சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Khan11

ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்

Go down

ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Empty ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்

Post by rammalar Sat 16 Jun 2018 - 17:26

By சுரேஷ் கண்ணன் - தினமணி
-
அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை 
அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத் 
தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை 
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’ 
திரைப்படம். 

‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி 
பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக் 
கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த 
வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது 
தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை 
வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான் 
என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம் 
அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி
என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன 
இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை 
விட்டுச் சென்றிருக்கிறார்.

காலாவின் மகனான லெனின் ஜனநாயகப் 
போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண 
முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள் 
கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின் 
மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின் 
ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது. 
இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?

**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் Empty Re: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்

Post by rammalar Sat 16 Jun 2018 - 17:33

மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின் 
காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள 
மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில 
கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன. 

இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல 
அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப
குதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும், 
காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்
படுவதற்கு இந்த ஹரிதான் காரணம். 

ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத் 
திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர 
மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார். 
இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை 
எதிர்கொள்ள நேர்கிறது.

எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா 
என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான 
காட்சிகள் விவரிக்கின்றன.

**

மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’ 
பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு 
ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது 
மகிழ்ச்சி. இது தொடர வேண்டும். 

‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி 
தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்
சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து 
நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. 

அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து 
மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்
ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட 
சமரசமாகி நிற்கின்றன. 

எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின் 
சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக 
ஆகியுள்ளது. 

இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம் 
இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன. 
தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித் 
தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக் 
கண்டு உருகுகிறார்; மருகுகிறார். 

இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும் 
நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால் 
நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்
என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.



ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி 
இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில் 
அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின் 
‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது 
முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்
சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி 
அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum