Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.
Page 1 of 1
கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.
நாம் எமது வாழ்வில் மற்றவர் எமக்குச் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பழிவாங்குவதைப்போன்ற பிரதிச் செயலைச் செய்யாது இருப்பது நன்று. உயர்ந்த கொள்கையோடு செயற்படப் பழகிக்கொண்டால் இந்த நல்லபழக்கம் அன்றாட வாழ்வில் எமக்குள் உருவாகிவிடும். அன்றாட வாழ்வில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கோ அல்லது அச்சூழலுக்கோ அகப்படாது உள்ளாள விடுதலையுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பழிவாங்காது, நிகழ்ச்சிக்கு அகப்படாது உள்ளாள விடுதலையுடன் நிகழ்ச்சியில் பிரதிச் செயலைக் காட்டுவதைக் கொள்கையுடன் வாழ்தல் என இங்கே குறிப்பிடுகிறேன். அதாவது தனது உயர்ந்த கொள்கையைக் கைவிடாமல் சூழலுக்கு அகப்படாமல் அச்சூழலைக் கட்டுப்படுத்தும் நிலையாகும்.
பெரும்பாலும் நாம் எமது சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். எமது சூழல் நன்றாகச் செயற்படும்போது நல்லதை உணர்கிறோம். ஆனால் சூழல் எப்படிப்பட்டதாக இருப்பினும் அந்தச் சூழலுக்கு அகப்படாது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கிச் செயற்படும்போது சூழ்நிலைகள் எம்மை ஆட்கொள்வதில்லை. இல்லையேல் சூழலுக்கு அகப்பட்டுத் தீமையான பிரதிச் செயலைச் செய்பவர்கள் ஆகிவிடுவோம்.
ஒரு நாள் ஒரு மனைவி தனது கணவனை ஏசினாள். ஆனால் கணவனோ தனது உள்ளத்தில் கலவரப்படவில்லை. மாறாக நான் எனது மனைவியை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற தீர்மானத்தோடு உள்ளான விடுதலையுடன் அமைதியோடு அவளுக்குச் செவிசாய்த்தான். பழிவாங்கும் பிரதிச் செயலைக் கணவன் காட்டாது கேட்டுக்கொண்டிருந்தான்’ மனைவி தனது கோபம் தணியும்வரை ஏசிவிட்டு நிறுத்திவிட்டாள். ஏசி முடிந்ததும் கோப உணர்வு நீங்கி விடுதலையை அனுபவித்தாள். கணவனும் பதிலுக்குப் பதில் ஏசியிருந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
பெரும்பாலும் நாம் எமது சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். எமது சூழல் நன்றாகச் செயற்படும்போது நல்லதை உணர்கிறோம். ஆனால் சூழல் எப்படிப்பட்டதாக இருப்பினும் அந்தச் சூழலுக்கு அகப்படாது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கிச் செயற்படும்போது சூழ்நிலைகள் எம்மை ஆட்கொள்வதில்லை. இல்லையேல் சூழலுக்கு அகப்பட்டுத் தீமையான பிரதிச் செயலைச் செய்பவர்கள் ஆகிவிடுவோம்.
ஒரு நாள் ஒரு மனைவி தனது கணவனை ஏசினாள். ஆனால் கணவனோ தனது உள்ளத்தில் கலவரப்படவில்லை. மாறாக நான் எனது மனைவியை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற தீர்மானத்தோடு உள்ளான விடுதலையுடன் அமைதியோடு அவளுக்குச் செவிசாய்த்தான். பழிவாங்கும் பிரதிச் செயலைக் கணவன் காட்டாது கேட்டுக்கொண்டிருந்தான்’ மனைவி தனது கோபம் தணியும்வரை ஏசிவிட்டு நிறுத்திவிட்டாள். ஏசி முடிந்ததும் கோப உணர்வு நீங்கி விடுதலையை அனுபவித்தாள். கணவனும் பதிலுக்குப் பதில் ஏசியிருந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
Re: கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.
எமது வாழ்வில் பயனுள்ள பெறுமதியுள்ள கொள்கைகளை வழி காட்டியாகவும் நங்கூரமாகவும் பாவிக்கும் பொழுது நாம் சூழலை ஆட்கொள்கிறோம். இல்லையேல் சூழல் எம்மை ஆட்கொண்டு விடும். சூழ்நிலைகள் மாறக்கூடியவை. சிலவேளைகளில் கசப்பான சூழல் ஏற்படும். அதே இடத்தில் மகிழ்ச்சியான சூழலாக மாறிவிடும். ஆனால் பெறுமதிகள் மாறுவதில்லை.
மகாத்மாகாந்தி தனது வாழ்வில் நல்ல பெறுமதிகளுடன் வாழ்ந்தார்.
1. அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்.
2. பொய்மையைக் காக்க வெற்றிகொள்வேன்.
3. உண்மையைக் காக்க எந்தக் கஷ்டத்தையும் அனுபவிப்பேன்.
இப்படிப்பட்ட நல்ல பெறுமதிகளோடு காந்திமகள் வாழ்ந்தார். நல்ல பெறுமதிகளைத் தீர்மானித்து அதைப்பற்றிக் கொண்டு அதன்படி வாழ்ந்தார். அதுவே அவருக்குச் சக்தியைக் கொடுத்தது.
பெரும்பாலும் சிலர் தமது கொள்கையின் படி பதில் கொடுப்பதில்லை. சூழலுக்கேற்பவே பதில் கொடுப்பார்கள். சிலர் தம்மிடம் வந்து அன்போடு கேட்கும் போது தமது கொள்கையைக் கைவிட்டுச் செயற்படுவர். அதாவது காரியத்தில் தனக்குப் பிடித்தவர்களுடன் ஒரு மாதிரியும் பிடிக்காதவர்களுடன் மற்றொரு மாதிரியும் நடந்து கொள்வது கொள்கையுடன் வாழுவதாகாது. எமது வாழ்வில் எமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பாளிகள். சூழ்நிலையை அல்லது மற்றவர்களைக் குறை கூறுவது பொருத்தமில்லை. மற்றவர் என்ன நினைப்பாரோ என்று நான் இப்படிச் செய்தேன் என்று குறை கூறுவது கொள்கையோடு வாழ்பவரின் நல்ல பிரதிச் செயலல்ல.
மகாத்மா காந்தி கொள்கையோடு வாழ்ந்து வரும்போது அது அவருக்குச் சக்தியைக் கொடுத்தது. ஆளுக்கேற்ப, நிகழ்ச்சிக் கேற்ப செயற்படாது கொள்கையுடன் செயற்பட்டார்.
நாமும் நல்ல கொள்கைகளைத் தெரிவு செய்து வாழ முயலுவோம். சூழலுக்கு அடிமைப்படாது: சூழலுக்கேற்ப எமது பிரதிச் செயலைக் காட்டாது நல்ல கொள்கையோடு வாழ்ந்து எமது வாழ்வைச் சிறப்பாக்குவோம்.
நான் எப்போது கொள்கையுடன் செயற்படுகின்றேன். எப்போது செயற்படவில்லை என்பதை அறிவது நன்று. அதுவே வெற்றிக்கு வழியாகும்.
by NAGEN VELAYATHAM
மகாத்மாகாந்தி தனது வாழ்வில் நல்ல பெறுமதிகளுடன் வாழ்ந்தார்.
1. அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்.
2. பொய்மையைக் காக்க வெற்றிகொள்வேன்.
3. உண்மையைக் காக்க எந்தக் கஷ்டத்தையும் அனுபவிப்பேன்.
இப்படிப்பட்ட நல்ல பெறுமதிகளோடு காந்திமகள் வாழ்ந்தார். நல்ல பெறுமதிகளைத் தீர்மானித்து அதைப்பற்றிக் கொண்டு அதன்படி வாழ்ந்தார். அதுவே அவருக்குச் சக்தியைக் கொடுத்தது.
பெரும்பாலும் சிலர் தமது கொள்கையின் படி பதில் கொடுப்பதில்லை. சூழலுக்கேற்பவே பதில் கொடுப்பார்கள். சிலர் தம்மிடம் வந்து அன்போடு கேட்கும் போது தமது கொள்கையைக் கைவிட்டுச் செயற்படுவர். அதாவது காரியத்தில் தனக்குப் பிடித்தவர்களுடன் ஒரு மாதிரியும் பிடிக்காதவர்களுடன் மற்றொரு மாதிரியும் நடந்து கொள்வது கொள்கையுடன் வாழுவதாகாது. எமது வாழ்வில் எமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பாளிகள். சூழ்நிலையை அல்லது மற்றவர்களைக் குறை கூறுவது பொருத்தமில்லை. மற்றவர் என்ன நினைப்பாரோ என்று நான் இப்படிச் செய்தேன் என்று குறை கூறுவது கொள்கையோடு வாழ்பவரின் நல்ல பிரதிச் செயலல்ல.
மகாத்மா காந்தி கொள்கையோடு வாழ்ந்து வரும்போது அது அவருக்குச் சக்தியைக் கொடுத்தது. ஆளுக்கேற்ப, நிகழ்ச்சிக் கேற்ப செயற்படாது கொள்கையுடன் செயற்பட்டார்.
நாமும் நல்ல கொள்கைகளைத் தெரிவு செய்து வாழ முயலுவோம். சூழலுக்கு அடிமைப்படாது: சூழலுக்கேற்ப எமது பிரதிச் செயலைக் காட்டாது நல்ல கொள்கையோடு வாழ்ந்து எமது வாழ்வைச் சிறப்பாக்குவோம்.
நான் எப்போது கொள்கையுடன் செயற்படுகின்றேன். எப்போது செயற்படவில்லை என்பதை அறிவது நன்று. அதுவே வெற்றிக்கு வழியாகும்.
by NAGEN VELAYATHAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|