Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
ஒரு நா(தா)யின் கண்ணீர்...!
4 posters
Page 1 of 1
ஒரு நா(தா)யின் கண்ணீர்...!
ஒரு நா(தா)யின் கண்ணீர்...!
மத்திய தர வகுப்பினர் அதிகம்
வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில்
உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாகக் குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை
விரட்டுவது, புதிதாக வருபவர்களைப் பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு
உரிய எந்தக் குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.
தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான
உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டுச் சாதுவாக படுத்துக்கொண்டு
இருக்கும். இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளைப்
போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள். தெரு நாய்க்குட்டிகள்
என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாகக்
காணப்பட்டன. அந்தக் குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து,
மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ்
மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளைக்
கொடுத்தார்.
தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும்,
சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது
வீட்டில் இருந்த குடையைக் கொண்டுவந்து நாய்க்குட்டிகள் மீது வெயில்
படாதவாறு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த
சாக்குகளைக் கொண்டு போய் விரிப்பாகவும் விரித்து வைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.
அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை, ஒரு நாள் காலை தனது
குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு
திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும்
காணவில்லை. கொண்டுவந்த சாப்பாடைக் கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளைக்
கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத்
தோண்டத்தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு
இடுக்குவிடாமல் குட்டிகளைத் தேடித்தேடி ஒடியது, ஊழையிட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்க்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக
ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார். கொஞ்ச
நேரத்தில் நாய்க் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய்
நாய் இல்லாத சமயமாகப் பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய்
இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு
நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துக் கிடந்தன. ஆனாலும்
தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.
சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு
"சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து
ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன
இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து
கொண்டு இருக்கிறது எனத்தெரியாது. ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது
மட்டும் புரிந்தது. எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே
பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.
என்ன
ஒரு ஆச்சர்யம் இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர்
வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டுப்
போய்விட்டார். தாயைப் பார்த்த சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம்,
குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம்.
தங்களது சந்தோஷத்தைச் சத்தமாக குரைத்து பகிர்ந்துகொள்ள, மீண்டும் இந்தச்
சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி சுரேஷ்க்கு மனம்
முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம். இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற
சந்தோஷம். தாய் நாயின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. நீண்ட நாள்
பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும்
வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.
மத்திய தர வகுப்பினர் அதிகம்
வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில்
உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாகக் குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை
விரட்டுவது, புதிதாக வருபவர்களைப் பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு
உரிய எந்தக் குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.
தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான
உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டுச் சாதுவாக படுத்துக்கொண்டு
இருக்கும். இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளைப்
போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள். தெரு நாய்க்குட்டிகள்
என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாகக்
காணப்பட்டன. அந்தக் குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து,
மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ்
மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளைக்
கொடுத்தார்.
தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும்,
சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது
வீட்டில் இருந்த குடையைக் கொண்டுவந்து நாய்க்குட்டிகள் மீது வெயில்
படாதவாறு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த
சாக்குகளைக் கொண்டு போய் விரிப்பாகவும் விரித்து வைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.
அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை, ஒரு நாள் காலை தனது
குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு
திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும்
காணவில்லை. கொண்டுவந்த சாப்பாடைக் கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளைக்
கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத்
தோண்டத்தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு
இடுக்குவிடாமல் குட்டிகளைத் தேடித்தேடி ஒடியது, ஊழையிட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்க்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக
ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார். கொஞ்ச
நேரத்தில் நாய்க் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய்
நாய் இல்லாத சமயமாகப் பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய்
இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு
நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துக் கிடந்தன. ஆனாலும்
தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.
சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு
"சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து
ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன
இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து
கொண்டு இருக்கிறது எனத்தெரியாது. ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது
மட்டும் புரிந்தது. எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே
பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.
என்ன
ஒரு ஆச்சர்யம் இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர்
வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டுப்
போய்விட்டார். தாயைப் பார்த்த சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம்,
குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம்.
தங்களது சந்தோஷத்தைச் சத்தமாக குரைத்து பகிர்ந்துகொள்ள, மீண்டும் இந்தச்
சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி சுரேஷ்க்கு மனம்
முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம். இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற
சந்தோஷம். தாய் நாயின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. நீண்ட நாள்
பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும்
வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ஒரு நா(தா)யின் கண்ணீர்...!
தாயின் பாசம் எவ்வளவு உன்னதம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு நா(தா)யின் கண்ணீர்...!
பகிர்விற்கு நன்றி :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…
» சேனை யின் அன்புக்குரிய உள்ளங்களுக்கு ..
» Chrmi (சார்மி) யின் புகைப்படங்கள்
» வானொலி−யின் தந்தை ஒரு இந்தியர்
» எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்
» சேனை யின் அன்புக்குரிய உள்ளங்களுக்கு ..
» Chrmi (சார்மி) யின் புகைப்படங்கள்
» வானொலி−யின் தந்தை ஒரு இந்தியர்
» எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|