சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

கர்ப்பம் யாதெனில்? Khan11

கர்ப்பம் யாதெனில்?

5 posters

Go down

கர்ப்பம் யாதெனில்? Empty கர்ப்பம் யாதெனில்?

Post by selvakumarm Fri 22 Jan 2016 - 12:00

கவிதை சுமப்பதும்
கர்ப்பம் சுமப்பதும்
ஒன்றுதான்.

நெஞ்சுக்கூட்டுக்குள்
வார்த்தையின்
உயிரணுக்கள்
வந்துமோதும்
வேகத்தில் தான்
கவிதை
கர்ப்பம்
தரிக்கிறது.

படுக்கவிடாது..
உண்ணுதல்
குமட்டும்..
சித்தம்
வேறேதும்
பிடிக்காமல்
வாந்தியெடுக்கும்.

பிஞ்சுக்கால்கள்
வைத்து
மூளையை
உதைக்கும்.

தாம்பத்யம்
சிற்றின்பமென்றால்,
இது
வார்த்தைகள்
இணையும்
பேரின்பம்
இது.

இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...

மொழிகள்
பார்ப்பதில்லை..
வலிகள்
வரையும்
வார்த்தை
ஓவியங்கள்..

நேசிப்பவர்
எங்கிருப்பினும்
வந்துவிடும்
கவிதைக் காதல்.

வயிறு
சுமந்து சரிவதாய்..
வார்த்தைகள்
திரண்டு
பிரசவமாகிறது
கவிதை..

ஆயுதப்பிரசவ
ஆபத்து
கவிதைக்கு
எப்போதும்
கிடையாது..

பெற்றுப்போட்ட
கவிதைக்கு
பெயரும்
வைக்கவேண்டும்
பிள்ளைக்குப்
போலவே..

எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..

பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..
பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..

நித்தம்
கருத்தரித்து
தாயாக
தாவும்
மனசு..

உணவூட்டல்
போலவே..
கவிதைகளும்
பின்னூட்டத்தில்
வளரும்.

நூறேனும்
சொல்லலாம்
ஒற்றுமை..

வேற்றுமையும்
வேற்று
உவமையும்
உங்களுக்கிருந்தால்
சொல்லி
அனுப்புங்கள்..

இந்தக்
கவிதைக்
குழந்தையிடமே...







http://naanselva.blogspot.in/2016/01/blog-post_22.html?m=1


selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by selvakumarm Fri 22 Jan 2016 - 12:31

அலைபேசியில் தட்டச்சுவதால்,,,எடிட் செய்ய முடியவில்ல..மன்னிக்கவும்...சில பிழைகளுக்காக..

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by Nisha Fri 22 Jan 2016 - 14:49

எழுத்துப்பிழை ஏதும் இல்லை செல்வா சார், இருந்தாலும் நான் திருத்தி விடுவேன். அலைபேசியில் தமிழ் தட்டச்சுட்டு பதிவது எப்படி என  உங்களிடம்  கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

சம்ஸ், நண்பன் நோட் திஸ் பாயிண்ட்!ஊருக்கு போனால் பதிவு போட பயன் படும்.


Last edited by Nisha on Sat 23 Jan 2016 - 22:39; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by பானுஷபானா Fri 22 Jan 2016 - 15:22

வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by Nisha Fri 22 Jan 2016 - 15:27


எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..

பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..
பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..
 நிஜம் தான்! அத்தனையும் அற்புதமான வரிகள், ஒவ்வொரு படைப்பும்  பிரசவம் தான்,படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருத்தல்? எவ்ரேனும் தூக்க மாட்டார்களா   என ஏங்கும் குழந்தை மன நிலை ஒத்தது. 

ஒரு கவிஞனாய்  உள்ளத்து எதிர்பார்ப்பை எழுதிச்சென்ற விதம் அருமை, 

இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...
செத்த பின்னும் மறையா சித்திரக்காதல்! எத்தனை அழகான உவமானம்!

அருமை செல்வா! இன்னும் இன்னும் நிரம்ப எழுதுங்கள். கவிதைகளோடு நில்லாமல்  எல்லாமே எழுதுங்கள்.

படிக்க, கருத்திட நாங்கள் காத்திருக்கின்றோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by Nisha Fri 22 Jan 2016 - 15:44

பானுஷபானா wrote:வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.

பானு அவர் வலைப்பூவிலும் கருத்தை போட்டு விடுங்கமா,! சேனைப்புகழ் உலகெங்கும் பரவட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by நண்பன் Sun 24 Jan 2016 - 17:04

வாவ் சூப்பர் சூப்பர்
கர்ப்பம் யாதெனில்
என்ற கேள்வில் உங்கள்
உள்ளத்திலிருந்து மனக்கருவறையில்
இருந்து உதித்த அத்தனையும் முத்துக்கள்

எவ்வளவு அழகாய் இணைக்கப்பட்டுள்ளது வரிகள்
பிரமாதம் பிரமாதம்
நிறைமாதக் கர்ப்பினியாய் நீங்கள் பிரசவித்த கவிதை அதற்கிட்ட பெயர் இன்னும் சிறப்பு

நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது
ஹா ஹா

தொடருங்கள் கவிஞரே
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 17:34

நன்றி நிஷா...உடனுக்குடன் என் வரிகளை வாசித்து சிலாகிக்கும் உங்களுக்கு...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 17:35

வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.////
நன்றி பானு சகோதரி..

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by selvakumarm Sun 24 Jan 2016 - 17:38

நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது////

நண்பா எனக்கும் நேர்வதுண்டு...குறைமாதப்பிள்ளைகளும் சிறப்பதுண்டு..
நன்றிகள்..

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by rammalar Sun 24 Jan 2016 - 18:13

கவிதை....கர்ப்பம் யாதெனில்? 3838410834
-
கர்ப்பம் யாதெனில்? Images?q=tbn:ANd9GcRJvdIqDn-Oy76qvkeRjvV1s6j-68JtVr3UrQ9NzJETbF3TAQkQEA
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கர்ப்பம் யாதெனில்? Empty Re: கர்ப்பம் யாதெனில்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum