Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
3 posters
Page 1 of 1
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
புதுடில்லி: ''நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி வழங்குவது தான் எங்கள் அரசின் லட்சியம். ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
முதல் உரை அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசிய முதல் உரையே மிக அருமை...! ^) ^) ^) ^) ^) ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|