சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி! Khan11

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!

Go down

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி! Empty பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!

Post by rammalar Fri 2 May 2014 - 6:47

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி! %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
-
-

-

‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும்
அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள
மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து
கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்டார் தர்மம்
பற்றி நன்கு அறிந்த தருமர், பீஷ்மரிடம்.

பட்ட மரத்தை பீஷ்மர் சொன்னார்:

‘‘காசி மன்னரது
நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த வேடன்
ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை
எடுத்துக் கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப்
போனான். ஓரிடத்தில் ஏராளமான மான்களைக்
கண்டு, துரத்திக் கொண்டு போய் அம்பைத் தொடுத்தான்.
அம்பு குறி தவறி பெரிய மரம் ஒன்றில் குத்தி நின்றது.
-
ஒரு சில விநாடிகளில் அம்பில் இருந்த கடுமையான
விஷம் மரம் முழுவதும் பரவியது. மரத்தில் இருந்த
காய்களும் இலைகளும் கனிகளும் உதிர்ந்து கீழே
விழுந்தன. மரம் காய்ந்து போனது.
-
அந்த மரத்தின் பொந்தில் நீண்ட கால மாக வசித்து
வந்த கிளி ஒன்று, மரத்தின் மீதுள்ள பற்றினால்,
அங்கிருந்து வெளி யேறவில்லை. தர்மத்தில் பற்றுள்ள
அந்தக் கிளி, வெளியே போய் இரை தேடவில்லை.
பட்டுப் போன அந்த மரத்துடன் சேர்ந்து தானும்
காய்ந்தது.

அதைக் கண்ட தேவேந்திரன் வியப்பு அடைந்தான்.
‘‘மனிதர்களை விட இந்தக் கிளி, நடத்தையில்
உயர்ந்ததாக இருக்கிறது. மரத்துடன் சேர்ந்து, தானும்
துயரத்தை அனுபவிக்கிறது. என்ன கருணை…
என்ன கருணை! ஆனால், ஒன்று; குணமும் குற்றமும்
எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கத்தான் செய்கிறது!’’
என்று பாராட்டினான்.

உடனே தேவேந்திரன் ஒரு மானிட வடிவம் எடுத்து,
கிளியை நெருங்கிக் கேட்டான். ‘‘கிளியே! உனது
நற்குணத்தைப் போற்றுகிறேன். என் கேள்விக்கு
பதில் சொல்! பட்டுப் போன இந்த மரத்திலேயே நீ
ஏன் இன்னும் தங்கி இருக்கிறாய்? வேறு ஏதாவது
காய் கனிகளுடன் கூடிய மரமாகப் பார்த்துப் போகக்
கூடாதா?’’
-
அவனைத் தலையால் வணங்கி நமஸ்கரித்த கிளி,
‘‘தேவர்களின் தலைவனே! நீ தேவேந்திரன் என்பதை
என் தவத்தின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்!’’
என்றது.
-
கிளி பெருமூச்சு விட்டுத் துயரத்துடன் பேசத்
தொடங்கியது: ‘‘தேவேந்திரா! அநேக நற்குணங்கள்
பொருந்திய இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன்.
இந்த மரம்தான் இது வரை என்னைக் கட்டிக் காத்தது.
பகைவர்களிடமிருந்து என்னைக் காத்ததும் இதே
மரம்தான். இப்படி நெடுங்காலமாக என்னைக் காக்கும்
இந்த மரத்தை, விட்டு விடும்படி நீ சொல்லலாமா?
அன்பும் இரக்கமும் நன்றியும் கொண்ட நான், இந்த
மரத்தை விட்டுப் போகலாமா? நல்ல நிலையில்
இருந்தபோது இங்கிருந்து எல்லா சுகங்களையும்
அனுபவித்து விட்டு, நிலைமை மாறிக் கெட்ட நிலை
வந்தவுடன் இந்த இடத்தை விட்டுப் போவது எந்த
விதத்தில் நியாயம்?

தர்ம விஷயங்களில் எல்லா தேவர்களும் உன்னிடம்
வந்து தெளிவு பெறுகிறார்கள். அப்படிப்பட்ட நீ,
என்னை நன்றி மறக்கச் சொல்லலாமா?’’ என்றது.
-
தேவேந்திரன் உள்ளம் விம்மினான். ‘‘கிளியே! நன்றி
மறவாத உனது செய்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சரி… உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்!’’ என்றான்.
-
‘‘இந்த மரம் பழையபடி தழைத்துக் குலுங்க வேண்டும்!’’
என்று கேட்டது கிளி.
-
தேவேந்திரன் உடனே அந்த மரத்தின் மீது அமிர்தத்தைப்
பொழிந்தான். கண்மூடித் திறப்பதற்குள் பழையபடி
தழையும், பூவும், கனிகளுமாக மரம் செழித்து விளங்கியது.

அங்கேயே தொடர்ந்து வசித்த கிளி, தனது ஆயுட்காலம்
முடிந்ததும், இந்திரலோகத்தை அடைந்தது.
-
——————————–
–கதையாசிரியர்: வி.ஆர்.சுந்தரி
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum