Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன.
இவை ஆசியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
அரேபிய மக்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்
படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது
(திமில் என்பது 45Kg எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக உணவோ நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும் உணவாகவும் மாற்றி கொள்கிறது
உணவோ நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும், நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (PUMP)
குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றி கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது
குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்க்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும்
ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் நீர் 12% குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும் ஆனால் ஒட்டகம் 40% நீரை இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்
குட்டி போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை
நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும் அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும் பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் நிகழ்ந்துவிடும் (EXPLOSIVE HEAT DEATH)
ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டுமே குறையுமே தவிர அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமலிருக்கும்
நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவேளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) நீர் போதை ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும் (WATER INTOXICATION) ஆனால் ஒட்டகம் வறட்ச்சிகு பிறகு 100 லிட்டர் குடிக்கும் ஆனால் சாகாது
அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும் அப்பொழுது தான் அதற்கு வியர்வையே வரும் (மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் காய்ச்சல் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும்
ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம்
ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது நம்முடைய சிறுநீரில் அதிக தாது (உப்புகள்) கழிவுகள் 8 சதவீதமும் 92 சதவீதம் நீரும் இருக்கும்
ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40%க்கும் அதிகமாக கழிவும் குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது
மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம் அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதனுடைய சிறுநீரகம்(MICROBIAL SYNTHESIS)
மற்ற பிராணிகளின் மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்து விடலாம் என்று மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ கூருகிறார் அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம் ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும் ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்பு தான் காரணம்
அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது
மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகின்றது பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு
கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக்கொள்கிறது
நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும் நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும் ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்க்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது
அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான் அதன் உடல் அமைப்பு ஆகும்
அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்
இப்படியாக சுவாசம் சிறுநீர் வியர்வை எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம்
மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும் ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் SNOW SHOES ஆகும்)
அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 Kgs வரை எடையுள்ள ஒட்டகம் 450 Kgs வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலின் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது
குட்டி போட்டு பால் கொடுக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (ANKLE JOINT) மட்டும் இருக்கும்
ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும் அதனால் தான் ஒட்டகம் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது
மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதி ஒட்டகத்திற்கு உள்ளது
அதன் காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது
அதன் இமையிலுள்ள நீண்ட முடிகள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கி விடாமல் தடுத்து விடுகிறது (SUN CLASS)
கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது மேலும் பாலை சூரியன் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது
ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரபிகள்
எங்கேயாவது தூரத்தில் உணவோ நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12அடி உயரத்தில் தலை இருக்கும்)
ஒட்டகங்கள் அதிகமான அளவு பாலை தருகிறது ஒட்டகப்பாலில் அபரிதமான அளவு வைட்டமின் C உள்ளது
மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரயில் சிதறும் அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்
பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும் அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்
எந்த அளவிற்கு எனறால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும் மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது
மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்
இவ்வாரு தனது உடல் அமைப்பு அதன் செயல்பாடு அனைத்தும் அற்புதமானதாக கொண்ட இந்த ஒட்டகம் தானாகவே பரிணாம வளர்ச்சியின் மூலம் இதை பெற்றுக் கொண்டதா அல்லது இறைவனின் வல்லமையா என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்
திரு-குர்-ஆன் 88வது அத்தியாயம் 17வது வசனம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா ? என்று நம்மை பார்த்து கேட்கிறது இந்த கேள்வியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை பல பல சிந்திப்போம்…..செயல்படுவோம்……வெற்றிபெருவோம்….. இன்ஷாஅல்லாஹ்...
இந்த கட்டூரையின் ஒட்டகம் பற்றிய அறிவியல் உண்மைகளை தொகுத்துக் கொடுத்த சகோ.அதிரை ஃபாருக் அவர்களுக்கு எமது இனையதளத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!!
http://tndawa.blogspot.com/2011/07/blog-post.html
Last edited by abuajmal on Mon 1 Aug 2011 - 23:06; edited 1 time in total
Re: ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !
சிறந்த பகிர்விற்க்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !
சிறந்த பகிர்வுக்கு நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மீனுவின் செல்லப் பிராணி
» வெட்கப்படும் பிராணி மனிதன்தான்...(பொன்மொழிகள்)
» வௌவால் என்பது எந்த வகைப் பிராணி?
» அதிசய மலர்கள் சில
» அதிசய பிறவி
» வெட்கப்படும் பிராணி மனிதன்தான்...(பொன்மொழிகள்)
» வௌவால் என்பது எந்த வகைப் பிராணி?
» அதிசய மலர்கள் சில
» அதிசய பிறவி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|