சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு Khan11

மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு

Go down

மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு Empty மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Mar 2012 - 12:09

ஈராக்கில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுகளை கண்டிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கட்டிடத்தில் ஒரு தனியான அறையில் நடைபெற்ற கலந்துரையாடல் இலங்கைக்கு சாதகமான கருத்துக்களை வலியுறுத்துவதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது.

இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த நம் நாட்டு சட்டத்தரணிகளும், ஊடகவியலாளர்களும் அமெரிக்காவின் இந்த மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டுவந்துள்ள பிரேரணையை வாபஸ் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.

ஈராக்கில் அமெரிக்கா கடந்த 9 ஆண்டுகளாக புரிந்துவரும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கட்டிடத்தில் உள்ள இன்னுமொரு அறையில் நடைபெற்ற கலந்துரை யாடலுக்கு ஈராக்கைச் சேர்ந்த வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு ஹசன் தலைமை தாங்கினார். உண்மையிலேயே இன்று நாம் வேதனைப்பட வேண்டிய தினம். இன்றுடன் அமெரிக்கா ஈராக்கில் கால்பதித்து 9 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க படைகள் ஈராக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துள்ளது.

அமெரிக்கா விரைவில் ஈராக்கில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறும் என்று கூறினாலும் இப்போதும் 45ஆயிரம் அமெரிக்க படையினர் சிவில் உடையில் ஈராக்கிய மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் ஒரு லட்சம் அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் இருப்பதுடன் அங்கு பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு அளிப்பதற்காக 15ஆயிரம் கூலிப் படைகளையும் அமெரிக்கா வைத்திருக்கிறது.

ஈராக்கில் யுத்தக் குற்றச்சாட்டுகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட சகல அமெரிக்கர்களும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உட்பட அனைவருமே சட்டபூர்வமான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ஈராக்கில் பூர்வீக குலங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வன்முறை களையும் குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, ஈராக்கில் தங்கள் உத்தரவு படி தலையாட்டும் துரோகிகளை அதிகாரப்பீடத்தில் அமர்த்தி, தனது விருப்பப்படி கொடுங்கோல் ஆட்சியை செய்து வருகின்றது.

அமெரிக்கா இப்போது பாதுகாப்பு நிறுவனங்கள் என்ற பெயரில் ஈராக்கில் சுமார் 5,000 வரையிலான கூலிப்படைகளை சேவையில் அமர்த்தியுள்ளது. இவர்களே கார் குண்டுகளை வெடிக்கச் செய்து ஈராக்கில் மனித படுகொலைகளை செய்து வருகிறார்கள். ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா வெளியேறி, அந்நாட்டில் மீண்டும் அமைதியையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்கா தான் செய்யும் மனித படுகொலைகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை தவாறாக பார்ப்பதில்லை. ஆயினும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் நாட்டை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக மனிதாபிமான யுத்தத்தை நடத்தும் போது, அதனை பெரிதுபடுத்தி வேண்டுமென்றே எங்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் போன்ற அழுத்தங்களை கொண்டுவருவது கண்டனத்திற்குரியது என்று இலங்கை தூதுக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியும், சட்ட மேதையுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களும், சிறுபான்மை தமிழர் மற்றும் முஸ்லிம்களும் சுமார் 500 ஆண்டுகள் வெளிநாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு கஸ்டப்பட்டு வந்தார்கள். இப்போது சுதந்திர இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டு மக்கள் மீண்டும் சுதந்திரக்காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இலங்கை அரசாங்கம் இப்போது அபிவிருத்திப் பணிகளையும், புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வரும் இவ்வேளையில் அமெரிக்கா உள் விவகாரங்களில் தலையிடுவது தவறு என சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவே உலக சமாதானத்திற்கு எதிராக செயற்படும் முன்னணி நாடாக இருக்கிறதென்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கில் யுத்தத்தை ஆரம்பித்த ஒரு போர்க் குற்றவாளி. அவரும் ஏனையோரும் தண்டிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா போன்ற நாடுகள் ஈராக்கிலும் உலகில் பல நாடுகளில் செய்யும் மனித உரிமை யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு தனியான சர்வதேச நீதிமன்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச செய்திப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் அமீர் இஸடீன் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க கூலிப் படையினர் ஈராக்கில் மனிதப் படுகொலை செய்து வருகின்றார்கள். அவர்கள் எப்போதாவது கைது செய்யப்படும் போது அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்து அவர்களுக்கு ராஜதந்திரிகளுக்கான முன் உரிமை இருக்கிறதென்று கூறி அவர்களை யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

இலங்கையில் இவ்விதம் அமெரிக்காவும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் தலையீடு செய்வதற்கு பிரதான காரணம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஜனநாயக சுதந்திரம் சரியான முறையில் அமுலாக்கப்படாமல் இருப்பதே என்று லக்பிம நிவ்ஸ் ஆங்கில வார பத்திரிகையின் ஆசிரியர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வல்லரசுகள் செய்யும் யுத்தக் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்து, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது இவ்வாறான குற்றங்களை சுமத்துவது நியாயமல்ல என்றும் இந்த முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டுமென்று ஜே.எல்.ஜி. ராடோ என்ற லத்தீன் அமெரிக்காவின் பிரதிநிதி கூறினார்.

தினகரன் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்,

30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் இலங்கை மக்கள் அனைவரும் குறிப்பாக, சிறுபான்மை மக்களான தமிழர்களும், முஸ்லிம்களும் நிம்மதியாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை இப்போது துரித கதியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அத்துடன் நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் சிறப்பாக இடம்பெற்று வருவதனால் மக்களின் வாழ்க்கை வளம்பெற ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் இது போன்ற பிரேரணை இலங்கைக்கு எதிராக கொண்டுவந்திருப்பது கண்டனத்திற்குரியது.

இந்த கடைசி நேரத்திலாவது அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நேற்று இலங்கை தூதுக்குழுவை சேர்ந்த அமைச்சர்களும், பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் தூதுக்குழுவினருடன் இலங்கையின் உண்மை நிலையை எடுத்துக்கூறினர்.


மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum