சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை Khan11

யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை

Go down

யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை Empty யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை

Post by rammalar Sat 10 Apr 2021 - 9:26

ஒரு முடிவுக்கு வரும் முன், யோசித்து முடிவு 
செய்யுங்கள்.


ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் 
காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.


முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் 
சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது 
இவரது அன்றாட வழக்கம்.


ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் 
வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.


காவலாளியின் முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் 
கிடையாது.


ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு 
வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 
உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் 
என குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி 
அதனைக் கண்டார்.


ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு 
கொள்ளாமல் சென்று விட்டார்.


முதலாளி பார்த்தது, காவலாளிக்கு தெரியாது.


அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் 
போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் 
ஒரு பையினுள் காணப்பட்டது.


காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது 
என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றார்.


இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையில் சுடச் சுட 
விதவிதமாக உணவு இருக்கும்.


அவரும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி,
 குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட்டு வந்தார்கள்.


இருந்தாலும் யார் இப்படி தினமும் பொருட்களை வாங்கி 
இங்கே விட்டுச் செல்கிறார் என மனதுக்குள் ஒரு 
கேள்விக்குறி இருந்து கொண்டே இருந்தது.


திடீர் என ஒரு நாள் முதலாளி இறந்து விட்டார்.
வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும், 
வந்திருந்தனர்.


அன்று அதே இடத்தில் உணவுப் பொதியை தேடினார்.
உணவு இருக்கவில்லை.


ஒரு வேளை, பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க
 வாய்ப்பு உள்ளது என நினைத்து அன்று விட்டு விட்டார்.


இரண்டாம் நாள் பார்க்கிறார்;
அந்த இடத்தில் உணவுப் பை இல்லை.
மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறார்;
உணவுப் பை இருக்கவே இல்லை.


இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் 
குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று.


உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை 
உயர்த்திக் கேட்டார்


அதற்கு முதலாளியம்மா, மகனிடம் கலந்தாலேசித்து 
சொல்வதாக சொன்னார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை Empty Re: யோசித்து முடிவு செய்யுங்கள் - சிறுகதை

Post by rammalar Sat 10 Apr 2021 - 9:26

இது நாள் வரை போதுமானதாக இருந்தது, இப்போது 
மட்டும் எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது என வினவினார்.


வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப் பை 
கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் 
துன்பத்தையையும் முதலாளியம்மாவிடம் எடுத்துச் 
சொன்னார்.


எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனது என்று 
முதலாளியம்மா கேட்டார்.


அதற்கு அவரும் முதலாளி இறந்த நாளிலிருந்து என 
சொன்னார்.


முதலாளியம்மா ‘ஓ’ என அழத் தொடங்கினார்.


இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள 
உயர்வு கூட எனக்கு வேண்டாம் அம்மா; நான் இங்கேயே 
வேலை செய்கிறேன். முதலில் நீங்கள் அழுவதை 
நிறுத்துங்கள் என கூறினார்.


அதற்கு முதலாளியம்மா, நான் அதை நினைத்து 
அழவில்லை.


என் கணவர் தினமும் ஏழு நபர்களுக்கு உணவளித்து 
வந்தார்.


அதில் ஆறு நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு 
விட்டேன். ஏழாம் நபரைத் தான் இத்தனை நாளாய் 
தேடிக் கொண்டிருந்தேன்.


ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் ச
ந்தோஷத்தில் அழுகிறேன். இது அழுகை கூட இல்லை.
என் இறைவனுக்கு நான் செலுத்தும் காணிக்கை என்றார்.


நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும்,
ஒரு நாள் கூட நம்மை ஏறெடுத்தும் பார்க்காத நம்ம 
முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என 
மலைத்தபடி நின்றார்.


அடுத்த நாளிலிருந்து, முதலாளியின் மகன் தினமும் 
காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப் பையை 
காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றார்.


காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு 
அவனது தந்தையைப் போலவே, பதில் சொல்லாமலேயே 
தினமும் செல்வார்.


ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடி 
வந்து உணவுப் பையை கையில் கொடுக்கும் போது 
வழக்கம் போல நன்றி சொன்னார் காவலாளி.


அதற்கு அவரிடமிருந்து வழக்கம் போல எந்த பதிலும் 
வரவில்லை.


பொறுமையை இழந்த காவலாளி, மிகவும் உரத்த குரலில்,
நன்றி சொன்னால் பதில் கூற மாட்டீர்களா?”
என வருத்தத்துடன் வினவினார்.


திரும்பிப்பார்த்த அந்த சிறுவர், நீங்கள் என்ன சொன்னீர்கள் 
என்று எனக்கு தெரியாது.


காரணம்:
எனக்கும் என் தந்தையைப் போலவே காது இரண்டும் 
கேட்காது என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் 
போனார்.


நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது,
பார்த்த மாத்திரத்திலேயே அவர்களை தவறாக முடிவெடுத்து 
விடுகிறோம்.


அடுத்தவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள 
உண்மைத் தன்மையை அறியாமல் நாமே ஒரு முடிவுக்கு 
வந்து விடுகிறோம்.


இந்தக் கதையிலிருந்து மூன்று விடயங்களை எடுத்துக் 
கொள்ளலாம்;


ஒன்று: எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அதை 
நம்பி, நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ முடிவெடுக்கக் 
கூடாது.


இரண்டு: 
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான 
போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நமக்கு மட்டும் தான் பிரச்னை.
மற்றவர்களுக்கு இல்லை என நாமே ஒரு முடிவுக்கு வந்து 
விடக் கூடாது.


மூன்று: அவர்களுக்கு வசதியை கொடுத்த இறைவன்,
நமக்கு ஆரோக்கியத்தை அளித்துள்ளான்.


பல விஷயங்களில் நிறைவை தந்த இறைவன்,
சில விஷயங்களில் குறைவை தந்துள்ளான்.
அதன் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான் என மனப்பூர்வமாக 
எண்ணி அவனுக்கு அனுதினமும் நன்றி செலுத்த வேண்டும்
------------
முக நூலில் படித்த கதை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum