Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
நேற்றைய அரசியல் .
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
நேற்றைய அரசியல் .
டில்லி பார்லிமென்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில், பகத்சிங்கும், அவரது தோழர்கள், முப்பது பேரும் கைது செய்யப்பட்டனர். இது, "லாகூர் சதி வழக்கு' எனப்பட்டது.
லாகூர் சதி வழக்கில், வங்காளத்தைச் சேர்ந்த ஜாதின் தாஸ், ஒரு குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்; இவர், சுபாஷ் சந்திர போசுக்கு வேண்டப்பட்டவர்.
லாகூர் சிறையில், குற்றவாளிகள் மிகவும் சித்திரவதைக்கு ஆளாயினர். தீவிர குற்றவாளிகளை, அரசியல் குற்றவாளிகள் போல் நடத்த வேண்டும் என, ஜாதின் தாஸ் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். நேரு, அவரை சிறையில் சந்தித்து, உண்ணாவிரதத்தை நிறுத்த முயன்றார்; முடியவில்லை.
மொத்தம், 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, செப்., 12, 1929ல் மரணமடைந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய, மராட்டியம், பஞ்சாப், வங்காள மாநிலங்கள் போட்டியிட்டன. இறுதியில், சுபாஷ் விருப்பப்படி, தாஸ் உடல், லாகூரிலிருந்து, கோல்கட்டாவிற்கு தனி ரயிலில் கொண்டு வரப்பட்டது. வழி நெடுக, லட்சக்கணக்கான இந்தியர்கள் மரியாதை செலுத்தினர். கோல்கட்டாவில், தாசின் உடலைப் பெற்று, தகனம் செய்தார் நேதாஜி. அவரின் சாம்பலை எடுத்து, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் நெற்றியிலிட்டு, "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்...' என்று வீர சபதம் எடுத்தனர்.
ஜாதின் தாசின் உண்ணாவிரதத்தால் உண்டான மரணத்தை கண்டு கொள்ளவேயில்லை; ஒரு வார்த்தை வருத்தமும் தெரிவிக்கவில்லை காந்தி. அவர் ஆசிரியராக இருந்த, "யங் இந்தியா'வில், பொதுவாக எல்லா செய்திகளும் வரும்; இளைஞர் தாசின் மரணத்தைப் பற்றி, ஒரு வரி கூட வரவில்லை.
மோதிலால் நேரு, தனக்குப் பின், தன் மகன் தலைவனாக வருவதிலேயே குறியாக இருந்தார். அதே நேரத்தில், நேருவும், சுபாஷ் சந்திரபோசும் இணைந்து இருப்பது, காந்திஜிக்கே கவலையை உண்டாக்கியது. இவர்களைப் பிரித்து இடதுசாரிகள் தாக்கத்தைக் குறைக்க விரும்பினார்; எனவே, நேருவைத் தலைவராக்கினார்.
நேருவே, தன் சுயசரிதையில், "நான் காங்கிரஸ் தலைமைப் பதவியை, முன்புற வழியாகவோ, பின்புற வழியாகவோ சென்று அடையவில்லை; ஒரு மர்மக்கதவின் மூலம் அடைந்தேன்...' என்றார்.
— மா.சு.அண்ணாமலை எழுதிய, "இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு' நூலிலிருந்து...
***
கணேசபிள்ளை என்பவர், சரித்திர கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வமுடையவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, கணேசபிள்ளை உறவினர். அந்த வகையில், அவர் வந்து போகும் போதெல்லாம், கவிமணிக்கு பழக்கமாகி விட்டார். கணேசபிள்ளை சற்று கமுக்கமான பேர்வழி; யாரிடமும் மனம்விட்டு, வெளிப்படையாக பேச மாட்டார்.
ஒரு நாள் கணேசபிள்ளை, கையில் ஒரு பெரிய காகிதக்கட்டுடன் வந்தார். கவிமணி அவரிடம், "தாள் கட்டெல்லாம் இருக்கிறதே... என்ன விஷயம்?' என்று கேட்டார். சரியான பதில் கூறாமல், ஏதோ சொல்லி சமாளித்தார் கணேசபிள்ளை.
அந்த கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, கணேசபிள்ளையின் மைத்துனனான இளைஞனிடம் தெரிவித்தார். அவன் அந்த கட்டையே எடுத்து வந்து விட்டான்; பிரித்துப் படித்தார் கவிமணி.
அதில் கண்ட செய்தி, சுங்கான் கடை எனும் இடத்துக்குப் பக்கத்தில், தொன்மை வாய்ந்த கோட்டை ஒன்றிருப்பதும், அதற்கான ஆதாரங்களும் தான்!
கவிமணி, அதைப் பற்றி சில குறிப்புகள் எடுத்துக் கொண்டு, காகிதக் கட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
ஒரு வாரம் தங்கிவிட்டு, திருவனந்தபுரம் போய் சேர்ந்தார் கணேசபிள்ளை. ஆனால், அவர் போய் சேரும் முன்பாகவே, "திருவனந்தபுரம் டைம்ஸ்' எனும் ஆங்கில வார இதழில், ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும், திடுக்கிட்டுப் போனார் கணேசபிள்ளை.
"தாம் பல நாள் முயன்று செய்த ஆராய்ச்சி, அப்படியே, தக்க சான்றுகளுடன் கட்டுரையாக வெளிவந்திருக்கிறதே... என்ன வியப்பு! இதை எழுதிய, நாஞ்சில் நாடன் யார்?' என திகைத்தார்.
கடைசி வரை திகைப்பு தான். கவிமணியின் இளமைக் குறும்புகளுள் இதுவும் ஒன்று.
— சதாசிவம் எழுதிய, "கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன் (நன்றி http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5649&ncat=2 )
லாகூர் சதி வழக்கில், வங்காளத்தைச் சேர்ந்த ஜாதின் தாஸ், ஒரு குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்; இவர், சுபாஷ் சந்திர போசுக்கு வேண்டப்பட்டவர்.
லாகூர் சிறையில், குற்றவாளிகள் மிகவும் சித்திரவதைக்கு ஆளாயினர். தீவிர குற்றவாளிகளை, அரசியல் குற்றவாளிகள் போல் நடத்த வேண்டும் என, ஜாதின் தாஸ் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். நேரு, அவரை சிறையில் சந்தித்து, உண்ணாவிரதத்தை நிறுத்த முயன்றார்; முடியவில்லை.
மொத்தம், 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, செப்., 12, 1929ல் மரணமடைந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய, மராட்டியம், பஞ்சாப், வங்காள மாநிலங்கள் போட்டியிட்டன. இறுதியில், சுபாஷ் விருப்பப்படி, தாஸ் உடல், லாகூரிலிருந்து, கோல்கட்டாவிற்கு தனி ரயிலில் கொண்டு வரப்பட்டது. வழி நெடுக, லட்சக்கணக்கான இந்தியர்கள் மரியாதை செலுத்தினர். கோல்கட்டாவில், தாசின் உடலைப் பெற்று, தகனம் செய்தார் நேதாஜி. அவரின் சாம்பலை எடுத்து, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் நெற்றியிலிட்டு, "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்...' என்று வீர சபதம் எடுத்தனர்.
ஜாதின் தாசின் உண்ணாவிரதத்தால் உண்டான மரணத்தை கண்டு கொள்ளவேயில்லை; ஒரு வார்த்தை வருத்தமும் தெரிவிக்கவில்லை காந்தி. அவர் ஆசிரியராக இருந்த, "யங் இந்தியா'வில், பொதுவாக எல்லா செய்திகளும் வரும்; இளைஞர் தாசின் மரணத்தைப் பற்றி, ஒரு வரி கூட வரவில்லை.
மோதிலால் நேரு, தனக்குப் பின், தன் மகன் தலைவனாக வருவதிலேயே குறியாக இருந்தார். அதே நேரத்தில், நேருவும், சுபாஷ் சந்திரபோசும் இணைந்து இருப்பது, காந்திஜிக்கே கவலையை உண்டாக்கியது. இவர்களைப் பிரித்து இடதுசாரிகள் தாக்கத்தைக் குறைக்க விரும்பினார்; எனவே, நேருவைத் தலைவராக்கினார்.
நேருவே, தன் சுயசரிதையில், "நான் காங்கிரஸ் தலைமைப் பதவியை, முன்புற வழியாகவோ, பின்புற வழியாகவோ சென்று அடையவில்லை; ஒரு மர்மக்கதவின் மூலம் அடைந்தேன்...' என்றார்.
— மா.சு.அண்ணாமலை எழுதிய, "இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு' நூலிலிருந்து...
***
கணேசபிள்ளை என்பவர், சரித்திர கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வமுடையவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, கணேசபிள்ளை உறவினர். அந்த வகையில், அவர் வந்து போகும் போதெல்லாம், கவிமணிக்கு பழக்கமாகி விட்டார். கணேசபிள்ளை சற்று கமுக்கமான பேர்வழி; யாரிடமும் மனம்விட்டு, வெளிப்படையாக பேச மாட்டார்.
ஒரு நாள் கணேசபிள்ளை, கையில் ஒரு பெரிய காகிதக்கட்டுடன் வந்தார். கவிமணி அவரிடம், "தாள் கட்டெல்லாம் இருக்கிறதே... என்ன விஷயம்?' என்று கேட்டார். சரியான பதில் கூறாமல், ஏதோ சொல்லி சமாளித்தார் கணேசபிள்ளை.
அந்த கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, கணேசபிள்ளையின் மைத்துனனான இளைஞனிடம் தெரிவித்தார். அவன் அந்த கட்டையே எடுத்து வந்து விட்டான்; பிரித்துப் படித்தார் கவிமணி.
அதில் கண்ட செய்தி, சுங்கான் கடை எனும் இடத்துக்குப் பக்கத்தில், தொன்மை வாய்ந்த கோட்டை ஒன்றிருப்பதும், அதற்கான ஆதாரங்களும் தான்!
கவிமணி, அதைப் பற்றி சில குறிப்புகள் எடுத்துக் கொண்டு, காகிதக் கட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
ஒரு வாரம் தங்கிவிட்டு, திருவனந்தபுரம் போய் சேர்ந்தார் கணேசபிள்ளை. ஆனால், அவர் போய் சேரும் முன்பாகவே, "திருவனந்தபுரம் டைம்ஸ்' எனும் ஆங்கில வார இதழில், ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும், திடுக்கிட்டுப் போனார் கணேசபிள்ளை.
"தாம் பல நாள் முயன்று செய்த ஆராய்ச்சி, அப்படியே, தக்க சான்றுகளுடன் கட்டுரையாக வெளிவந்திருக்கிறதே... என்ன வியப்பு! இதை எழுதிய, நாஞ்சில் நாடன் யார்?' என திகைத்தார்.
கடைசி வரை திகைப்பு தான். கவிமணியின் இளமைக் குறும்புகளுள் இதுவும் ஒன்று.
— சதாசிவம் எழுதிய, "கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன் (நன்றி http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5649&ncat=2 )
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேற்றைய அரசியல் .
உண்ணாவிரதமிருந்து ஒரு மனிதன் இறக்குறான் என்றால் அந்தக்காலம் மிகக்கொடியது
பகிர்வுக்கு நன்றி தோழரே
பகிர்வுக்கு நன்றி தோழரே
Similar topics
» நேற்றைய அரசியல்,இன்றைய வரலாறு!
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» எனது ஊர் பள்ளிவாசல் !நேற்றைய 27 சிறப்பு தொழுகையின் போது எடுக்கப்பட்ட படம் .
» அரசியல் வாதிக்கு....
» அரசியல் ஜோக்ஸ்
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» எனது ஊர் பள்ளிவாசல் !நேற்றைய 27 சிறப்பு தொழுகையின் போது எடுக்கப்பட்ட படம் .
» அரசியல் வாதிக்கு....
» அரசியல் ஜோக்ஸ்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|