சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Khan11

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

5 posters

Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Fri 11 Apr 2014 - 12:32

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் உட்பட வேறு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்ணை தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பையன்கள் என்றால் தவறு செய்வார்கள்; அதற்காக ஏன் அவர்களை தூக்கிலிட வேண்டும்?" என்று பேசினார்.

மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு மும்பை நீதிமன்றம், அண்மையில் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. புதிதாக இயற்றப்பட்ட பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிராகவே அவர் அவ்வாறு பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், முலாயமின் இந்த பேச்சு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி, இன்று மும்பையில் அளித்த பேட்டியில்,"பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்துகொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்னையாகிவிடுகிறது. தற்போதைய நாட்களில் இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்னையாக எழுகிறது. பாலியல் பலாத்காரம் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.

ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லாமலோ சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பெண்ணும் குற்றவாளிதான். அப்பெண்ணுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே முலாயம் சிங் பேச்சினால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அபு ஆஸ்மியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


Last edited by Nisha on Fri 11 Apr 2014 - 12:42; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by பானுஷபானா Fri 11 Apr 2014 - 12:37

அடப்பாவிகளா இவனுகளெல்லாம் ஆண் என்கிற மமதையில் பேசிக்கிட்டு திரியுறானுங்க.

இவனுக வீட்ல ஒரு சம்பவம் நடந்தால் தான் மற்றவரின் வலி தெரியும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 13:38

#*  #*  #*


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by rammalar Fri 11 Apr 2014 - 14:06

விபச்சார வழக்கில் கைதாகும் பெண்
குறித்து நாளிதழில் 'அழகி' கைது என்றுதான்
போடும்...
-
அதே குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆண்
கைது செய்யப்படுவதில்லை...
-
இனி அந்த ஆணும் கைது செய்யப்பட்டு
அவனுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..!
-
அவனை ஊர் மேய விட்ட அவனது மனைவியையும்
தண்டிக்க வேண்டும்..!!
-
இது எப்படி இருக்கு..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by பானுஷபானா Fri 11 Apr 2014 - 14:33

rammalar wrote:விபச்சார வழக்கில் கைதாகும் பெண்
குறித்து நாளிதழில் 'அழகி' கைது என்றுதான்
போடும்...
-
அதே குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆண்
கைது செய்யப்படுவதில்லை...
-
இனி அந்த ஆணும் கைது செய்யப்பட்டு
அவனுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..!
-
அவனை ஊர் மேய விட்ட அவனது மனைவியையும்
தண்டிக்க வேண்டும்..!!
-
இது எப்படி இருக்கு..!

சூப்பர் தான். ஆணும் கைது செய்யபட வேண்டும் என்பது சரிதான்.
ஆனா எந்த மனைவியும் ஊர் மேய விடமாட்டா. மனைவியை ஏமாத்திட்டு தானே இதுப் போல தப்பு செய்றான்.கண்ணுல விளக்கென்னை ஊத்தி பார்த்துக்கிட்டு இருந்தாலும் நூல் நுழைய முடியாத இடத்திலேயும் ஆண் நுழைந்து விடுகின்றானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 12:32

பானுஷபானா wrote:அடப்பாவிகளா இவனுகளெல்லாம் ஆண் என்கிற மமதையில் பேசிக்கிட்டு திரியுறானுங்க.

இவனுக வீட்ல ஒரு சம்பவம் நடந்தால் தான் மற்றவரின் வலி தெரியும்

 நிஜம் தான் பானு! தனக்கு தனக்கு என ஏதும் நடக்காத வரை  ஊருக்கு ஆயிரம் சொல்லும் இப்படி பட்ட அரசியல் வாதிகளை முதலில்  தூக்கில் போட வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 12:40

rammalar wrote:விபச்சார வழக்கில் கைதாகும் பெண்
குறித்து நாளிதழில் 'அழகி' கைது என்றுதான்
போடும்...
-
அதே குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆண்
கைது செய்யப்படுவதில்லை...
-
இனி அந்த ஆணும் கைது செய்யப்பட்டு
அவனுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..!
-
அவனை ஊர் மேய விட்ட அவனது மனைவியையும்
தண்டிக்க வேண்டும்..!!
-
இது எப்படி இருக்கு..!

சரி தான் ஐயா!

மனைவியானவள் தன் கடமை உணர்ந்து  கணவனுக்கான தேவையை முழுமயாககினால் அவன் அன்னிய பெண்ணை நாடபோவதில்லை  என்பதில் எனக்கு உடன் பாடுதான் !

ஆனால் ஆண்கள் வழி தவற  பெண் மட்டும் காரணம் ஆவதில்லையே..

விபசாரம் என்றால் என்ன வென்பதே  இங்கே கேள்விதான்.  மனைவியல்லாத இன்னோரு பெண்ணை அவள் கவர்ச்சியை ரசிப்பதும் மனதால் நினைப்பதும் கூட விபச்சார்ம தான் எனும் போது  யார் யாருக்கு தண்டனை தருவது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 12:50

பானுஷபானா wrote:
rammalar wrote:விபச்சார வழக்கில் கைதாகும் பெண்
குறித்து நாளிதழில் 'அழகி' கைது என்றுதான்
போடும்...
-
அதே குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆண்
கைது செய்யப்படுவதில்லை...
-
இனி அந்த ஆணும் கைது செய்யப்பட்டு
அவனுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்..!
-
அவனை ஊர் மேய விட்ட அவனது மனைவியையும்
தண்டிக்க வேண்டும்..!!
-
இது எப்படி இருக்கு..!

சூப்பர் தான். ஆணும் கைது செய்யபட வேண்டும் என்பது சரிதான்.
ஆனா எந்த மனைவியும் ஊர் மேய விடமாட்டா. மனைவியை ஏமாத்திட்டு தானே இதுப் போல தப்பு செய்றான்.கண்ணுல விளக்கென்னை ஊத்தி பார்த்துக்கிட்டு இருந்தாலும் நூல் நுழைய முடியாத இடத்திலேயும் ஆண் நுழைந்து விடுகின்றானே

தாயாய் பெண் தன்மகனை சரியாய் வளர்த்து விட்டால் மனைவியாய் பெண் அவள் கடமை உணர்ந்து விட்டால்  ஆணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பானு!

சேற்றிலும் மல்ர்ந்த செந்தாமரைகளும் உண்டு. பூ மாலைகள் குரங்கின் கையில் சிக்கி சீரழிவதும் நம அறியாததா!நம் சமுதாயம்  இந்த ஒழுக்ககேட்டிற்கு துணை செய்யும் சமுதாயமாய்  போனபின் யாரை நொந்து என்னாகும்! 

ஆணை குற்றம் சொல்ல முன் அவன் அப்படி ஆக காரணமாய் ஆன காரணிகள் என்னவென்பதை கண்டு களையாவிடில்  எத்தனை முறை தூக்கில் போட்டாலும் எந்த மாற்றமும் நிகழபோவதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 12:53

நூல் நுழைய ஊசி இடம் கொடுப்பதால் குற்றம் ஊசிக்கும் உரித்தாகிறது தண்டனை இருபாலாருக்கும் அவசியமே


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 13:01

காரணம் காரியங்களை ஆராய்ந்து தடுக்காமல்  இருபாலாரையும்  தூக்கில் போட்டால்  சமுதாயம் திருந்தி விடுமா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 13:03

Nisha wrote:காரணம் காரியங்களை ஆராய்ந்து தடுக்காமல்  இருபாலாரையும்  தூக்கில் போட்டால்  சமுதாயம் திருந்தி விடுமா சார்!
நிச்சயமாக காரண காரியங்கள் ஆராயும் போதுதான் இரு பாலாரிலும் தவறு என்பது ஊர்ஜிதமாகும் தண்டனை அதன் பிறகுதானே 
எங்கும்  எடுத்த உடனே தீர்ப்பளிப்பதில்லை


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 13:11

தண்டனை என்பது தவறு நடந்த பின் வருவது சார்!

தவறு நடக்க காரணமென்ன எனபதைஆராய்ந்து தவறே நேராமல் அதை தடுப்பது  நம் ஒவ்வொருவரின் சமுதாயக கடமை தானே சார்!

தவறு நடந்தபின் ஆராய்ந்து  தண்டித்து ஆவதென்ன சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 13:13

தூக்கிலிடுவது தண்டனை அல்ல 

இஸ்லாத்தைப்பொறுத்தவரை இந்த தண்டனையை இரண்டாக பிரிக்கப்படுகிறது 
திருமணமானவர்கள் இப்பபடியான குற்றம் செய்தால் கல்லெறிந்து கொல் என்பதாகவும் 
திருமணமாகாதவர் செய்தால் 110 கசையடி கொடுக்க வேண்டும் என்பதாகவும் பிரிக்கப்படுகிறது 
அதுவும் தண்டனைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதில் நிபந்தனை இருக்கிறது அதாவது குற்றம் நடந்தேறிய சமூகத்தில் அனைவரின் பார்வைக்கு பகிரங்கமாக நிறைவேற்றப்பட வேண்டும் 
இங்கு கவனிக்கப்பட வேண்டியது இவ்வாறு நிறைவேற்றுவதன் நோக்கம் பாவம் செய்தவருக்கு தண்டனை இவ்வுலகிலேயே கிடைத்துவிட்டதால் மறுமையில் சுவர்க்கம் அடைந்திடுவார் இதனை பார்வை இடுபவர்கள் இவ்வாறான பாவங்கள் செய்வதைவிட்டும் தவிர்ந்து விடுவார்கள் 
இந்த வழிமுறைகளை எங்கெல்லாம் செய்யப்படுமோ அங்கெல்லாம் இந்த குற்றங்கள் பெருமளவில் குறைந்துவிடும்


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 13:27

விளக்கத்திற்கு நன்றி சார்!

மதத்தோடு சேர்ந்த விளக்கம் தந்தமைக்கும் நன்றி! உங்கள் வயது, அனுபவம் எனக்கு தெரியாது. இருப்பினும்தவறெனில் மன்னியுங்கள்.

நீங்கள் சொல்லும்படி இப்பூமியில் ஒருவர் செய்யும் தப்புக்கு அவனுக்கான தண்டனை கிடைத்தால் அவன் சொர்க்கம போவானாகில் அவன் அந்த தவறை உணர தேவையில்லையா. தான் செய்த தப்பு உணராதுபோனாலும்இப்பூமியில் அவனுக்காக தண்டனை அவனை சொர்க்கம் அனுப்புமா..

கற்பழிப்புக்கு  கல்லெறிவது ,கசையடி கொடுப்பது  கிறிஸ்தவ மத பழைய ஏற்பாட்டிலும் உண்டு.  ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்றுபவன், கல்லெறிபவன் எந்த பாவமும் செய்யாதவனாயிருப்பானா.. என அவரவர் மனட்சாட்சிபடி உணர்ந்து  கல்லெறிய சொல்லியும்  இருக்கிறது.

நம் சகோதரன்  நம் அயலான் நாம் அறிந்தே தவறு செய்தால் அவன் செய்வது தவறென அறிந்தும் தடுக்காது தண்டனை குறித்து  பேசும் நாம் ஒவ்வொருவரும்  தண்டிக்கப்ட வேண்டியவர்கள் தானே.. இறைவன்  சன்னிதியில்   நாமும் இதற்கு விளக்கம்  சொல்ல வேண்டும்தானே!

கண்ணுக்கு கண், பல்லுக்குபல், எனில் மன்னிப்பு என்பதன்  அவசியம் ஏன்!

கற்பழிப்ப்பவனை, கொலை செய்தவனை தண்டிக்காது மன்னிக்க நான்  சொல்லவில்லை.. அவன் அப்படி ஆக காரணம் எது யார் எனஆராய்ந்தோமானல் ..

தப்பு நடப்பதாய்   அறிந்தும் யாரோ யாருக்கோ தானே என  கண்டும் காணாது இருக்கும் நாம்ஒவ்வொருவருமே  காரணம்தான் சார்.

தவறு செய்பவனை விட தவறு செய்ய துண்டுவது தான் பெரும்குற்றம் என  உலக சட்டம் சொல்கி்றது அலல்வா.


Last edited by Nisha on Sat 12 Apr 2014 - 13:42; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 13:42

Nisha wrote:விளக்கத்திற்கு நன்றி சார்!

மதத்தோடு சேர்ந்த விளக்கம் தந்தமைக்கும் நன்றி! உங்கள் வயது, அனுபவம் எனக்கு தெரியாது. இருப்பினும்தவறெனில் மன்னியுங்கள்.

நீங்கள் சொல்லுபடி இப்பூமியில் ஒருவர் செய்யும் தப்புக்கு அவனுகான தண்டனை கிடைத்தால் அவன் சொர்க்கம போவானாகில் அவன் அந்த தவறை உணர தேவையில்லையா. தான் செய்த தப்பு உணராதுபோனாலும்இப்பூமியில் அவனுக்காக தண்டனை அவனை சொர்க்கம் அனுப்புமா..

நிச்சயமாக ஏனெனில் இறைவன் அவ்வாறே விபரித்திருக்கிறான் நன்மை எது தீயது எது என்று பிரித்தறிவித்திருக்கிறான் அதனால் தான் திருமணமான ஒருவன் இவ்வாறான பாவம் செய்வது அவன் தெரியாமல் செய்வதல்ல தெரிந்து அதன் ருசி கண்டதால் மன இச்சைக்கு அசைப்பட்டு நாடிச்சென்று செய்கிறான் அவனுக்கு தண்டனை உண்டென்பது நன்றாக தெரிந்திருந்தும் செய்கிறான் அதனால் தண்டனை நிறைவேற்றப்டும் போது அவன் சுற்றவாளியாகிவிடுகிறான் ஆதலால் சுவனம் அவனக்கு உரியதே 

கற்பழிப்புக்கு  கல்லெறிவது ,கசையடி கொடுப்பது  கிறிஸ்தவ மத பழைய ஏற்பாட்டிலும் உண்டு.  ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்றுபவன், கல்லெறிபவன் எந்த பாவமும் செய்யாதவனாயிருப்பானா.. என அவரவர் மனட்சாட்சிபடி உணர்ந்து  கல்லெறிய சொல்லியும்  இருக்கிறது.

கண்டிப்பாக மார்க்க கட்டளை என்றால் அதை ஏற்று நடப்பவர்கள் தான் நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முன்நிற்பார்கள் 

நம் சகோதரன்  நம் அயலான் நாம் அறிந்தே தவறு செய்தால் அவன் செய்வது தவறென அறிந்தும் தடுக்காது தண்டனை குறித்து  பேசும் நாம் ஒவ்வொருவரும்  தண்டிக்கப்ட வேண்டியவர்கள் தானே.. இறைவன்  சன்ன்னிதியில்   நாமும் இதற்கு விளக்கம்  சொல்ல வேண்டும்தானே!

அன்புச் சகோதரி யாரும் அவ்வாறு தவறை செய்யும் போது பார்த்திருப்பதில்லை அவற்றை தடுப்பதற்கே முயற்சிப்போம் இது தெரியாமல் நடந்தேறுவதால்தான் யாராலும் தடுக்க முடியாமல் இருக்கிறது விளங்கச்செய்தும் இவர்கள் அதை நாடுவதால்தான் குற்றமாகிறது கண்டிப்பாக நாமும் சமுகத்தின் குற்றங்களுக்கு பங்காளர்களே 

கண்ணுக்கு கண், பல்லுக்குபல், எனில் மன்னிப்பு என்பதன்  அவசியம் ஏன்!
கற்பழிப்ப்பவனை, கொலை செய்தவனை தண்டிக்காது மன்னிக்க நான்  சொல்லவில்லை.. அவன் அப்படி ஆக காரணம் எது யார் எனஆராய்ந்தோமானல் ..

தப்பு நடப்பதாய்   அறிந்தும் யாரோ யாருக்கோ தானே என  கண்டும் காணாது இருக்கும் நாம்  ஒவ்வொருவருமே  காரணம்தான் சார்.

தவறு செய்பவனை விட தவறு செய்ய துண்டுவது தான் பெரும்குற்றம் என  உலக சட்டம் சொல்கி்றது அலல்வா.

சகோ மன்னிப்பென்பது சம்பந்தப்பட்ட தரப்பினைப்பொறுத்தது நாம் வெளியில் இருந்து மன்னித்து விடுவோம் அல்லது நமக்கு நடந்தேறினால் அதை மன்னித்துவிடுவோம் என்று எடுத்துக்கொண்டாலும் குற்றம் இளைக்கப்பட்ட அந்த உயிரின் மனநிலை என்ன என்பதை நாம் முடிவு கூற முடியுமா இல்லையே ஆதலால் குற்றத்தின்கான தண்டனை இதுதான் என்றால் அதை நிறைவேற்றுவதுதான் இறை அடியார்களாகிய எமது கடமை நாம் விதித்த கோட்பாடுகளல்லவே உலக சட்டங்களில் குறை இருப்பதால்தான் குற்றங்கள் நிறுத்தப்படாமல் இருக்கிறது உலக சட்டங்களை விடுத்து மார்க்கத்தின் அடிப்படையில் அத்தனை சமுகமும் நடந்தால் சட்டங்களும் அமுல் ஆகுமானால் உலகத்தில் குற்றங்களே நடக்க வாய்ப்பில்லை 


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 14:07

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:விளக்கத்திற்கு நன்றி சார்!

 நிச்சயமாக ஏனெனில் இறைவன் அவ்வாறே விபரித்திருக்கிறான் நன்மை எது தீயது எது என்று பிரித்தறிவித்திருக்கிறான் அதனால் தான் திருமணமான ஒருவன் இவ்வாறான பாவம் செய்வது அவன் தெரியாமல் செய்வதல்ல தெரிந்து அதன் ருசி கண்டதால் மன இச்சைக்கு அசைப்பட்டு நாடிச்சென்று செய்கிறான் அவனுக்கு தண்டனை உண்டென்பது நன்றாக தெரிந்திருந்தும் செய்கிறான் அதனால் தண்டனை நிறைவேற்றப்டும் போது அவன் சுற்றவாளியாகிவிடுகிறான் ஆதலால் சுவனம் அவனக்கு உரியதே 




 சகோ மன்னிப்பென்பது சம்பந்தப்பட்ட தரப்பினைப்பொறுத்தது நாம் வெளியில் இருந்து மன்னித்து விடுவோம் அல்லது நமக்கு நடந்தேறினால் அதை மன்னித்துவிடுவோம் என்று எடுத்துக்கொண்டாலும் குற்றம் இளைக்கப்பட்ட அந்த உயிரின் மனநிலை என்ன என்பதை நாம் முடிவு கூற முடியுமா இல்லையே ஆதலால் குற்றத்தின்கான தண்டனை இதுதான் என்றால் அதை நிறைவேற்றுவதுதான் இறை அடியார்களாகிய எமது கடமை நாம் விதித்த கோட்பாடுகளல்லவே உலக சட்டங்களில் குறை இருப்பதால்தான் குற்றங்கள் நிறுத்தப்படாமல் இருக்கிறது உலக சட்டங்களை விடுத்து மார்க்கத்தின் அடிப்படையில் அத்தனை சமுகமும் நடந்தால் சட்டங்களும் அமுல் ஆகுமானால் உலகத்தில் குற்றங்களே நடக்க வாய்ப்பில்லை 

நல்ல விளக்கம். நன்றிகள் சார்! 

உங்கள் பதிலை வைத்து கேட்பதால்தயவு செய்து கோபம் வேண்டாம்.  என்னை பொறுத்த வரை நான் என் கண்முன்னறிந்து ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவன் செய்யும் தப்பை தவறென உணர்த்தப்பார்ப்பேன்.  கேட்பதும் கேட்காததுமவரவர் இஷ்டம்.

ஒருவன் செய்த தப்புக்கு இவ்வுலக தண்டனை அவனுக்காக் மனனிப்பாகி அவன்  சொர்க்கம் செல்லலாம் என்றால்  எவனுமே திருந்த மாட்டான்.  ஆறிலும் சாவு  நூறிலும் சாவு என நினைத்து  அறுபதில் போக வேண்டிய உயிர்  இப்பவே போகட்டும் ஒரு முறை கற்பழித்தாலும், ஒரு கொலை செய்தாலும்  பலரை கற்பழித்தாலும் பல் கொலை செய்து பாதகம் செய்தாலும்  அவனுக்கு தண்டனை  அவன் உயிர் தானெனில்     அனுபவிப்பதை அனுபவிபோம். அப்புறம் தண்டனை பெறுவோம். தண்டனைக்கு அப்புறம் எல்லோரையும் போல் சொர்க்கம் போய் நல்லவனாய்  இறைவன் அருகே அமர்வோம் என்றுதான் நினைப்பான்.தப்பு செய்தாலும் கசையடி வாங்கினாலோ தூக்கில் தொங்கினாலோ  போதும் அவன் இலகுவாய் சொர்க்கம் போக முடியும்.

அபபுறம் எதுக்கு  நல்லவனாய் வாழ்ந்து வயதாகி,பாடு பலபட்டு  இவ்வுலகத்தில்  கஷ்டப்பட வேண்டும். எலோருமே ஒரு நாள் மரித்து தான்போகபோகிறேன்.  விபத்தில், நோயில், தானாய் போவது  அவன் ஆசையை அனுபவித்த நிறைவில் தண்டனையாய்    போகட்டும் என நினைக்க மாட்டானா

பொதுவாக மதங்கள் உன் இறைவனே முழுமுதல் கடவுள். அன்னிய தெய்வம் வேண்டாம். தாய் தந்தை அவர்களுக்கான் கடமைகளை நிறைவேறறு! விபச்சாரம் செய்யாதே! கொலை செய்யாதே, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே!  உன் அயலானை உன்னைபோல்  அன்பு செலுத்து என  சொல்லும் போதும்.

தண்டனைனை நிறைவேற்றுபவர் மார்க்க பற்றாளராய்  வாழ்ந்து எந்த தவறுமே செய்யாதவராய் இருக்கும் போதும்  அதே சமுதாயத்தில் தவறுகள் வரும்  காரணம் ஏன்..

விபச்சாரம் என்றால்.. அன்னிய ஸ்திரியோடு சேர்ந்து  இருந்தால் அல்ல.. தெரிவில்செல்லும் ஒரு பெண்ணை  காம் நோக்கோடு பார்த்தாலே அவன் அவளோடு  விபசாரம் செய்தாயிற்று.

இந்த நோக்கில் இன்றைக்கு சினிமா படங்கள் பார்த்து  அதில் வரும் நடிகைகளை, நடிகர்களை ரசிக்காதவர் நினையாதவர் உணடா..

 நமக்கு நடந்தேறினால்  தான் அதன் வலி தெரியும் ..சரி.. நாம் நம் இறைவன் மீதி முழு நம்பிக்கை வைத்து நம் வாழ்வை  சீராய் கொண்டு சென்றால் நாம் அனுமதிக்க இயலாத  கஷ்டத்தை நம்மீது அனுமதிப்பானா நம் இறைவன்..நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை என்னாவது .  

பாதிக்கப்பட்ட் ஒரு உயிரின்  மன நிலை எனன் வென  நாம் அறிய முடியாது எனும் போது   கற்பழிப்புக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 14:46

//பாதிக்கப்பட்ட் ஒரு உயிரின்  மன நிலை எனன் வென  நாம் அறிய முடியாது எனும் போது   கற்பழிப்புக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்!//



கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லவிலலை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் கற்பழிப்பதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருந்தால் அவளுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன் அந்த பெண் காரணம் இல்லை என்றாகும் போது தண்டனையின் அவசியம் பேசப்பட மாட்டாது 

அன்புச்சகோ இவ்வுலம் மறுமையின் விளைநிலம் என்று சொல்லப்படுகிறது நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வது மறுமையில் உங்களது எண்ணங்களைக்கொண்டு உங்களுக்கு கூலிகள் வழங்கப்படும் நீங்கள் எந்த நிலையில் எதைச்செய்தாலும் இறைவன் அத்தனையையும் பார்த்த வண்ணமிருக்கிறான் அத்தனையும் பதிவாகிறது வீம்புக்காக மார்க்கத்தோடும் இறைவனோடும் விளையாட முடியாது இறைவனின் கட்டளைகளோடு இருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுவீர்கள் அதில் மாற்றங்கள் செய்து எமக்கு சாதகாமாக ஆக்கிக்கொண்டால் அதற்காகவும் தண்டிக்கப்டுவோம் ஆக மார்க்க விழுமியங்களை பேணுவோமானால் அத்தனை சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்துவிடும் 

//விபச்சாரம் என்றால்.. அன்னிய ஸ்திரியோடு சேர்ந்து  இருந்தால் அல்ல.. தெரிவில்செல்லும் ஒரு பெண்ணை  காம் நோக்கோடு பார்த்தாலே அவன் அவளோடு  விபசாரம் செய்தாயிற்று //

நீங்கள் விபரம் அத்தனையும் தெரிந்தவர் என்று நன்றாகவே புரிகிறது மிக்க நன்றி கண்டிப்பாக நாம் பார்வையாலும் கேள்வியாலும் செயல்களாலும் விபச்சாரம் செய்யலாம் அதை செய்யக்கூடாது என்பதுதான் கட்டளை அதை மீறும் போது தண்டனை அனுபவித்தாக வேண்டும்


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 15:21

நேசமுடன் ஹாசிம் wrote: 
கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லவிலலை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் கற்பழிப்பதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருந்தால் அவளுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன் அந்த பெண் காரணம் இல்லை என்றாகும் போது தண்டனையின் அவசியம் பேசப்பட மாட்டாது 

அன்புச்சகோ இவ்வுலம் மறுமையின் விளைநிலம் என்று சொல்லப்படுகிறது நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வது மறுமையில் உங்களது எண்ணங்களைக்கொண்டு உங்களுக்கு கூலிகள் வழங்கப்படும் நீங்கள் எந்த நிலையில் எதைச்செய்தாலும் இறைவன் அத்தனையையும் பார்த்த வண்ணமிருக்கிறான் அத்தனையும் பதிவாகிறது வீம்புக்காக மார்க்கத்தோடும் இறைவனோடும் விளையாட முடியாது இறைவனின் கட்டளைகளோடு இருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுவீர்கள் அதில் மாற்றங்கள் செய்து எமக்கு சாதகாமாக ஆக்கிக்கொண்டால் அதற்காகவும் தண்டிக்கப்டுவோம் ஆக மார்க்க விழுமியங்களை பேணுவோமானால் அத்தனை சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்துவிடும் 

//விபச்சாரம் என்றால்.. அன்னிய ஸ்திரியோடு சேர்ந்து  இருந்தால் அல்ல.. தெரிவில்செல்லும் ஒரு பெண்ணை  காம் நோக்கோடு பார்த்தாலே அவன் அவளோடு  விபசாரம் செய்தாயிற்று //

நீங்கள் விபரம் அத்தனையும் தெரிந்தவர் என்று நன்றாகவே புரிகிறது மிக்க நன்றி கண்டிப்பாக நாம் பார்வையாலும் கேள்வியாலும் செயல்களாலும் விபச்சாரம் செய்யலாம் அதை க்க்செய்யக்கூடாது என்பதுதான் கட்டளை அதை மீறும் போது தண்டனை அனுபவித்தாக வேண்டும்

நன்றி சார்!

பெண் என்பவள் ஆண்களை அடக்கியாளவும், அதிகாரம் செய்யவும் படைக்கப்படவில்லை என்பதில் எனக்குள் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை.  அதற்காக அவள் அடிமையாகவும் படைக்கபடவில்லை. அவனில் பாதியாய் அவள் சக மனுசியாய் அவனோடு இணைந்து வாழவே படைக்கப்ட்டாள். .

ஒரு ஆண் அடையும் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல் அவன்வீழ்ச்சிக்கு பின்னாலும்  தாய் எனும் பெயரிலோ, மனைவி எனும் பெயரிலோ, தோழி எனும் பெயரிலோ ஒரு பெண் இருப்ப்பாளென்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை.

கற்பழிப்பு குற்றங்களுக்கும் இது பொருந்தும்.

நான் மத நம்பிக்கையை  கேலி செய்யவோ, விவாதம் செய்யவோ இங்கே கேடகவில்லை.  தெளிவாக்கிகொள்ளவே கேட்கிறேன். என் பதிவுகள் எதுவ்மே இறை நம்பிக்கையை  கிண்டல் செய்வதாய் இருக்காது. தவறாக புரிதல் வேண்டாம்! கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு அல்லவா!


நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வது மறுமையில் உங்களது எண்ணங்களைக்கொண்டு உங்களுக்கு கூலிகள் வழங்கப்படும்

இதுக்கும்  தண்டனையே மன்னிப்பாகி  சொர்க்கம் அடைவோம் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு சார்.
 
இறைவன் நமக்கு இட்டிருக்கு கட்டளைகளை நாம் மாற்றகூடாது என்பதும் எதையும் சேர்க்கவோ  அழிக்கவோ அனுமதி இல்லை என்பதும் நான் றிவேன் சார்.

நாம் விதைப்பதை மறுமையில் அறுப்போமென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தே இல்லை.  நிச்சயம் நாம் இவ்வுலகில் செய்யும் ஒவ்வொன்றுக்கும் மறுமையில் பதிலளிக்க வேண்டும்.அப்படியெனில்  நீங்கள் முதல் கூறிய தப்புக்காக் தண்டனை  மன்னிப்பாகி சொர்க்கம் செல்லலாம்  எனும் கருத்து மாறுபடுகிறதே சார்.


Last edited by Nisha on Sat 12 Apr 2014 - 16:00; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 15:45

பொறுமையோடும், நிதானமாயும் தாங்கள் அளித்த விளகக்ம் கண்டு வியக்கிறேன் !

எவ்வகையிலாவது என் பதிவுகள் உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

நன்றிகள் பல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 15:52

உங்களது புரிதலுக்கும் கேள்விகளுக்கும் மிக்க நன்றி உங்களது கேள்விகளின் வாயிலாகத்தான் எனது விடைகளுகம் அமைந்துவிடுகிறது 
நிச்சயமாக திரும்பவும் கூறுகிறேன் உங்களால் விதைக்கப்படுகின்ற வற்றுக்கு கூலி மறுமையில் உண்டு அதே போல் நீங்கள் இவ்வுலகில் செய்யத குற்றத்திற்காக மார்க்க அடிப்படையிலான தண்டனை பெற்றீர்களானால் அந்த பாவத்திற்கான தண்டனை அடைந்து விடுவீர்கள் நீங்கள் நிரபாராதியாகி நாளை மறுமையில் சுவனம் அடைவீர்கள் எவ்வாறென்பதை நிறுவியாக வேண்டிய கட்டாயத்திற்கு என்னை கொண்டு நிறுத்தியுள்ளீர்கள் நன்றி 
இறைவன் அதிபதிக்கெல்லாம் அதிபதி நீதியான ஆட்சியாளன் இவ்வுலகம் மறுவுலகம் அத்தனையும் அவனது கட்டளையின் படியே இயங்குகிறது உங்களின் எண்ணங்களைக் கூட அறிந்தவன் இறைவனே ஆக நீங்கள் ஒரு பாவம் செய்தால் இருதடவை தண்டனை அனுபவிக்க விரும்புவீர்களா ஒரு குற்றத்திற்கு ஒரு தடவைதான் தண்டனை வழங்கப்பட வேண்டும பகுத்தறிவுள்ள அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் ஆக இங்கு குற்றம் இழைக்கப்படும்போது இங்கு தண்டனை பெற்றீர்களானால் மறுமையில் தண்டனை வழங்குவது நியாயமாககுமா அதிபதியான நீதவான் இறைவன் அதனால்தான் இஸ்லாமிய குற்றவியலும் தண்டனையும் என்னும் கட்டுக்கொப்பில் அறிவித்துவிட்டான் நீங்கள் செய்கின்ற பாவங்களுக்கு தண்டனை இவ்வுலகிலேயே அடைந்தீர்களானால் மறுமையில் மீண்டும் கிடைக்காது அது மாத்திரமல்ல நீங்கள் அடைகின்ற தண்டமை மூலமாக உங்களது பாவம் அழிக்கப்பட்டுவிடும் 
நீங்கள் செய்த பாவத்திற்கு தண்டனை பெறும் போது நீங்கள் மனதாலும் ஏற்று இறைவனுக்காக அதனை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 15:56

Nisha wrote:பொறுமையோடும், நிதானமாயும் தாங்கள் அளித்த விளகக்ம் கண்டு வியக்கிறேன் !

எவ்வகையிலாவது என் பதிவுகள் உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

நன்றிகள் பல!
நிச்சயமாக இல்லை சகோ..... 

சில கருத்துகள் பரிமாறப்படும் போது தெளிவுகள் கிடைத்துவிடுகின்றன நானும் என்னாலான கருத்துகளைத்தான் விபரித்திருந்தேன் பொறுத்திருங்கள் மிக விரைவில் இஸ்லாமிய குற்றவியலும் தண்டனைகளும் என்பதை உங்களுக்காக இங்கு பிரசுரிக்கிறேன் அதையும் படித்துப்பாருங்கள் தெளிவுகள் கிடைக்கும் 
நானும் வியக்கிறேன் தாங்கள் மிகவும் ஆழ அறிவுடையவாரக இருக்கின்றீர்கள் உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி நன்றிகள் பல கோடி என் கருத்து முரண்பட்டிருந்தால் மன்னித்துவிடுக நன்றி


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Nisha Sat 12 Apr 2014 - 16:15

நிஜம் சொன்னால் உங்கள் ஒவ்வொரு பதில் பதிவிலும் எனக்குள் ஒவ்வொரு புதிய கேள்வி  தோன்றிகொண்டுதான் செல்கிறது!

கேள்விகளும் பதில்களும்  ஆரோக்கியமானதாய்  இருந்தால் மன்வேற்றுமைகளுக்கும் விரோதங்களுக்கும்  இடைமே இராது.

சேனைத்தமிழ் உலாகுறித்து அதன் உறவுகள் குறித்தும் வெளியே நின்று நான் அறிந்ததுக்கும்  உள்ளே வந்த பின் நான் உணர்வதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை  உங்கள் பதிவுகள் மூலம் உணரச்செய்தீருக்கின்றீர்கள்.

மகிழ்கிறேன் சார்.

உங்களை போன்றவர்கள் தொடர்ந்து  வந்து இந்த தளத்தை  நடத்துங்கள். 

கேட்டுக்கு போகும் வழியானது  விசாலமாய்  இருக்கிறது! நல்லதை காட்டும் வழியோ ஒடுக்கமாயும் மறைவாயும் இருக்கிறது!

எமது இளைஞர்கள்  இந்த இணைய உலகில் திக்குதிசை தெரியாமல்  எங்கெங்கோ அலைந்து  தீயதை கண்டு  கெட்டு போகின்றார்கள்

திக்கு திசை தெரியாமல் பறந்து  கொண்டிருக்கும் எம் எதிர்கால் சந்ததி வந்து  இளைப்பாறுதலாய் தங்கி,ஆறுதலடைந்து, அறிவால் மட்டுமல்ல பண்பாலும் வளர  சேனைத்தமிழ் உலா வெனும் விருட்சம் பயன் படட்டும். அதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

என் மனமார்ந்த வாழ்த்துகள் சார்! நன்றி நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Apr 2014 - 16:28

மிக்க நன்றி நானும் மகிழ்கிறேன் தொடருங்கள் 

உங்களது ஒப்பப்பகுதியின் வரிகளில் உங்களது நட்பின் விபரம் அறிகிறேன் 

//முகமது நட்பது நட்பனறு நெஞ்சத்து அகநக நட்பது நட்பு//


கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி Empty Re: கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அஜ்மல் கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்-பிட்டா கோரிக்கை
» மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி
» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
» தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum