சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது  மதவெறிக் காட்டும் நிலை  Khan11

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை

2 posters

Go down

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது  மதவெறிக் காட்டும் நிலை  Empty அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 1:11

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது  மதவெறிக் காட்டும் நிலை  Sswamy
அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை !

தனது ஓட்டே தனக்கு போடமுடியாத இந்த அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை பாரீர்!


மும்பையிலிருந்து வெளிவரும் DNA என்ற ஆங்கில நாளிதழில் ஜூலை 16 அன்று ஜனதா கட்சி தலைவர் (அரசியல் கோமாளி) சுப்ரமண்யன் சுவாமி அவர்கள் எழுதியுள்ள "இஸ்லாமிய பயங்கரவாதத்தை துடைத்தெறிவது எப்படி: ஓர் ஆய்வு" என்ற கட்டுரையில் இந்திய தேசத்தில் நிலவும் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் விஷத்தை மை போல ஊற்றி எழுதியுள்ளார்.

ஜூலை 13 அன்று மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் மத பேதமின்றி அப்பாவி மக்கள் பலரை பலி கொடுத்து, காயமடைந்தோரின் ரணங்களும், இச்செய்தியால் நாட்டில் அமைதியை விரும்பும் மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களும் ஆறுவதற்குள், இந்திய முஸ்லிம்களை தன்னுடைய எழுத்தின் மூலம் காயப்படுத்தி இருக்கிறார் உடலே விஷமாய் நடமாடும் கோமாளி, சுப்ரமண்யன் சுவாமி.

ஜூலை 13-இல் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு இந்தியாவில் வாழும் இந்துக்களிடம் தீர்க்கமான முடிவை எதிர் பார்க்கிறது என்றே தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். "ஹலால் நாகரீகத்தின் மூலம் அன்றாடம் இரத்தம் சிந்தி இறுதியில் நாடு அழிவுக்குள்ளாகும் நிலையை இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாதம் என்பது என்னுடைய பார்வையில் தான் விரும்பியதை செய்யவோ, செய்யாமல் இருக்கவோ பொதுமக்களை சட்ட விரோதமாக அச்சுறுத்தி அடிபணியச் செய்வதாகும்" என்று தொடர்கிறார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் தேசத்தின் பாதுகாப்புக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இதைப்பற்றி 2012-க்குப் பிறகு சந்தேகப்படத் தேவையில்லை. அதற்குள், பாகிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மேலோங்கும். ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிடும். பிறகு, இதுநாள் வரை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தன்னுடைய பணியை முடிக்க இஸ்லாம் ஹிந்துயிசத்தோடு மோதும். ஒசாமாவின் பணியை தற்போது கையிலெடுத்திருக்கும் அல்-காயிதாவின் தலைவர் தன்னுடைய முதன்மையான எதிரியாக இந்தியாவைக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவை அல்ல.

இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பால் வெற்றி கொள்ளவேண்டிய பகுதியாகத்தான் முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். வெற்றி கொள்ளப்பட்ட மற்ற நாடுகள் எல்லாம் 20 ஆண்டுகளுக்குள் 100% முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. 800 ஆண்டுகள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகும் 1947-இல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்தபோது 75% இந்துக்கள் இருந்தனர். இதனை மத வெறியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரு விதத்தில், இந்துக்களை குறி வைப்பதால் முஸ்லிம்களை நான் குறை காணவில்லை. இந்துக்களை தான் குறை கூறுவேன். ஏனென்றால் அவர்கள் சனாதான தர்மம் அனுமதித்துள்ள தன்னுடைய தனித் தன்மையை அவர்கள் இழந்துவிட்டார்கள். அரசின் பங்களிப்பின்றி, முழுவதும் தன்னார்வ ஏற்பாட்டில் லட்சக் கணக்கான இந்துக்கள் கும்ப மேலாவிற்காக ஒன்று கூட முடிகிறது. ஆனால் ஒன்றுமறியா இந்துக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் செயல்கள் கஷ்மீர், மாவ, மேல்விஷாரம், மலப்புரம் போன்ற பகுதிகளில் நடக்கின்றன. இதற்கெதிராக இந்துக்களை ஒன்று கூட்ட தன்னுடைய சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை. பாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஜாதியையும், மொழியையும் உயர்த்திப் பிடித்து ஓட்டளித்தால் உண்மையான இந்துக்களின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று சட்ட, நாடாளு மன்றங்களில் ஆட்சியை பிடிக்கும்.

...விஷக் கருத்துக்கள் இப்படியே நீளுகிறது. இது போன்ற விஷம் கக்கும் நஞ்சு வியாபாரிகளை மத பேதமின்றி இந்தியர்களும், சர்வதேச சமூகமும் புறக்கணிக்க வேண்டும்.

சுப்பிரமணியம் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வரும் டெல்லி பாதுகாப்பு காலனி காவல் நிலையமும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து விரைவில் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியம் சுவாமியை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே இது போன்ற கலவரத்தை தூண்டும் செயல்களை தடுத்து நிறுத்த முடியும்.

நன்றி .
http://pficovai.blogspot.com/2011/08/blog-post_03.html
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது  மதவெறிக் காட்டும் நிலை  Empty Re: அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை

Post by jasmin Thu 4 Aug 2011 - 3:55

இவர்களைப் போன்றவர்களை உடனே மதகலவரத்தை தூண்டும் சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» தனது நாக்கை மடித்து வித்தை காட்டும் ஹரிபொட்டர் கதாநாயகன்!
» நேபாளத்தில் மீண்டும் அரசியல் தேக்க நிலை
» நோக்கியா தனது நீண்டகால இடத்தினை இழந்தது : சந்தையில் காணாமல் போகும் பரிதாப நிலை..
» பாகிஸ்தானில் அரசியல் நிலை: கருத்து கூற பிரணாப் முகர்ஜி மறுப்பு
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum