Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .
3 posters
Page 1 of 1
மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .
மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .
எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி
ஆகும். அவரைக்காய், பச்சைப்பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.
100 கிராம் பச்சைப்பட்டாணி மூலம்103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணி மூலம் 365 கலோரி வெப்பமும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
மேற்கண்ட அளவு சக்தியைத் தரும் பச்சைப்பட்டாணியில் புரதமும், மாவுச்சத்தும் எல்லாவிதமான இறைச்சிகளுக்கும் இணையாக இருக்கிறது.
சுறுசுறுப்பாய் வாழ. . .
இறைச்சி உணவு சாப்பிட்டால் விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படும். அதற்கு
மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்.
மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’,
வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு,
உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான
தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.
பச்சைப்பட்டாணியைச் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். சுண்டலாகவோ
முட்டைக்கோஸுடன் சேர்த்துப் பொரியல், கூட்டு என்று சமைத்தோ சாப்பிட்டால்
உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமும் விருத்தியாகும்.
இதயம் பலம் பெறும்!
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி.
எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன்
சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள்.
கடலைப்பருப்புடன் பச்சைப்பட்டாணியைச் சமைத்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, துவரம்பருப்புடன் சேர்த்தே சமையுங்கள்.
சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும்
தண்ணீரில் ஊறப்போடடு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த
பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சை
பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே
கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில்
அரைப்பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம்
பயன்படுத்துங்கள்.
சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று
தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்!
ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான
பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும்
பலமடங்கு அதிகரிக்கும்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100
கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் வரைவில்
குணமடைவார்கள். காரணம், இதில் உள்ள பாஸ்பரஸ்தான்.
100 கிராம்
பச்சைப்ட்டாணியில் 14.4 கிராம் மாவுச்சத்தும், 6.3 கிராம் புரதமும், 0.4
கிராம் கொழுப்பும், 2.0 கிராம் நார்ச்சத்தும், 27 மில்லி கிராம் வைட்டமின்
‘சி’யும், 2.9 மில்லிகிராம் நியாஸினும் 140 மைக்ரோ மில்லி கிராம்
ரிபோபிலவினும், 350 மைக்ரோ மில்லி கிராம் தயாமினும், 640 சர்வதேச அலகு
வைட்டமின் ‘ஏ’யும் உள்ளன.
கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது.
உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை
உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய்
நாற்றமும் அகன்றுவிடுகிறது.
நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற
‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும்
வலிமைப்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைந்தால் இதயத்துடிப்பு, நரம்புத்
தளர்ச்சி, தூக்கமின்மை, உடல் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகும். இவை
குணமாகவும் வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான
உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு
பயன்படுகிறது.
எனவே, ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில்
சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓட்டல்காரர்கள் தங்கள் சாப்பாட்டில்
பரிமாறப்படும் காய்கறி வகைகளுள் சிறிதளவு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துத்
சமைத்தால் வியாபாரம் பெருகும். மிகவும் ருசியான பச்சைப் பட்டாணியைச்
சாப்பிடத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
வீட்டிலும்
தினசரி பச்சைப் பட்டாணியை மற்ற காய்கறிகளுடன் சிறிதளவு சேர்த்துச்
சமைத்தால், மற்ற காய்கறிகளையும குறைவாகப் பயன்படுத்தலாம்.
பச்சைப்பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும்
தெற்கு ஐரோப்பாவும் ஆகும். காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த இத்தாவரம்
குளிர்காலத்தில் மட்டுமே வளரும். கி.மு. 2000ஆம் ஆண்டிலேயே சீனர்கள்
பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப்
பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.
இன்று 1300 இனங்கள் இதில் உள்ளன. வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும்
வகையே புகழ்பேற்றது. இதுவே பச்சைப் பட்டாணி! தோட்டப் பட்டாணி என்றும்
இதற்குப் பெயர் உண்டு. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், பிஸும் ஸாடிவம்
என்பதாகும்.
500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் நன்கு பயன்படுத்திய
பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது. இதன் கொடிகள்
ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு.
இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட
நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப்
பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு
மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி
ஆகும். அவரைக்காய், பச்சைப்பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.
100 கிராம் பச்சைப்பட்டாணி மூலம்103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணி மூலம் 365 கலோரி வெப்பமும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
மேற்கண்ட அளவு சக்தியைத் தரும் பச்சைப்பட்டாணியில் புரதமும், மாவுச்சத்தும் எல்லாவிதமான இறைச்சிகளுக்கும் இணையாக இருக்கிறது.
சுறுசுறுப்பாய் வாழ. . .
இறைச்சி உணவு சாப்பிட்டால் விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படும். அதற்கு
மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்.
மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’,
வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு,
உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான
தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.
பச்சைப்பட்டாணியைச் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். சுண்டலாகவோ
முட்டைக்கோஸுடன் சேர்த்துப் பொரியல், கூட்டு என்று சமைத்தோ சாப்பிட்டால்
உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமும் விருத்தியாகும்.
இதயம் பலம் பெறும்!
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி.
எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன்
சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள்.
கடலைப்பருப்புடன் பச்சைப்பட்டாணியைச் சமைத்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, துவரம்பருப்புடன் சேர்த்தே சமையுங்கள்.
சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும்
தண்ணீரில் ஊறப்போடடு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த
பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சை
பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே
கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில்
அரைப்பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம்
பயன்படுத்துங்கள்.
சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று
தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்!
ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான
பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும்
பலமடங்கு அதிகரிக்கும்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100
கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் வரைவில்
குணமடைவார்கள். காரணம், இதில் உள்ள பாஸ்பரஸ்தான்.
100 கிராம்
பச்சைப்ட்டாணியில் 14.4 கிராம் மாவுச்சத்தும், 6.3 கிராம் புரதமும், 0.4
கிராம் கொழுப்பும், 2.0 கிராம் நார்ச்சத்தும், 27 மில்லி கிராம் வைட்டமின்
‘சி’யும், 2.9 மில்லிகிராம் நியாஸினும் 140 மைக்ரோ மில்லி கிராம்
ரிபோபிலவினும், 350 மைக்ரோ மில்லி கிராம் தயாமினும், 640 சர்வதேச அலகு
வைட்டமின் ‘ஏ’யும் உள்ளன.
கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது.
உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை
உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய்
நாற்றமும் அகன்றுவிடுகிறது.
நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற
‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும்
வலிமைப்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைந்தால் இதயத்துடிப்பு, நரம்புத்
தளர்ச்சி, தூக்கமின்மை, உடல் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகும். இவை
குணமாகவும் வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான
உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு
பயன்படுகிறது.
எனவே, ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில்
சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓட்டல்காரர்கள் தங்கள் சாப்பாட்டில்
பரிமாறப்படும் காய்கறி வகைகளுள் சிறிதளவு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துத்
சமைத்தால் வியாபாரம் பெருகும். மிகவும் ருசியான பச்சைப் பட்டாணியைச்
சாப்பிடத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
வீட்டிலும்
தினசரி பச்சைப் பட்டாணியை மற்ற காய்கறிகளுடன் சிறிதளவு சேர்த்துச்
சமைத்தால், மற்ற காய்கறிகளையும குறைவாகப் பயன்படுத்தலாம்.
பச்சைப்பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும்
தெற்கு ஐரோப்பாவும் ஆகும். காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த இத்தாவரம்
குளிர்காலத்தில் மட்டுமே வளரும். கி.மு. 2000ஆம் ஆண்டிலேயே சீனர்கள்
பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப்
பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.
இன்று 1300 இனங்கள் இதில் உள்ளன. வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும்
வகையே புகழ்பேற்றது. இதுவே பச்சைப் பட்டாணி! தோட்டப் பட்டாணி என்றும்
இதற்குப் பெயர் உண்டு. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், பிஸும் ஸாடிவம்
என்பதாகும்.
500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் நன்கு பயன்படுத்திய
பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது. இதன் கொடிகள்
ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு.
இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட
நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப்
பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு
மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|