Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
ஒரு தாமாஷான பேய்க்கதை
(சுஜாதா – குமுதம் 2003)
(சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் இப்படி சில வித்தியாசமான திகில் கதைகள் எழுதியுள்ளார்.)
அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக்கப்பில அதிகம் கைதிகள் இல்லை. குடித்த கேஸ்கள் எல்லாம் தூக்கத்தில். ரைட்டர் மாதவனால் தூங்கமுடியவில்லை.
கொசுவத்திச் சுருள் காலடியில் மேஜை மேல் கொளுத்திவைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் வைத்தும்.. மைலாப்பூர் கொசுக்கள், `இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்காகாது’ என்று காக்கி உடைகளில் உட்கார்ந்து கால்களைத் தேய்த்து நேர்வாகாக ஊசி குத்தி ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு `நன்றி’ சொல்லிப் பறந்தன.
மாதவன் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில், உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று களைத்திருந்தான். ஏதோ அடிபட்டவன் போல் தோன்றினான். காதருகே ரத்தக் கோடு தெரிந்தது.
``யாருப்பா?’’
``ஐயா நான் ஒரு F.I.R. பதிவு செய்ய வந்திருக்கேங்க..”
``என்ன விஷயம்?’’
``ஒரு கொலை நடந்துருச்சு அதைப் பதிவு செய்ய வந்திருக்கேன்..”
``எங்க நடந்துச்சு?’’
``இங்கருந்து நூறு அடி தள்ளி.. இதே ரோடுல..”
``செத்தது யாரு?’’
`நடராசுங்க’’
``உங்க பேரு...”
``நடராசுங்க...!’’
மாதவன் சிரித்தார். ``செத்தது நடராசு.. ரிபோர்ட் செய்தது நடராசு.. வினோதமாத்தான் இருக்கு. இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.’’
``இறந்ததும் நாந்தாங்க...!’’
``புரியலை. இறந்தது நீன்னா.. எப்படிய்யா எஃப்.ஐ.ஆர். எழுத வந்திருக்கே?’’
``ஏங்க, வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக் கூடாதா?’’
``நீ செத்துட்டய்யா!’’
``அதனாலே என்னங்க எப்.ஐ.ஆர். எழுதக்கூடாதா?’’
``பாரு நீ குடிச்சிருக்க. எங்க ஊது?’’
அவன் ஊத...
``ஒண்ணுமில்லையே.. சரி சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா.. சமுதாயத்து மேலே கோவமா.. பொயட்ரி எழுதற ஆளா?’’
``இல்லைங்க.. நான் எறந்துட்டேன். அதை பதிய வந்தேன்...’’ என்றான் பிடிவாதமாக.
மாதவன் கோபத்துடன் ``யோவ்.. உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலியில் உட்கார முடியும்... பேச முடியும்.. புகார் கொடுக்க முடியும்..’’
``என்னலே முடியுதுங்களே...”
``அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம். நோ க்ரைம்.”
``அப்ப நான் சாவலையா?’’
``பாரு நீ சாவலை. வேறு யாரோ செத்ததை நீ செத்தா மாதிரி நினைச்சிட்டிருக்கே. இது ஒரு பிரமை. ஓரு மாதிரி வியாதிம்பாங்க.. ஒரு கிளாஸ் தண்ணி குடி எல்லாம் சரியாயிரும்.’’
மீண்டும் எதையும் கேட்காமல் சொன்னதையே திரும்பச் சொன்னான்.
``சரியாப்போச்சு.’’ என்று அலுத்துக்கொண்டார் மாதவன். ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது. குறும்போ, விளையாட்டோ, கேலியோ இல்லை. மனநோய் போலவும் தெரியவில்லை.
மாதவனை அது சங்கடப்படுத்தியது.
அவன் தொடர்ந்தான்.
ஒரு விபத்துல செத்தேங்க..சைக்கிள் ஓட்டிகிட்டு வந்தப்ப.. எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா வந்து மோதிட்டான். கார் நம்பர்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். பனிரண்டு பதினாறுங்க.. உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க..!””
``யோவ்...! வெளையாடறியா..?”
``இல்லைங்க. மெய்யாலுமே செத்துட்டங்க.’’
மாதவன் சற்று நேரம் அவனையே பார்த்தவாறு என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். பெஞ்சில் படுத்திருந்தவர்களில் போதை விலகிய ஒருவன்.. ``ரைட்டர் ஐயா சொல்லாரில்லே போவியா...” என்றான் அதட்டலாக.
``பாரு நீ செய்யிறதெல்லாம் உயிருள்ளவன் செய்யற வேலை.. நீ சாவலை.. சாவலை...”
``நான் செத்தாச்சுங்க..”
மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.
``சார்.. இந்த ராத்திரி வேளைல தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க..”
``அதான் தொந்தரவு கொடுத்தாச்சே.. சொல்லுங்க..”
``ஒரு ஆளு டெத் ஒண்ணு ரிப்போர்ட் பண்ணனுங்கறான். செத்தது யார்னா.. நாந்தாங்கறான்..?’’
``குடியா..”
தெரியலை. ட்ரக்ஸ் ஏதும் எடுத்தாப்லயும் தெரியலே. சாதுவாத்தான் இருக்கான்.’’
``ஒண்ணு செய்.. அவன காலைல வரச் சொல்லு. இன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.’’
``கேக்க மாட்டேங்கறான் சார். திரும்பத் திரும்ப நான் செத்தாச்சு..செத்தாச்சுங்கறான்..”
``சரி. போனை அவங்கிட்ட குடு நான் பேசறேன்.’’
``இந்தாய்யா, எங்க எஸ்.பி. கிட்ட பேசு.’’ என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன். அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கடீரென்று விழுந்தார்.
``அய்யா.. வணக்கங்க..! எம்பேரு நடராசுங்க..” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்!
-------
(சுஜாதா – குமுதம் 2003)
(சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் இப்படி சில வித்தியாசமான திகில் கதைகள் எழுதியுள்ளார்.)
அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக்கப்பில அதிகம் கைதிகள் இல்லை. குடித்த கேஸ்கள் எல்லாம் தூக்கத்தில். ரைட்டர் மாதவனால் தூங்கமுடியவில்லை.
கொசுவத்திச் சுருள் காலடியில் மேஜை மேல் கொளுத்திவைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் வைத்தும்.. மைலாப்பூர் கொசுக்கள், `இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்காகாது’ என்று காக்கி உடைகளில் உட்கார்ந்து கால்களைத் தேய்த்து நேர்வாகாக ஊசி குத்தி ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு `நன்றி’ சொல்லிப் பறந்தன.
மாதவன் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில், உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று களைத்திருந்தான். ஏதோ அடிபட்டவன் போல் தோன்றினான். காதருகே ரத்தக் கோடு தெரிந்தது.
``யாருப்பா?’’
``ஐயா நான் ஒரு F.I.R. பதிவு செய்ய வந்திருக்கேங்க..”
``என்ன விஷயம்?’’
``ஒரு கொலை நடந்துருச்சு அதைப் பதிவு செய்ய வந்திருக்கேன்..”
``எங்க நடந்துச்சு?’’
``இங்கருந்து நூறு அடி தள்ளி.. இதே ரோடுல..”
``செத்தது யாரு?’’
`நடராசுங்க’’
``உங்க பேரு...”
``நடராசுங்க...!’’
மாதவன் சிரித்தார். ``செத்தது நடராசு.. ரிபோர்ட் செய்தது நடராசு.. வினோதமாத்தான் இருக்கு. இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.’’
``இறந்ததும் நாந்தாங்க...!’’
``புரியலை. இறந்தது நீன்னா.. எப்படிய்யா எஃப்.ஐ.ஆர். எழுத வந்திருக்கே?’’
``ஏங்க, வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக் கூடாதா?’’
``நீ செத்துட்டய்யா!’’
``அதனாலே என்னங்க எப்.ஐ.ஆர். எழுதக்கூடாதா?’’
``பாரு நீ குடிச்சிருக்க. எங்க ஊது?’’
அவன் ஊத...
``ஒண்ணுமில்லையே.. சரி சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா.. சமுதாயத்து மேலே கோவமா.. பொயட்ரி எழுதற ஆளா?’’
``இல்லைங்க.. நான் எறந்துட்டேன். அதை பதிய வந்தேன்...’’ என்றான் பிடிவாதமாக.
மாதவன் கோபத்துடன் ``யோவ்.. உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலியில் உட்கார முடியும்... பேச முடியும்.. புகார் கொடுக்க முடியும்..’’
``என்னலே முடியுதுங்களே...”
``அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம். நோ க்ரைம்.”
``அப்ப நான் சாவலையா?’’
``பாரு நீ சாவலை. வேறு யாரோ செத்ததை நீ செத்தா மாதிரி நினைச்சிட்டிருக்கே. இது ஒரு பிரமை. ஓரு மாதிரி வியாதிம்பாங்க.. ஒரு கிளாஸ் தண்ணி குடி எல்லாம் சரியாயிரும்.’’
மீண்டும் எதையும் கேட்காமல் சொன்னதையே திரும்பச் சொன்னான்.
``சரியாப்போச்சு.’’ என்று அலுத்துக்கொண்டார் மாதவன். ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது. குறும்போ, விளையாட்டோ, கேலியோ இல்லை. மனநோய் போலவும் தெரியவில்லை.
மாதவனை அது சங்கடப்படுத்தியது.
அவன் தொடர்ந்தான்.
ஒரு விபத்துல செத்தேங்க..சைக்கிள் ஓட்டிகிட்டு வந்தப்ப.. எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா வந்து மோதிட்டான். கார் நம்பர்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். பனிரண்டு பதினாறுங்க.. உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க..!””
``யோவ்...! வெளையாடறியா..?”
``இல்லைங்க. மெய்யாலுமே செத்துட்டங்க.’’
மாதவன் சற்று நேரம் அவனையே பார்த்தவாறு என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். பெஞ்சில் படுத்திருந்தவர்களில் போதை விலகிய ஒருவன்.. ``ரைட்டர் ஐயா சொல்லாரில்லே போவியா...” என்றான் அதட்டலாக.
``பாரு நீ செய்யிறதெல்லாம் உயிருள்ளவன் செய்யற வேலை.. நீ சாவலை.. சாவலை...”
``நான் செத்தாச்சுங்க..”
மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.
``சார்.. இந்த ராத்திரி வேளைல தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க..”
``அதான் தொந்தரவு கொடுத்தாச்சே.. சொல்லுங்க..”
``ஒரு ஆளு டெத் ஒண்ணு ரிப்போர்ட் பண்ணனுங்கறான். செத்தது யார்னா.. நாந்தாங்கறான்..?’’
``குடியா..”
தெரியலை. ட்ரக்ஸ் ஏதும் எடுத்தாப்லயும் தெரியலே. சாதுவாத்தான் இருக்கான்.’’
``ஒண்ணு செய்.. அவன காலைல வரச் சொல்லு. இன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.’’
``கேக்க மாட்டேங்கறான் சார். திரும்பத் திரும்ப நான் செத்தாச்சு..செத்தாச்சுங்கறான்..”
``சரி. போனை அவங்கிட்ட குடு நான் பேசறேன்.’’
``இந்தாய்யா, எங்க எஸ்.பி. கிட்ட பேசு.’’ என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன். அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கடீரென்று விழுந்தார்.
``அய்யா.. வணக்கங்க..! எம்பேரு நடராசுங்க..” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்!
-------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)
[ltr]பய புள்ள ஆபிரிக்காவில் கேட்டரிங் படிக்க போய் இருப்பான் போல ![/ltr]
[ltr]எப்படிடா சொல்றே![/ltr]
[ltr]நீயே பாரேன்![/ltr]
[ltr]ரசம் செய்யணும், புளி ஊற வை என்று சொன்னால் ! என்ன செய்து இருக்கான் பாருங்க![/ltr]
[ltr]
[/ltr]
[ltr]எப்படிடா சொல்றே![/ltr]
[ltr]நீயே பாரேன்![/ltr]
[ltr]ரசம் செய்யணும், புளி ஊற வை என்று சொன்னால் ! என்ன செய்து இருக்கான் பாருங்க![/ltr]
[ltr]
[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்த நகைச்சுவை - தொடர் பதிவு
» முகநூல், ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்த நகைச்சுவை - தொடர் பதிவு
» முகநூல், ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|