சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

மனைவியைப் பிரியாதே! Khan11

மனைவியைப் பிரியாதே!

2 posters

Go down

மனைவியைப் பிரியாதே! Empty மனைவியைப் பிரியாதே!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 13:21

மனைவியைப் பிரியாதே – குறுந்தொகை!

[ இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.

நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதற்காகவே இந்த பதிவு.]

சங்க இலக்கியம் எட்டுத் தொகையில் குறுகிய அடிகளையுடையதால், ‘‘குறுந்தொகை’’ என்றழைக்கப்படுவது, 206 புலவர்கள் பாடிய 401 பாடல்கள், இளம்பூரணார் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறுந்தொகைப் பாடல்களிலிருந்து மேற்கோள்காட்டியிருப்பதே அதன் தனிச் சிறப்பு.

பொருள் தேடச் செல்வதற்காக தலைவியை பிரிய நினைக்கிறான் தலைவன். அன்பு, ஆசை துறந்து, பொருள் தேடுவதற்காகப் துணையை பிரிவது அறிவுடைய செயலாகாது என்று தலைவனுக்குத் தலைவி எடுத்துரைப்பதாக கோப்பெருஞ்சோழன் பாடும் பாடல்

(20) அருளும் அன்பும் நீக்கித்துணை துறந்து / பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் / உரவோர் உரவோர் ஆக / மடவம் ஆக மடந்தை நாமே.

அருள் - இரக்கம்.

அன்பு - பிரியம்.

துணை துறந்து - மனைவியை விட்டு.

பொருள் வயிற் பிரிவோர் - பொருள் தேடுவதற்காக கணவன் மனைவியைப் பிரிவோர்.

உரவோர் ஆயின் - வலியோர் ஆனால்.

மடவம் - பேதமை.

மடந்தை நாமே - பெண் நாமே.

பொருள் தேடச் சென்ற தலைவன் கிடைத்த பொருளைக் கொண்டு திரும்புவேன் என்று கூறிச் சென்று நீண்ட நாட்களாகியும் திரும்பாமலிருப்பது நல்ல செயல் அல்ல. எனது துயரை அவர் அறியவில்லையே என்று மனம் பேதலிக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல்வார்த்தை கூறுகிறாள்;
துணைவன் பிரிவால் வாடும் தலைவியே கூடிய விரைவில் உன் துணைவர் உன்னிடம் வந்து சேர்வார் என்பதாக மோசிகீரனார் பாடும் பாடல்

(59) பதலைப் பாணிப்பரிசிலர் கோமான் / அதலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக் / குவளையடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் / தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் / கரம் பல விலங்கிய அரும் பொருள் / நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.

பதலைப் பாணி - வாய் அகன்ற பறை ஒலி.

பரிசிலர் கோமான் - அரசனிடத்தில் நன்கொடை கேட்டு நிற்பவர்.

அதலைக் குன்றம் - கீழுலகில் சிறுமலை.

அகல்வாய்க் குண்டு சுனை - அகன்ற வாயுடைய உருண்டை வடிவப் பாத்திரத்தில் மலை ஊற்று.

குவளையடு பொதிந்த - செங்கழு நீர்ப்பூ நிறைந்த.

குளவி நாறு நறு நுதல் - மலை மல்லிகை நாற்று மணம் மேலிட.

தவ்வென மறப்பரோ - குவிதலை மறந்து விடுவாரோ.

கரம் பல விலங்கிய - கை கலங்கிய.

அரும்பொருள் - செல்வம் பெற.

நிரம்பா ஆகலின் நீடலோ - நிறைதல் ஆகாமல் முழுவதும் நீளுதலோ.

கணவன் நுகர்ந்து சென்ற என் பெண்மை பெரிய யானையால் ஒடிக்கப்பட்ட மரக்கிளைபோல் கிழேயும் விழாமல் வாடியும் உலராமல் நாரின் தொடர்பினால் தலைக்கும் நிலைபோல் உள்ளது. ஊரார் தூற்றுதலுக்கு பயந்து என் ஆசை, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன் என்று தனது நிலைப்பாட்டை தோழிக்கு தலைவி எடுத்துரைப்பதாக ஆலந்தூர் கிழார் பாடல்

(112) கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் / எள் அற விடினே உள்ளது நாணே / பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ / நாருடை ஓசியல் அற்றே / கண்டிசின் தோழி அவர் உண்டான் நலனே.

கௌவை அஞ்சின் - பிறர் கூறும் மொழிக்கு பயந்தால்.

காமம் எய்க்கும் - ஆசை அம்பு செலுத்தும்.

எள் அறவிடினே - சிறியது முற்றிபெரிதாக உதயமானால்.

நாணே - வெட்கமே.

பெருங் களிறு - பெரிய ஆண்யானை.

வாங்க - அழைக்க.

முரிந்து படா - பெருங்கொடி நீங்கியது.

நாருடை ஓசியல் அற்றே - கிளையின் நரம்பு பெறுவது அவ்வளவே.

கண்டிசின் தோழி - கண்டேன் தோழி.

அவர் உண்ட - அவர் நன்றி.

சங்க காலப் பெண்கள் கணவனைப் பிரிந்து கைசேதப்பட்ட நிலை பிரிவால் எழும் துயரைப் பார்த்தோம். அதே நிலை இன்றைய பெண்களின் வாழ்விலும் நேற்றும் தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது. மணம் செய்த மனைவியை உள்-ளூரில் விட்டு பொருளீட்டுவதற்காக ஆண் அயல் தேசம் செல்வது பெண்கள் வாழ்வை பாலைவனம் ஆக்குவதோடு சமூகச் சீரழிவிற்கு வித்திடுகிறது.
இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.

நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதுவே சங்க இலக்கியம் சொல்லும் பாடம்.

-சோதுகுடியான், நவம்பர் 2010 முஸ்லிம் முரசு,
நன்றி நிடுர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியைப் பிரியாதே! Empty Re: மனைவியைப் பிரியாதே!

Post by mufees Fri 24 Jun 2011 - 13:25

நல்ல பதிவு நன்றி :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum