச்சாறு
கடை முளைக்கும்
சில நாட்கள்.

காளானாய்
குடைவிரியும்
பகல் வேளை.

புனிதனுக்கு
சிலுவை
தந்த
தண்டனையாய்...
அங்கமெல்லாம்
ஆணிக்காயங்கள்.

நகர மரங்களுக்கு
நாலு சாதி.

கல்லூரிச்சோலைக்குள்
வளர்வதெல்லாம்
கடவுள் வரம்.

எத்தனை நாள்
ஆனாலும்
வளராத
தொட்டிமரம்.

நடைபாதை
ஓரங்களில்
தள்ளித்தள்ளி
வைத்த மரம்..

இன்னுமொரு
மரமுண்டு...

நடக்கும்
பேசும்
தின்னும்
சாகும்..

தன்னை எரிக்கவும்
பிற
மரம் தேடும்..

மனிதரைப்போலவே
இருக்கும்..

மரம் தான்...
http://naanselva.blogspot.in/2016/01/blog-post_24.html?m=1

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by Nisha Sun 24 Jan 2016 - 11:14

கிளிகள்
வந்து போவதில்லை.
கிளையில் 
ஒரு
ஊஞ்சல் இல்லை.
ம்ம் நிஜம் தான்! அத்தனை தூரம் மரங்களையும் பாழ் படுத்தி விட்டோம்!
மற்றபடி
பட்டினிதான்.
மின்கம்பி
தாண்டவிடா
பத்தினி தான்.
எத்தனை உண்மையான வரிகள். மரத்தின் சார்பில் எழுதப்பட்ட வரிகள் அத்தனையும் அருமையாய் இருக்கின்றது. 
கடைசி வரிகள் தான் நச்! பகிர்வுக்கு நன்றி செல்வா சார். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 11:51

அருயைமான ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது 
இன்னுமொரு
மரமுண்டு...

நடக்கும்
பேசும்
தின்னும்
சாகும்..

தன்னை எரிக்கவும்
பிற
மரம் தேடும்..

மனிதரைப்போலவே
இருக்கும்.. சூப்பர்


இப்போது மனிதன் 
அதற்கும் வேறு 
இயந்திரம் 
பார்த்து விட்டான் 
எரித்து சாம்பல் மட்டும் மிச்சம் தரும் இயந்திரம்
இன்னுமா மனிதன் கவலைப் படுவான் மரம் பற்றி
அநியாயம் அநியாயம் சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 17:46

இன்னுமா மனிதன் கவலைப் படுவான் மரம் பற்றி/////
படவேண்டும் என்பதாலே பாடிவைத்தேன்
நன்றி..

நண்பா

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by rammalar Sun 24 Jan 2016 - 17:51

புகை படிந்த போதிமரங்கள்.. 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 18:02

நன்றி...ராம் மலர்....முதல் பின்னூட்டம்...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by Nisha Mon 25 Jan 2016 - 13:15

ராம் மலருக்கு மேல இட்ட பின்னூட்டம் கண்ணில் படவில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by rammalar Mon 25 Jan 2016 - 13:21

செல்வகுமரன்...
-
உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன...தொடருங்கள்
-
புகை படிந்த போதிமரங்கள்.. Images?q=tbn:ANd9GcRQJhmk0Tx2uSkS1v4E1tiryf63HqvleOeWrUWf-KsPwITXscCWwg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by selvakumarm Mon 25 Jan 2016 - 14:28

அவருக்கு அவர் சின்ன மகள் தான் உயிர் நாடி என்பது அவர் கவிதைகளில் வெளிப்படும், /////



நன்றி..நிசா...ஆனால் இதைப் பெரியவள் பார்த்தால் என்னைக்கொன்று விடுவாள்..
எல்லாபிள்ளயும் ஒன்றுதான்...நான் என் கடிதங்களை சக்திக்கே எழுதுகிறேன்..என் அலுவலகம் தொடங்கி எல்லாம் சக்தியின் பெயரில் தான் இருக்கும்..
சின்னவள்..சேட்டைக்காரி...பெரியவள் புத்திசாலி..

வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கும் வரங்கள்....
தொலைகாட்சியை தூக்கி எறிந்த பிள்ளைகள்...பரிசாய் புத்தகங்கள் கேட்கும் தேவதைகள்..
என் எழுத்தை நேசிக்கும் முதல் காதலிகள்...
எழுது...எழுது என என்னை இந்த வயதில்
கவிஞனாய்ப் பெற்ற தாய்கள்..

வறுமை என்னை எப்போதேனும் கொல்லவரும் போது...புன்னகைக் கேடயம் ஏந்தி நிற்பவர்கள்...

நிசா.....என்னை என்னவெல்லாமோ எழுத வைக்கின்றீகள்..

இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில்லை..

நன்றி சேனையே...//////


நான் மலரின் முதல் பின்னூட்டம் என்பதை சொன்னேன்...


உங்களுக்காய் ஒரு பதிவே போட்டுவிடலாம்...நன்றி சொல்லி...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by Nisha Mon 25 Jan 2016 - 14:42

வாவ்! இத இத இதைத்தான் எதிர்ப்பார்த்தேன். எங்கும் வெளிப்படாத அல்லது போட்டுக்கொண்ட முகமூடியை  தூக்கி எறிய வைத்த  பதில், 

மூத்தவள் சக்திக்கு கடிதம் எழுதினாலும்  சின்னவள்  சூரியா பற்றி எழுதினாலும்  நீங்கள் இத்தனை வெளிப்படையாக பிள்ளைகள் மீதான உங்கள் பிரியத்தை வெளிப்படுத்தவில்லை, 

உங்கள் எழுத்தின் பின்னிருக்கும் ஊக்கும் சக்திகள், உங்களை உயிர்ப்பிக்கும்  தாய்கள் எனும் புரிதலுடனான வெளிப்படுத்தல் முதன் முதலான சேனையில் !மகள்கள் பார்த்தால் மகிழ்வார்கள், 

அவர்கள் பிரியம் வெளிப்பட்ட அளவு உங்கள் பிரியம் வெளிப்படுத்தப்படவில்லையே என நான் நினைத்திருக்கின்றேன்!

சந்தோஷம் செல்வா! நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 15:59

selvakumarm wrote:இன்னுமா மனிதன் கவலைப் படுவான் மரம் பற்றி/////
படவேண்டும் என்பதாலே பாடிவைத்தேன்
நன்றி..

நண்பா
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகை படிந்த போதிமரங்கள்.. Empty Re: புகை படிந்த போதிமரங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum