சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Today at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம் Khan11

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்

Go down

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம் Empty கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 6:18


முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் இரு மாநிலங்களிடையே 13 வழிகளும் தடைப்படும் ஆபத்து
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழக கேரள எல்லையான குமுளியை நோக்கி 2வது நாளாக நேற்று முன்தினம் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்றனர். அவர்கள் கேரளாவுக்கு செல்லும் 13 வழிச்சாலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ள சூழ்நிலையில், கேரள மாநிலம் குமுளியில் தமிழர்கள் தாக்கப் பட்டதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 5ந் திகதி முதல் தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லைப் பகுதியான கம்பம், கூடலூர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

கம்பம் நகர் மற்றும் கூடலூர் நகர்ப்பகுதிகளில் கடை அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், ஆட்டோ, கார், வேன், ஓட்டுனர்கள் சங்கம் உட் பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதி மக்கள் 25 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் குமுளி எல்லையை நோக்கி பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் 2வது நாளாக கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் கேரள எல்லையான குமுளியை நோக்கி பேரணி நடத்தினர்.

இதற்காக ஆங்கூர் பாளையம், காமய கவுண்டன்பட்டி, சுருளிப் பட்டி, அணைப்பட்டி, நாராயணதேவன்பட்டி, குச்சனூர், கூளையனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு, கூடலூர் பகுதி திராட்சை தோட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் அந்தந்த பகுதிகளில் திரண்டனர். ஆயிரக்கணக் கான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அவர்கள் குமுளியை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பிரமாண்ட பேரணி காரணமாக குமுளி சாலை மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது.

அவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக அதிகாலையிலேயே கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு தேனி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பிரவீண் குமார் அபினபு தலைமையில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

பேரணியாக சென்றவர்களை பொலிஸார் கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் கட்டுக் கடங்காத அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டதால் அவர்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் பொலிஸாரை மீறி முன்னேறி சென்று கொண்டே இருந்தனர். கூடலூர் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே தடுப்பு பகுதியில் பொலிஸார் அவர்களை தடுத்தனர்.

காலை 10 மணியளவில் ஆலமரம் பகுதிக்கு வந்த பொதுமக்களை வழிமறித்து அவர்கள் மத்தியில் தேனி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பிரவீண்குமார் பேசினார். அவர் கூறும்போது, 'உங்க ளுக்காக நாங்கள் இருக்கிறோம். காவல் துறை துணையாக இருக்கிறது. நீங்கள் அமைதியாக திரும்பி செல்லவேண்டும்' என்றார். ஆனால் ஆவேசமாக வந்த மக்கள் குமுளி வரை சென்று போராட்டம் நடத்தவேண்டும். கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் கே. எஸ். பழனிச்சாமி அங்கு விரைந்து வந்தார். அவர் கிராம மக்கள் மத்தியில் பேசும்போது, 'உங்கள் உணர்வுகளை அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். கேரள மாநிலத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே நேற்று நீங்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டீர்கள்.

இன்று (நேற்று) நீங்கள் தடையை மீறி வருவது சட்டம் ஒழுங்கை பாதிக்கும். நேற்றைய விட இன்று பெண்கள் அதிகமாக வந்து உள்Zர்கள். இது உங்களின் தார்மீக உரிமையை காட்டுகிறது.

உங்கள் போராட்டம் வன்முறையாக மாறிவிடக்கூடாது. எனவே அமைதியாக திரும்பி செல்லுங்கள் என்றார். ஆனால் அதை கிராம மக்கள் ஏற்க மறுத்து குமுளி வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களை லோயர்கேம்ப் வரை மட்டும் செல்ல கலெக்டர் அனுமதி அளித்தார்.

அதன்பிறகு கிராம மக்கள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி குமுளிளை நோக்கி பேரணியாக சென்றனர். பகல் 12 மணிக்கு லோயர்கேம்ப் பகுதியை அவர்கள் அடைந்தனர். அங்கு ஏற்கனவே தடுப்பு அமைக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்ததால் கிராம மக்களால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை.

அங்கு கூடிய அவர்கள் கேரள மாநிலம் செல்லும் 13 சாலைகளையும் மூட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுபாப்பு வழங்கவேண்டும். அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து கிராம மக்கள் குமுளி வரை சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் மற்றும் பொலிஸ் சூப்பிரண்டுவிடம் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களை குமுளி எல்லை வரை செல்ல பொலிஸார் அனுமதித்தனர். உடனே மக்கள் மோட்டார் சைக்கிள்கள் டிராக்டர்களிலும் மற்றும் நடந்தும் குமுளி நோக்கி சென்றனர்.

அவர்கள் மதியம் 2. 45 மணியளவில் குமுளி எல்லைக்கு சென்று சேர்ந்தனர். அங்கு அவர்கள் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள், மினி லாறிகள் மற்றும் நடந்து சுமார் 1 இலட்சம் பேர் திரண்டு வந்ததாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு
» அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு
» கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்: எரிமலையின் சாயல்! மக்கள் பதற்றம்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு- லீஸ் வலைவீச்சு
» தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum