சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Khan11

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

4 posters

Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by அப்துல்லாஹ் Thu 30 Jun 2011 - 7:42

இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொன்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புனரமைப்புப் பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.

1400 வருடங்கள் தொன்மையான இப்பள்ளி வாசல் தொழுகையாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சேரமான் ஜும்மா மசூதி ஒரு கலாசார சின்னம் என்பதால் அதன் உண்மை வடிவத்திலேயே அது பாதுகாக்கப்படவேண்டும் என்று முகமது சையது கூறியுள்ளார்.

சேரமான் பெருமாள் வாழ்ந்த காலத்தில், மாலிக் பின் தினார் என்பவரால் கி.பி. 629 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வரும் கதையின்படி, சேரமான் பெருமாள் மக்கா நகர் சென்று இறைத்தூதுவர் முகமது நபியை நேரில் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். மக்காவிலிருந்து திரும்புகையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மாலிக் பின் தினாரும் மற்றும் சிலரும் கொடுங்களூருக்கு வந்து, சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவியபின் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதிய கடிதத்தை ஆட்சியாளர்களிடம் கொடுத்துள்ளனர். மாலிக் பின் தினாரும் அவரது சகாக்களும் மசூதி கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மசூதியின் தலைமை காஸியாக இருந்து வந்த மாலிக் பின் தினார் அரேபியாவிற்கு திரும்பவேண்டி வந்தபோது, அவரது மருமகன் ஹபீப் பின் மாலிக் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

இம்மசூதி முதன்முதலாக 11ஆவது நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. இறுதியாக 1974ம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. அப்போது பழைய மசூதியின் முன் பகுதியை இடித்துவிட்டு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. மசூதியின் உட்புறமிருந்த தொன்மையான பகுதிகள் அப்படியே விடப்பட்டன. தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்ப 1996 மற்றும் 2003ம் ஆண்டுகளில் மசூதி அகலப்படுத்தப்பட்டது. இவ்வாறு முகமது சையது கூறியுள்ளார்.

புனரமைப்பு வேலைக்கான மண் பரிசோதனை செய்யும் பணி முடிந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வேலைகள் துவங்கி மூன்று வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மசூதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மசூதி புனரமைக்கப்பட்டபின், பூமி மட்டத்தின் கீழ் 3,000 பேர் தொழக்கூடிய இரு ஹால்களைக் கொண்டதாக இருக்கும். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல பிரபலங்கள் இம்மசூதிக்கு வருகை புரிந்துள்ளனர். மசூதியில் இந்து முறைப்படி “வித்யாரம்பம்” (எழுத்துலக பிரவேசத்தின் துவக்கம்) எனும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.



inneram
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty Re: 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 30 Jun 2011 - 7:51

இத்தனை பழைமை வாய்ந்த பள்ளிவாசல் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு புணரமைக்கப்பட்டது என்பது ஆச்சரியம் ஏனெனில் பழைய பள்ளிவாசல்களை தரைமட்டமாக அழித்துவிட்டுத்தான் புதிய பள்ளி வாசல்களை கட்டுகிறார்கள்

அருமையான செய்தி நன்றி பகிர்வுக்கு


1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty Re: 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by ஹம்னா Thu 30 Jun 2011 - 8:11

சாதிக் wrote:இத்தனை பழைமை வாய்ந்த பள்ளிவாசல் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு புணரமைக்கப்பட்டது என்பது ஆச்சரியம் ஏனெனில் பழைய பள்ளிவாசல்களை தரைமட்டமாக அழித்துவிட்டுத்தான் புதிய பள்ளி வாசல்களை கட்டுகிறார்கள்

அருமையான செய்தி நன்றி பகிர்வுக்கு
1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  111433
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty Re: 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by அப்துல்லாஹ் Thu 30 Jun 2011 - 8:57

சாதிக் wrote:இத்தனை பழைமை வாய்ந்த பள்ளிவாசல் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு புணரமைக்கப்பட்டது என்பது ஆச்சரியம் ஏனெனில் பழைய பள்ளிவாசல்களை தரைமட்டமாக அழித்துவிட்டுத்தான் புதிய பள்ளி வாசல்களை கட்டுகிறார்கள்

அருமையான செய்தி நன்றி பகிர்வுக்கு

உண்மை சாதிக் அவர்களே உண்மை...இது போன்ற நடை முறைகளால் நம்மில் உன்னதமான நம்முடன் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து மரித்துப் போன இறை நேசர்களை நினைவில் கொள்ளலாம் அல்லவா....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty Re: 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by நண்பன் Thu 30 Jun 2011 - 12:50

தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி உறவே :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு  Empty Re: 1400 வயதுப் பள்ளிவாசல் புனரமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum