Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
பரிசு!
Page 1 of 1
பரிசு!
இனிமையான காலைப் பொழுதில், கமலன் பள்ளிக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கமலனின் அம்மா காலை உணவை முடித்தபின் கமலனை உண்பதற்காக அழைத்தார்.
கமலன் "இதோ வருகிறேன்" என்று உள்ளிருந்து கூரல் கொடுத்தான். சற்றேன்று ஏதோ நினைவு வர "அடக்கடவுளே எப்படி மறந்தேன்! அம்மாவிடம் கேட்கனுமே, ஆனா அம்மா ம்.. முடியாதுன்னுதா சொல்லுவா, இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்." என்று தனக்குள் கூறிக் கொண்டான் கமலன். ஒருவாறு சாப்பிட வந்த கமலுனுக்கு அம்மா சாப்பாடு போட்டுக் கொடுத்தார். கமலன் சாப்பிட்டுக் கொண்டே "அம்மா, அம்மா" என்று மெல்லமாக அழைத்தான். "ம்..என்னப்பா சொல்லு" என அம்மா கேட்க,
"அம்மா அது வந்து இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆசிரியர் தின விழா கொண்டாடுறாங்க, எங்களுக்கு படிச்சு கொடுத்த கிலாஸ் டீச்சருக்கு என் நண்பர்கள் எல்லாம் பரிசு கொடுக்குறாங்க" என்று கூறி கதையை சிறிது நிறுத்தினான். அம்மா கமலனைப் பார்த்து "ம்..அதனால?" என, "இல்லம்மா நானும் ஏதாச்சும் வாங்கி....கொ...கொடுக்கலாமேன்னு ஆசைப்படுறேன் மா" என்று இழுத்து இழுத்து சொல்லி முடித்தான் கமலன். அதற்கு அம்மா "கமலா நீ சொல்லறது சரிதான் இவ்வளவு நாள் படிச்சு கொடுத்த டீச்சருக்கு பரிசு வேண்டி கொடுக்கனுதாப்பா, ஆனா எங்க நிலை உனக்குத் தெரியாதா, பரிசு வேண்டனும்னா நிறைய காசு வேணுமே அதற்கு எங்க போறது, டீச்சருக்கு வாழ்த்து மட்டும் சொல்லுப்பா போதும், எங்க நிலைமய அவங்க புரிஞ்சுக்குவாங்க. சரியா. ம்..சரி நீ கிளம்புப்பா நேரமாச்சு"என்றார். கமலனின் அம்மா சொல்வது உண்மைதான், அவனது குடும்பம் மிக ஏழைதான், அவனால் ஆசிரியருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பது இயலாததுதான். கமலனும் அம்மா சொல்வதும் சரிதான், "பணம் இல்லத்தான்" என்று எண்ணி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
போகும் வழியில் கமலன் "என்ன இருந்தாலும் ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்கனுமே, ச்சே பணமும் இல்ல, என்ன செய்வது" என்று எண்ணினான். சிந்தித்துக் கொண்டே நடந்து செல்கையில் மேலே இருந்து ஓர் அழகான இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன் முன்னால் வீழ்ந்தது."என்ன விழுந்துச்சு?" என்று குனிந்து அவ் இலையை எடுத்தான்."அட இந்த இலை இவ்வளவு அழகாக இருக்கு" என்று அந்த இலையை பின்னும் முன்னும் திருப்பி திருப்பி பார்த்தான். சற்று என்று அவனுக்கொரு யோசனை தோற்றிற்று. "இப்படிச் செய்தா என்ன? இந்த இலையிலேயே ஓர் அழகான வாழ்த்த எழுதி டீச்சரிடம் கொடுத்துருவோம். வெறும் வாழ்த்தைச் சொல்லாம இதையும் கொடுத்தா டீச்சருக்கு பரிசும் கொடுத்த மாதிரி இருக்கும்ல" என்பதுதான் அவனது யோசனை. அவ்வாறே இலையில் எழுதி அவனிடம் இருந்த ஓர் சிறிய பையினுல் வைத்துக் கொண்டான்.
பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் அவர் அவர் வகுப்பறைக்குச் சென்றனர். கமலனின் வகுப்பறையினுல் அவ்வகுப்பு ஆசிரியை வந்தவுடன் மாணவர்கள் அவரை சூழ்ந்த்து கொண்டனர். அனைவரும் தாங்கள் வைத்திருந்த பரிசுப் பொருட்களை ஆசிரியருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். அப் பரிசுப் பொருட்களை பார்த்தவுடன் கமலனுக்குச் சற்று தயக்கம் வந்துவிட்டது "எல்லா அப்படித்தான் பரிசு கொடுக்குறாங்க நான் எப்படி இதப் போய் கொடுக்கிறது,டீச்சர் என்ன நினைப்பாங்க? ச்சே...ம்.." என்று தனக்குள் அலட்டினான். "இருந்தாலும் கொடுப்போம், என்ன நினைச்சாலும் பருவால்ல" என்று சற்று தெளிவானான். ஆசிரியரின் அருகில் சென்றான். "டீச்சர் ஹாப்பி டீச்சர்ஸ் டெய்!" என்று தனது சட்டைப் பையினுல் இருந்து அந்தப் பையை எடுத்து நீட்டினான். ஆசிரியரும் "ரொம்ப நன்றி கமலன்" என்று அதை வாங்கிக் கொண்டார்.
அதைப் பிரித்தும் பார்த்தார். அழகான இலை ஒன்று இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த இலையில் கமலன் எழுதியிருந்த வாழ்த்தை வாசித்து வியர்ந்தார். தன்மேல் கமலனுக்கு உள்ள பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். கமலனை ஆரத் தழுவிக் கொண்டார் "ரொம்ப நன்றி கமலா மத்தவங்க கொடுத்த பரிசை விட எனக்கு இதுதான் விலையுயர்ந்த பரிசு",உன்னிடம் பணம் இல்லாட்டியும் ஏதாவது கொடுக்கனுமே என்று நினைச்ச பார்த்தியா! நீ உண்மையில் உயர்ந்தவந்தான்" என்றார். கமலானால் ஆசிரியரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கொண்டான். அன்றய தினம் கமலனுக்கும் சரி அந்த ஆசிரியைக்கும் சரி ஓர் மறக்க முடியா நாள் ஆனது.
கமலன் "இதோ வருகிறேன்" என்று உள்ளிருந்து கூரல் கொடுத்தான். சற்றேன்று ஏதோ நினைவு வர "அடக்கடவுளே எப்படி மறந்தேன்! அம்மாவிடம் கேட்கனுமே, ஆனா அம்மா ம்.. முடியாதுன்னுதா சொல்லுவா, இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்." என்று தனக்குள் கூறிக் கொண்டான் கமலன். ஒருவாறு சாப்பிட வந்த கமலுனுக்கு அம்மா சாப்பாடு போட்டுக் கொடுத்தார். கமலன் சாப்பிட்டுக் கொண்டே "அம்மா, அம்மா" என்று மெல்லமாக அழைத்தான். "ம்..என்னப்பா சொல்லு" என அம்மா கேட்க,
"அம்மா அது வந்து இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆசிரியர் தின விழா கொண்டாடுறாங்க, எங்களுக்கு படிச்சு கொடுத்த கிலாஸ் டீச்சருக்கு என் நண்பர்கள் எல்லாம் பரிசு கொடுக்குறாங்க" என்று கூறி கதையை சிறிது நிறுத்தினான். அம்மா கமலனைப் பார்த்து "ம்..அதனால?" என, "இல்லம்மா நானும் ஏதாச்சும் வாங்கி....கொ...கொடுக்கலாமேன்னு ஆசைப்படுறேன் மா" என்று இழுத்து இழுத்து சொல்லி முடித்தான் கமலன். அதற்கு அம்மா "கமலா நீ சொல்லறது சரிதான் இவ்வளவு நாள் படிச்சு கொடுத்த டீச்சருக்கு பரிசு வேண்டி கொடுக்கனுதாப்பா, ஆனா எங்க நிலை உனக்குத் தெரியாதா, பரிசு வேண்டனும்னா நிறைய காசு வேணுமே அதற்கு எங்க போறது, டீச்சருக்கு வாழ்த்து மட்டும் சொல்லுப்பா போதும், எங்க நிலைமய அவங்க புரிஞ்சுக்குவாங்க. சரியா. ம்..சரி நீ கிளம்புப்பா நேரமாச்சு"என்றார். கமலனின் அம்மா சொல்வது உண்மைதான், அவனது குடும்பம் மிக ஏழைதான், அவனால் ஆசிரியருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பது இயலாததுதான். கமலனும் அம்மா சொல்வதும் சரிதான், "பணம் இல்லத்தான்" என்று எண்ணி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
போகும் வழியில் கமலன் "என்ன இருந்தாலும் ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்கனுமே, ச்சே பணமும் இல்ல, என்ன செய்வது" என்று எண்ணினான். சிந்தித்துக் கொண்டே நடந்து செல்கையில் மேலே இருந்து ஓர் அழகான இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன் முன்னால் வீழ்ந்தது."என்ன விழுந்துச்சு?" என்று குனிந்து அவ் இலையை எடுத்தான்."அட இந்த இலை இவ்வளவு அழகாக இருக்கு" என்று அந்த இலையை பின்னும் முன்னும் திருப்பி திருப்பி பார்த்தான். சற்று என்று அவனுக்கொரு யோசனை தோற்றிற்று. "இப்படிச் செய்தா என்ன? இந்த இலையிலேயே ஓர் அழகான வாழ்த்த எழுதி டீச்சரிடம் கொடுத்துருவோம். வெறும் வாழ்த்தைச் சொல்லாம இதையும் கொடுத்தா டீச்சருக்கு பரிசும் கொடுத்த மாதிரி இருக்கும்ல" என்பதுதான் அவனது யோசனை. அவ்வாறே இலையில் எழுதி அவனிடம் இருந்த ஓர் சிறிய பையினுல் வைத்துக் கொண்டான்.
பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் அவர் அவர் வகுப்பறைக்குச் சென்றனர். கமலனின் வகுப்பறையினுல் அவ்வகுப்பு ஆசிரியை வந்தவுடன் மாணவர்கள் அவரை சூழ்ந்த்து கொண்டனர். அனைவரும் தாங்கள் வைத்திருந்த பரிசுப் பொருட்களை ஆசிரியருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். அப் பரிசுப் பொருட்களை பார்த்தவுடன் கமலனுக்குச் சற்று தயக்கம் வந்துவிட்டது "எல்லா அப்படித்தான் பரிசு கொடுக்குறாங்க நான் எப்படி இதப் போய் கொடுக்கிறது,டீச்சர் என்ன நினைப்பாங்க? ச்சே...ம்.." என்று தனக்குள் அலட்டினான். "இருந்தாலும் கொடுப்போம், என்ன நினைச்சாலும் பருவால்ல" என்று சற்று தெளிவானான். ஆசிரியரின் அருகில் சென்றான். "டீச்சர் ஹாப்பி டீச்சர்ஸ் டெய்!" என்று தனது சட்டைப் பையினுல் இருந்து அந்தப் பையை எடுத்து நீட்டினான். ஆசிரியரும் "ரொம்ப நன்றி கமலன்" என்று அதை வாங்கிக் கொண்டார்.
அதைப் பிரித்தும் பார்த்தார். அழகான இலை ஒன்று இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த இலையில் கமலன் எழுதியிருந்த வாழ்த்தை வாசித்து வியர்ந்தார். தன்மேல் கமலனுக்கு உள்ள பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். கமலனை ஆரத் தழுவிக் கொண்டார் "ரொம்ப நன்றி கமலா மத்தவங்க கொடுத்த பரிசை விட எனக்கு இதுதான் விலையுயர்ந்த பரிசு",உன்னிடம் பணம் இல்லாட்டியும் ஏதாவது கொடுக்கனுமே என்று நினைச்ச பார்த்தியா! நீ உண்மையில் உயர்ந்தவந்தான்" என்றார். கமலானால் ஆசிரியரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கொண்டான். அன்றய தினம் கமலனுக்கும் சரி அந்த ஆசிரியைக்கும் சரி ஓர் மறக்க முடியா நாள் ஆனது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|