Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
உண்மைக் கதைகள்.
Page 1 of 1
உண்மைக் கதைகள்.
கிரேக்க நாட்டுப் பெண்களிலேயே பேரழகியாகப் போற்றப்படுபவள் இளவரசியான அட்லாண்டா என்பவள். கிரேக்கப் புராணங்களின்படி அவள் பெரும் ஆற்றல் பெற்றிருந்தாள் எனக் கூறப்படுகிறது. இவளது தந்தை தனக்கு ஆண் மகன் பிறக்க வேண்டுமென மிகுந்த ஆசையோடிருந்தான். தந்தைக்கு ஏமாற்றத்தைத் தந்து பெண்ணாகப் பிறந்த அட்லாண்டா, பிறந்ததும் மலையிலே கொண்டு சென்று விடப்பட்டாள். அங்கே அவள் பெண் கரடி ஒன்றால் வளர்க்கப் பெற்றாள். காட்டிற்கு வேட்டையாட வந்த சிலர் குழந்தையைக் கண்டு, தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அட்லாண்டா பெரியவளாக வளர்ந்தபின், தனது தந்தையின் அவைக்களத்தை அடைந்தாள். அரசனுக்கு வேறு சந்ததி எதுவும் இல்லாமையால் மீண்டும் ஏற்றுக் கொண்டதுடன் திருமணத் திற்கும் ஏற்பாடு செய்தான்.
அழகில் சிறந்து விளங்கிய அட்லாண்டாவை மணக்கப் பல இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். ஆனால், அட்லாண்டா தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்பவனையே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தாள். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வியடைவோர் தங்கள் உயிரையும் இழக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தாள். அவளது அழகில் மனதைப் பறி கொடுத்த இளைஞர் பலர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள முன்வந்து தோல்வி கண்டு உயிரையும் இழந்தனர்.
கடைசியாக வீனஸ் என்ற பெண் தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவன் அட்லாண்டாவுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தான். போட்டியும் தொடங்கியது. அட்லாண்டாவும் அந்த இளைஞனும் ஓடத் தொடங்கினர். வழக்கம் போலவே அட்லாண்டா முன்னே ஓடிக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் அவளுக்கு முன் ஒரு பொன்னாலான ஆப்பிள் பழம் உருண்டு செல்வதைக் கண்டாள். அப்பொற்கனியைக் கண்ட அட்லாண்டாவுக்கு அதன் மீது ஆசை உண்டாயிற்று. ஓடுவதை நிறுத்திவிட்டுக் கனியைக் குனிந்தெடுத்தாள். அட்லாண்டா கனியை எடுக்கக் குனிந்தபோது இளைஞன் முந்திச் சென்றானாயினும் மறுபடியும் அவளே முந்தி ஓடினாள்.
அட்லாண்டாவின் முன்பு இன்னொரு பொற்கனியும் உருண்டது. அதையும் அவள் எடுத்தாள். பந்தயம் முடியும் தறுவாயில் மீண்டுமொரு கனி உருண்டு வந்தது. அதையும் அவளால் விட மனம் வரவில்லை. ஆனால், மூன்றாவது கனியை எடுக்க அவள் முனைந்த வேளையில் பந்தயம் இறுதிக் கட்டத்தில் இருந்தது. ஆகவே, இளைஞன் முந்தி ஓடிப் பந்தயத்தில் வெற்றி கண்டான். இந்த மூன்று பொற்கனிகளையும் உருட்டி விட்டவன் அந்த இளைஞனே தான். அவை, வீனஸ் பெண் தெய்வத்தால் அவனுக்கு அளிக்கப்பட்டவை. ஓட்டப் பந்தயத்தில் தன்னை வெற்றி கண்ட அட்லாண்டா தனது அறிவிப்பின்படி அந்த இளைஞனையே திருமணம் செய்து கொண்டாள்.
அட்லாண்டா பெரியவளாக வளர்ந்தபின், தனது தந்தையின் அவைக்களத்தை அடைந்தாள். அரசனுக்கு வேறு சந்ததி எதுவும் இல்லாமையால் மீண்டும் ஏற்றுக் கொண்டதுடன் திருமணத் திற்கும் ஏற்பாடு செய்தான்.
அழகில் சிறந்து விளங்கிய அட்லாண்டாவை மணக்கப் பல இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். ஆனால், அட்லாண்டா தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்பவனையே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தாள். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வியடைவோர் தங்கள் உயிரையும் இழக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தாள். அவளது அழகில் மனதைப் பறி கொடுத்த இளைஞர் பலர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள முன்வந்து தோல்வி கண்டு உயிரையும் இழந்தனர்.
கடைசியாக வீனஸ் என்ற பெண் தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவன் அட்லாண்டாவுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தான். போட்டியும் தொடங்கியது. அட்லாண்டாவும் அந்த இளைஞனும் ஓடத் தொடங்கினர். வழக்கம் போலவே அட்லாண்டா முன்னே ஓடிக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் அவளுக்கு முன் ஒரு பொன்னாலான ஆப்பிள் பழம் உருண்டு செல்வதைக் கண்டாள். அப்பொற்கனியைக் கண்ட அட்லாண்டாவுக்கு அதன் மீது ஆசை உண்டாயிற்று. ஓடுவதை நிறுத்திவிட்டுக் கனியைக் குனிந்தெடுத்தாள். அட்லாண்டா கனியை எடுக்கக் குனிந்தபோது இளைஞன் முந்திச் சென்றானாயினும் மறுபடியும் அவளே முந்தி ஓடினாள்.
அட்லாண்டாவின் முன்பு இன்னொரு பொற்கனியும் உருண்டது. அதையும் அவள் எடுத்தாள். பந்தயம் முடியும் தறுவாயில் மீண்டுமொரு கனி உருண்டு வந்தது. அதையும் அவளால் விட மனம் வரவில்லை. ஆனால், மூன்றாவது கனியை எடுக்க அவள் முனைந்த வேளையில் பந்தயம் இறுதிக் கட்டத்தில் இருந்தது. ஆகவே, இளைஞன் முந்தி ஓடிப் பந்தயத்தில் வெற்றி கண்டான். இந்த மூன்று பொற்கனிகளையும் உருட்டி விட்டவன் அந்த இளைஞனே தான். அவை, வீனஸ் பெண் தெய்வத்தால் அவனுக்கு அளிக்கப்பட்டவை. ஓட்டப் பந்தயத்தில் தன்னை வெற்றி கண்ட அட்லாண்டா தனது அறிவிப்பின்படி அந்த இளைஞனையே திருமணம் செய்து கொண்டாள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உண்மைக் கதைகள்.
நம்பிக்கையின் மறுபெயர்!
அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண் டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் "கிரானிக்ஸ்' நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் "அலெக்சாண்டரியா' என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர்.
எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து
போரிட்டது... தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது... ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.
அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண் டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் "கிரானிக்ஸ்' நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் "அலெக்சாண்டரியா' என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர்.
எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து
போரிட்டது... தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது... ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை!!!
» உண்மைக் காதல் – ஓ ஹென்றி
» மனதைத் தொட்ட உண்மைக் கதை
» பேஸ்புக் - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி
» ஓஷோ கதைகள்
» உண்மைக் காதல் – ஓ ஹென்றி
» மனதைத் தொட்ட உண்மைக் கதை
» பேஸ்புக் - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி
» ஓஷோ கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|