சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

இறை பாதையில் வழி நடத்த காலத்துக்கு காலம் தூதர்கள் வந்தனர் Khan11

இறை பாதையில் வழி நடத்த காலத்துக்கு காலம் தூதர்கள் வந்தனர்

Go down

இறை பாதையில் வழி நடத்த காலத்துக்கு காலம் தூதர்கள் வந்தனர் Empty இறை பாதையில் வழி நடத்த காலத்துக்கு காலம் தூதர்கள் வந்தனர்

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 11:41

முற்று முழுதான பிரபஞ்சத்தையும் படைத்து, ஏனைய அனைத்துப் படைப்பினங்களையும் படைத்த தூயவன் அல்லாஹ், மனித வாழ்வு நேரான வழியில் சீராக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், குர்ஆன் கூறி நிற்கும் நேர் வழிகாட்டல்களை வழங்குவதற்காக, காலத்திற்குக் காலம், தான் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களை உலகிற்கு அனுப்பிவைத்தான். இறைவனது கட்டளைகள், ஏவல்கள் வஹி வாயிலாகப் பெறப்பட்டு, அத்தூதை மக்களுக்குச் சென்றடையச் செய்து நேர்வழி காட்டவேண்டியது இறைத்தூதர்களின் முக்கிய கடமையாக இருந்தது. இறைத்தூதர்களின் வரிசையில், முதலானவர் ஆதம் (அலை), முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அல்லாஹ்வின் ஏற்பாட் டின் படி ஒரு சங்கிலித் தொடரான சந்ததித்தொடர் இருந்து வந்தது.

அல்லாஹ்வினால் தேர்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள், அவ்வப்போது தோன்றும் மானிடரை இறை பாதையில் வழிநடாத்தி வந்தார்கள். அவர்கள் சகல அசுத்தங்களிலிருந்தும் தூய்மையாக்கப்பட்ட புனிதத்துவம் உடையவர்களாக திகழ்ந்தார்கள்.

*அவர்களை நாம் தேர்ந்தெடுத்து, நேரான வழியின் பால் அவர்களை நாம் செலுத்தினோம் (6:87)

*அல்லாஹ் தனது தூதர்கள் அனைவரினதும் சகல அசுத்தங்களையும் நீக்கி அவர்களை முற்று முழுதாகவே தூய்மையாக்கியுள்ளான். அதே வழியில் இறுதி இறைத்தூதராக வந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் முற்று முழுதாக தூய்மைப் படுத்தியுள்ளான்.

விசுவாசம், பக்தி, இறையச்சம், பிரசாரம், இறைவனன்றி யாருக்கும் அடிபணியாமை, நற்குணவியல்புகள், ஞானம்; என்பவற்றில் இறைத்தூதர்கள், மானிடர் அனைவரையும் விட மிகைந்தவர்களாக இருந்தார்கள். அதி சிறந்தவராக உலகிற்கோர் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

தூய்மை பெற்று புனிதம் மிக்கவர்களாக வாழ்ந்த இவர்கள், பாவஞ்செய்வது தவறுகள் புரிவது, மறதி போன்ற இறைவனால் வெறுக்கத்தக்க செயல்களை விட்டும் தூரமான பக்குவம் பெற்ற உள்ளங் கொண்டவர்களாக பரிணமித்தார்கள்.

உண்மையாக இவ்வகையான பரிசுத்த நிலை பரிபூரணத்துவ மிக்க ஆத்மீக-உயர்வினால் ஏற்பட்டவையாகும், இறைத்தூதர்கள் ஆத்மீக, ஆன்மீக ரீதியில் உயரிய பாங்கான இறை விசுவாசத்தையும், ஆழ்ந்த இறை ஞான அறிவையும் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்களின் இவ்வாறான பரிணத்துவமான நிலை அவர்களின் பரம்பரை வம்சம் நல் விழுமியங்கள், நாகரீகமாக நடைமுறை பழக்க வழக்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இறை அருட்கொடை என்பவற்றால் ஏற்பட்டதெனலாம்.

மேலும் தன் இறைத்தூதர்களின் விடயத்தில் தூயவன் அல்லாஹ் கொண்டிருக்கின்ற அதி விசேடமான அருட்பேறு தூயவர்களான நபி மார்களுக்கு இவ்வாறான மனப்பக்குவமும், மனமுதிர்ச்சியும் கிடைக்கப்பெறச் செய்துள்ளது. இறைவனோடு நெருங்கக் கூடிய அருட் பாக்கியத்தினால் இறைத்தூதர்களின் ஆத்மபலமும் உயர்வு மிக்கதாகக் காணப்படுகின்றது.

இவ்வாறான உயரிய தன்மை பூரண விசுவாசத்தையும் உயரிய ஞானத்தையும் வழங்குகின்றது. நற் பண்புகளினால் இவர்கள் பரிசுத்தமான தூயவர்களாக விளங்குவதுடன் புனிதத்துவம் உடையவர்களாகவும் மிளிர்கின்றார்கள்.

இவ்வாறான பரிசுத்த நிலை அவர்களின் பிறப்புக் காரணமாகப் பரம்பரை வழித் தோன்றல், நற் பழக்கவழக்க சீரிய நடைமுறைகள், இறை அருட்கொடைகள் என்பவற்றால் ஏற்படுவதெனலாம்.

மற்றவர் இவர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றக் கூடியதாக இவை அமைந்தன.

பரம்பரை சிறப்பியல்புகள் அமைந்த - தூய்மையும் புனிதமும் மிக்க உயர்ந்த வம்சத்தில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள் அவதரித்துள்ளார்கள் என்பதனை குர்ஆனும், ஹதீஸ்களும், அவை சார்ந்த வரலாறுகளும் சான்று பகர்கின்றன. இறைத் தூதர்களிடம் காணப்பட்ட ஆத்மீக நல விழுமியங்களும், பரிசுத்த நிலைமைகளும், புனிதத்தன்மையும் இவர்களது பிறப்பை உறுதிப்படுத்தும் பரம்பரை வாயிலாகவே கிடைக்கப்பெற்றுள்ளது எனலாம். இவ்வாறான நிகழ்வுகளை குர்ஆன் - சுன்னா சான்றுகள் அத்தாட்சி பகர்கின்றன.

இதன் அடிப்படையில் இறைத்தூதர் எம் பெருமான் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் அரேபிய உயரிய குறைஷ் வம்சத்தில், பனூஹாசிம் குடும்பத்தில் உலகிற்கே ஒளி விளக்காக அவதரித்தார்கள். உண்மை நட்பு, வீரம், தீரம், தூய்மை, நம்பிக்கை, விருந்தோம்பல், மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை என்பன அன்னாரின் குடும்பத்தின் சிறப்புப் பின்னணியாக அமைந்துள்ளதுடன் ஏனைய கோத்திரங்களை விடவும் பிரபல்யம் பெற்றிருப்பதுடன், வரலாற்றுச் சான்றுகளின் படி பொதுவாகப் பெருமானாரின் பெற்றோர்களின் குடும்பத்தினர் கண்ணியமும், கெளரவமும் மிக்க இறைவிசுவாசிகளாகவே காணப்பட்டார்கள்.

பாத்திமா முஹம்மத் ஸாதிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum