Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ஏட்டுச் சுரைக்காய்
4 posters
Page 1 of 1
ஏட்டுச் சுரைக்காய்
பிரவீன் எட்டாம் வகுப்பு படிப்பவன். அவனது பாடசாலையில், கட்டுரைப்போட்டி நடைபெற இருப்பதாக, அவனது வகுப்பு ஆசிரியர் கூறினார். வகுப்பில் பல மாணவர்கள் கட்டுரைப் போட்டியில், கலந்து கொள்ளப் போவதாகக் கூறினர். பிரவீனும், போட்டியில் கலந்துகொள்ள விரும்பி பெயரைக் கொடுத்தான். போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தாலும், அவனுக்கு உள்ளூர, சிறு அச்சம் இருந்தது. காரணம், அவன் ஏழை மாணவன். அவன் தந்தை விவசாயி. அவர் மகனை சுற்றுலா எதற்கும் அழைத்துச் சென்றது இல்லை.
ஆனால், அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களோ, செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், அவர்கள் தங்கள் வீடுகளில், கணனியும், இணைய வசதியும் இருப்பதாகக் கூறினர். மேலும், இணையத்தில் பெற முடியாத தகவல்களே இல்லையென்றும், சொன்னார்கள். அதைக் கேட்ட பிரவீனுக்கோ, தனது நிலையைப் பற்றி வருத்தம் தான் ஏற்பட்டது.
மாலையில் வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் பாடசாலையில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியைப் பற்றி சொன்னான். கூடவே, “அப்பா! என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலரும் இணையத்திலிருந்து, பல தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார்கள். நம் வீட்டிலும் கணனியும், இணைய வசதியும் இருந்தால் நானும், தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவேன். இப்போது என்னால் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினான்.
அதைக் கேட்ட பிரவீனின் தந்தையோ, “நம் வசதிக்கு, கணனி வாங்கும் நிலையிலா இருக்கிறோம்? நம் கிராமத்தின் அருகிலேயே அழகான அருவி இருக்கிறதே, நாமும்தான் ஓரிருமுறை அந்த அருவிக்குச் சென்று நீராடியிருக்கிறோம். அருவியின் அருகிலேயே உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். நீ அந்த அருவிக்குச் சென்று வந்த உனது அனுபவத்தை சுவைபட கட்டுரையில் எழுது!” என்று சொன்னார்.
தந்தை கூறியதைக் கேட்ட பிரவீனுக்கு தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தம் இருந்தாலும், ஏதோ பெயரளவிற்கு தன் கிராமத்தின் அருகிலிருக்கும் அருவிக்குச் சென்று வந்தது பற்றி நினைவூட்டி தகவல்களைச் சேரித்து எழுதிப் படித்துக் கொண்டான். சில நாட்கள் கடந்தன.
பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பிரவீன் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவனிடம் தாங்கள் லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்களைப் பற்றி எழுதியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டனர். மறுவாரமே பாடசாலையின் ஆண்டு விழாவும் வந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்க காத்திருந்தனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதாக பிரவீனின் பெயரைக் கூறினார் மாவட்ட கல்வி அதிகாரி.
அவனால், தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“பிரவீன் எழுதிய கட்டுரை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அனுபவ அறிவாக அமைந்திருந்தது. மேலும், இயற்கை அழகு, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. நம்முடைய ஊரைப் பற்றிய செய்தியை அவன் எழுதியிருந்ததும் ஒரு முக்கியமானதாக கருதப்பட்டது. எனவே தான், அக் கட்டுரை முதல் பரிசுக்குரிய தகுதி பெற்றிருக்கிறது” என்று பிரவீனை பாராட்டி பெருமையோடு கூறினார்.
பிரவீன் பரிசு பெறும்போது, அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். மாலை வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் தான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதைக் கூறி, அதற்கு வழிகாட்டிய தந்தைக்கு, நன்றியையும் கூறினான்.
மகனே, “திறமைக்கும், அறிவுக்கும் ஏழ்மை ஒருபோதும் தடையாகாது. அறிவும், அனுபவமும் ஒன்று சேரும் போது, வெற்றியும், புகழும் தானாகவே, நம்மை வந்தடையும்!” என்று கூறினார். வெறும் ஏட்டுச் சுரைக்காயை விட அனுபவ அறிவே சிறந்தது என்று பிரவீன் புரிந்து கொண்டான்.
தினகரன்
ஆனால், அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களோ, செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், அவர்கள் தங்கள் வீடுகளில், கணனியும், இணைய வசதியும் இருப்பதாகக் கூறினர். மேலும், இணையத்தில் பெற முடியாத தகவல்களே இல்லையென்றும், சொன்னார்கள். அதைக் கேட்ட பிரவீனுக்கோ, தனது நிலையைப் பற்றி வருத்தம் தான் ஏற்பட்டது.
மாலையில் வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் பாடசாலையில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியைப் பற்றி சொன்னான். கூடவே, “அப்பா! என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலரும் இணையத்திலிருந்து, பல தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார்கள். நம் வீட்டிலும் கணனியும், இணைய வசதியும் இருந்தால் நானும், தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவேன். இப்போது என்னால் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினான்.
அதைக் கேட்ட பிரவீனின் தந்தையோ, “நம் வசதிக்கு, கணனி வாங்கும் நிலையிலா இருக்கிறோம்? நம் கிராமத்தின் அருகிலேயே அழகான அருவி இருக்கிறதே, நாமும்தான் ஓரிருமுறை அந்த அருவிக்குச் சென்று நீராடியிருக்கிறோம். அருவியின் அருகிலேயே உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். நீ அந்த அருவிக்குச் சென்று வந்த உனது அனுபவத்தை சுவைபட கட்டுரையில் எழுது!” என்று சொன்னார்.
தந்தை கூறியதைக் கேட்ட பிரவீனுக்கு தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தம் இருந்தாலும், ஏதோ பெயரளவிற்கு தன் கிராமத்தின் அருகிலிருக்கும் அருவிக்குச் சென்று வந்தது பற்றி நினைவூட்டி தகவல்களைச் சேரித்து எழுதிப் படித்துக் கொண்டான். சில நாட்கள் கடந்தன.
பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பிரவீன் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவனிடம் தாங்கள் லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்களைப் பற்றி எழுதியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டனர். மறுவாரமே பாடசாலையின் ஆண்டு விழாவும் வந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்க காத்திருந்தனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதாக பிரவீனின் பெயரைக் கூறினார் மாவட்ட கல்வி அதிகாரி.
அவனால், தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“பிரவீன் எழுதிய கட்டுரை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அனுபவ அறிவாக அமைந்திருந்தது. மேலும், இயற்கை அழகு, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. நம்முடைய ஊரைப் பற்றிய செய்தியை அவன் எழுதியிருந்ததும் ஒரு முக்கியமானதாக கருதப்பட்டது. எனவே தான், அக் கட்டுரை முதல் பரிசுக்குரிய தகுதி பெற்றிருக்கிறது” என்று பிரவீனை பாராட்டி பெருமையோடு கூறினார்.
பிரவீன் பரிசு பெறும்போது, அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். மாலை வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் தான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதைக் கூறி, அதற்கு வழிகாட்டிய தந்தைக்கு, நன்றியையும் கூறினான்.
மகனே, “திறமைக்கும், அறிவுக்கும் ஏழ்மை ஒருபோதும் தடையாகாது. அறிவும், அனுபவமும் ஒன்று சேரும் போது, வெற்றியும், புகழும் தானாகவே, நம்மை வந்தடையும்!” என்று கூறினார். வெறும் ஏட்டுச் சுரைக்காயை விட அனுபவ அறிவே சிறந்தது என்று பிரவீன் புரிந்து கொண்டான்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏட்டுச் சுரைக்காய்
:”@:Muthumohamed wrote:அருமையான கதை
பகிர்வுக்கு நன்றி நண்பன் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏட்டுச் சுரைக்காய்
நண்பன் wrote::”@:Muthumohamed wrote:அருமையான கதை
பகிர்வுக்கு நன்றி நண்பன் அண்ணா
@. @. @.
Similar topics
» சுரைக்காய் பக்கோடா
» சுரைக்காய் அல்வா
» ஏட்டு சுரைக்காய்!
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் அல்வா
» ஏட்டு சுரைக்காய்!
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|