Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
Page 1 of 1
என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம்
ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள்
புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது
வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும்
இடம் பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா
முதற்படம்.
புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு
நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை.
ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும்
அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச்
செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி
பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப்
போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி
கேட்டு.
இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம்
இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார்.
ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம்
அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது.
'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை
ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று
தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை.
அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட
' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது.
படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு
சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை
போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை
கிடைத்தது.
புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த
அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன்
கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான
குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன்.
”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க...
ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி
பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...
எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக
பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக்
கூடாது.
வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத்
தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு
ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...
சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது.
அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை
போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை
ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு
நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு
கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு
கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார்.
என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்து
போனார் மதுரம்.
புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர்
இருவரும்.
-
-------------------------------
நன்றி-யாழ் இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|