Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?
Page 1 of 1
ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?
நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினியரிங் காலேஜ்-ல படிக்கனும்னா பொட்டி பொட்டியாப் பணங்கட்டனுமாம்... நம்மகிட்ட பொட்டி வாங்கவே பணமில்ல... வேறவழில்யில்ல, நமக்குத் தெரிஞ்ச காலேஜ்-ல சொல்லி ஏதாவது பி.எஸ்.சி-ல இடம் வாங்கித்தாறேன். "அதுலயாவது" நிறைய மார்க் எடுத்து உருப்புடப் பாருப்பானு பல வீடுகள்ல இந்த சங்கீதம் மே மாத இறுதில அரங்கேறும்.
பி.எஸ்.சி-னு முடிவானதுக்கப்புறம் படிச்ச பெரியவங்களோட கலந்தாலோசிச்சு மேத்ஸ் எடுக்கலாமா? ஃபிசிக்ஸ் எடுக்கலாமா? கெமிஸ்ட்ரி எடுக்கலாமான்னு? பலபேரு உயிரை எடுப்பாங்க. அதுல சில ஆளுக கெமிஸ்ட்ரி வேணாம் சார்... அவன் போயி ஆசிட்டுகள கலக்க வேண்டியிருக்கும். அது டேஞ்சரு. மேத்சும் வேணாம். அதைப் படிச்சா வாத்தியாரப் போறதுக்குத் தான் அதிக வாய்ப்பு .அதுனால, பேசாம ஃபிசிக்ஸ் படிக்க வைங்க. எதிர்காலத்துல சைண்டிஸ்டா போகலாம் (நம்ம லெவல் அவங்களுக்குத் தெரியல. பாவம் விட்டுருவோம்). இல்லைனா எம்.சி.ஏ படிக்கலாம். ஒன்னுமே முடியலைன்னா வாத்தியாராப் போகலாம்( வாத்தியார் வேலைக்கு தகுதி எப்புடி வச்சிருகாய்ங்க பாருங்க).- ன்னு சொல்லி ஒருவழியா தெளிவடைய(!?) வச்சிருவாங்க.
தம்பி நானும் விசாரிச்சிட்டேன். எம்.சி.ஏ படிச்சா டாக்டர் படிப்பு அளவுக்கு சம்பாரிக்கலாமாம். அதுனால ஒரு ஃசேப் சைடுக்கு பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படி. அதுல நல்ல மார்க் எடுத்தீன்னா எம்.சி.ஏ படிச்சிட்டு வேலைக்கு போயி நல்லா சம்பாதிக்கலாம். கம்பியூட்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்காம்(அதுசரி, கம்பியூட்டரை வச்சு ஜோசியம் பார்த்த கோஷ்டிதானே நம்ம ஆளுங்க). அப்படி இப்படின்னு சொல்லி நமுக்கு புடிக்காத பாடமான ஃபிசிக்ஸ்-ல சேர்த்துவிட்டாங்க. என்ன சப்ஜெக்டுங்க அது... முதல் விதி, இரண்டாம் விதின்னு உயிரை எடுப்பானுங்க. நம்ம விதியையே நம்ம நொந்துகிட்டு இருக்கும்போது இதுல இவனுக விதி... என்ன பன்றது எல்லாம் "தல"விதி.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு உறுதியா நம்பி நல்ல மார்க் எடுத்து... எம்.சி.ஏ சீட்டும் வாங்கியாச்சு. அதை படிச்சு முடிச்சிட்டு ஒரு வழியா வேலைக்கும் சேர்ந்தாச்சு. இந்த வேலையில பிறப்பிக்கப்படுகிற லேங்குவாஜ்/டெக்னாலஜியை கணக்கெடுத்தா நம்ம மக்கள்தொகையை விட அதிகமா இருக்கும் போலங்க. பத்தாக்கொறைக்கு வெர்சன் வேற 1.0 , 2.0 -ன்னு. கருமம்டா சாமி. இந்தப் படிப்பை படிச்சவனுக்கெல்லாம் மூலம் நட்சத்திரமா இருக்கும் போல. எப்போதும் குடும்பத்தைப் பிரிஞ்சே இருப்பானுக. இந்த வேலை மூலம் ஆதி மூலம் முதல் பேதி "மூலம்" வரை நட்பாகக் கிடைக்கும். இதுல வேற இந்த ட்ரெய்னிங் அந்த ட்ரெய்னிங்-னு போட்டு உயிரை எடுப்பாணுக. நம்மெல்லாம் மத்தியான சோறு ஓசியாப் போடுற ட்ரெய்னிங் மட்டும்தான் கலந்துக்கிறது. நல்லா ட்ரெய்னிங் எடுத்து நிறைய சம்பாதிக்கிறது எடுத்துக்கு மனுஷன் வயிறார சாப்புடுறதுக்குத்தானே. அதுக்கு நேரடியாவே சாப்பாடு போடுற ட்ரெய்னிங்-ல கலந்துக்கிறது தானே புத்திசாலித்தனம்.
எப்பவாவது அதிசயமா ஒருவாரம், ரெண்டுவாரம் லீவு குடுப்பாணுக. சரி வீட்டுல போயி பெத்தவங்களோடவும், மத்தவங்களோடவும் சந்தோசமா இருந்துட்டு வரலாம்னு போனா.... அங்க சில கொடுமை "தலப்பா" (தலைப்பாகை) கட்டிக்கிட்டு ஆடும். கிராமப்புறம் வேற... நம்ம கூட வேற டெக்னாலஜி-ல வேலை பாக்குறவனுக்கே நம்ம என்ன வேலை பாக்குறம்னு புரியவைக்க முடியாது. இதுல இவங்களுக்கு புரியவைக்கனுமா... விளங்கிடும்...
அவங்க கேக்குற கேள்வியெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா...? கம்புட்டர் வேலை பாக்குறங்கிரியே உனக்கு கம்பியூட்டர் செய்யத் தெரியுமா? இந்த ஜோசியம் சொல்ற கம்பியூட்டர் உங்க கம்பெனில செய்யிறாங்களா? அது எவ்வளவு விலை இருக்கும்? இந்த கம்பியூட்டர் அப்புடி என்னதான் பண்ணும் அதைப்போயி இவ்வளவு விலை சொல்றானுக? புதுசா தொறந்த ராசி மளிகைக்கடையில கூட கம்பியூட்டர் பில்லிங் தான். அங்க நமக்கு தெரிஞ்ச பயதான் வேலை பாக்குறான். அவனுக்கு மூவாயிரம் சம்பளந்தான் தாராக. அவன் ரொம்ப நல்ல பையன். கைசுத்தமான ஆளு. கெட்டிக்காரன் கூட. நீ அவனுக்கு உன் கம்பெனில முப்பாதாயிரம் ரூவாய்க்கு வேலை வாங்கித்தரக்கூடாதா?
இதை பக்கத்துல இருக்குற இன்னொரு மங்குனி அமைச்சரு விளக்குவாரு... அட அப்புடி இல்ல மச்சான். வேறவேற கம்பெனில ஸ்க்ரூ, தகரம், கண்ணாடின்னு செஞ்சு வரும் அதை இவுகளை மாதிரி பெரிய கம்பெனில இருக்கவுக மாட்டி ஒக்குட்டு வியாபாரத்துக்கு அனுப்புவாக. (அப்புடித்தானே மருமயனே-ன்னு நம்மகிட்ட கேள்வி வேற). இல்ல நான் வேலைபாக்குறது ஒரு பேங்குக்கு அப்புடின்னு சொன்னா... அங்க உங்களுக்கு லோன் எல்லாம் தருவாய்ங்களா? அப்பா உனக்கு கம்பியூட்டர்ல கணக்கெழுதுற வேலையா? நீ பேசாம அங்கிட்டு இங்கிட்டு கெடந்து கஷ்டப்படுரதுக்கு உன் வேலைய நம்ம ஊரு இந்தியன் பேங்குக்கு மாத்திக்கிட்டு வந்துரலாமே... அங்ககூட மேனஜர் டேபிள்-ல ஒரு கம்பியூட்டர் பார்த்தேன் - அப்புடின்னு தாக்குவாய்ங்க பாருங்க... ரஷ்ய ராக்கேட்டேல்லாம் தோத்துப்போயிடும்.
இல்ல... அந்த பேங்குடைய வெப்சைட் இன்டர்நெட்-ல இருக்குறத பார்த்துக்கணும். அதை சில நேரம் மாத்தணும்... எல்லாத்தையும் ஆடோமெட் பண்ணனும்னு என்னென்னமோ விபரம் சொன்னாலும்... ம்ஹூம். என்னப்பா இன்டர்நெட் இருந்தா கெட்டுப் போயிருவானுகன்னு சொல்றாங்க...நீ அதுலே வேலை பாக்குறம்னு சொல்றே-ன்னு ஒன்னு விழும். இன்னொரு ராக்கெட்டு சீருனதைப்பாருங்க... ஏப்பா! உன் கம்பெனில கம்பியூட்டரை கொடுத்து வேலைபாக்க சொல்லி உனக்கு சம்பளம் கொடுக்குராணுக. அப்ப அவனுகளுக்கு செலவு போக என்னப்பா மிஞ்சும்? நம்ம ஊர்ல அந்த முருகேசன் பயலைப் பாரு நாலைஞ்சு கம்பியூட்டரை வச்சுக்கிட்டு சின்ன ஒரு இன்டர்நெட் கம்பெனி வச்சுகிட்டு... அங்க போயி அதுல வேலை பாக்குறவங்ககிட்ட ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூவாயின்னு டெக்னிக்கலா சம்பாரிக்கிராம்பா... (விளங்கிடும்)
அப்பவே புரிஞ்சுக்கணும் நமக்கு லீவு கொடுத்த மேனஜர் அவருகும்பிடுற குலதெய்வத்துக்கிட்ட சொல்லி, சனியனுக்கு சகல வசதியும் பண்ணிக்குடுத்து நம்ம கூட அனுப்பி வச்சிட்டார்னு. யாராவது புரிய வச்ச மாகாராசனுங்க, எப்புடின்னு சொல்லுங்கப்பா... இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு.
பி.எஸ்.சி-னு முடிவானதுக்கப்புறம் படிச்ச பெரியவங்களோட கலந்தாலோசிச்சு மேத்ஸ் எடுக்கலாமா? ஃபிசிக்ஸ் எடுக்கலாமா? கெமிஸ்ட்ரி எடுக்கலாமான்னு? பலபேரு உயிரை எடுப்பாங்க. அதுல சில ஆளுக கெமிஸ்ட்ரி வேணாம் சார்... அவன் போயி ஆசிட்டுகள கலக்க வேண்டியிருக்கும். அது டேஞ்சரு. மேத்சும் வேணாம். அதைப் படிச்சா வாத்தியாரப் போறதுக்குத் தான் அதிக வாய்ப்பு .அதுனால, பேசாம ஃபிசிக்ஸ் படிக்க வைங்க. எதிர்காலத்துல சைண்டிஸ்டா போகலாம் (நம்ம லெவல் அவங்களுக்குத் தெரியல. பாவம் விட்டுருவோம்). இல்லைனா எம்.சி.ஏ படிக்கலாம். ஒன்னுமே முடியலைன்னா வாத்தியாராப் போகலாம்( வாத்தியார் வேலைக்கு தகுதி எப்புடி வச்சிருகாய்ங்க பாருங்க).- ன்னு சொல்லி ஒருவழியா தெளிவடைய(!?) வச்சிருவாங்க.
தம்பி நானும் விசாரிச்சிட்டேன். எம்.சி.ஏ படிச்சா டாக்டர் படிப்பு அளவுக்கு சம்பாரிக்கலாமாம். அதுனால ஒரு ஃசேப் சைடுக்கு பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படி. அதுல நல்ல மார்க் எடுத்தீன்னா எம்.சி.ஏ படிச்சிட்டு வேலைக்கு போயி நல்லா சம்பாதிக்கலாம். கம்பியூட்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்காம்(அதுசரி, கம்பியூட்டரை வச்சு ஜோசியம் பார்த்த கோஷ்டிதானே நம்ம ஆளுங்க). அப்படி இப்படின்னு சொல்லி நமுக்கு புடிக்காத பாடமான ஃபிசிக்ஸ்-ல சேர்த்துவிட்டாங்க. என்ன சப்ஜெக்டுங்க அது... முதல் விதி, இரண்டாம் விதின்னு உயிரை எடுப்பானுங்க. நம்ம விதியையே நம்ம நொந்துகிட்டு இருக்கும்போது இதுல இவனுக விதி... என்ன பன்றது எல்லாம் "தல"விதி.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு உறுதியா நம்பி நல்ல மார்க் எடுத்து... எம்.சி.ஏ சீட்டும் வாங்கியாச்சு. அதை படிச்சு முடிச்சிட்டு ஒரு வழியா வேலைக்கும் சேர்ந்தாச்சு. இந்த வேலையில பிறப்பிக்கப்படுகிற லேங்குவாஜ்/டெக்னாலஜியை கணக்கெடுத்தா நம்ம மக்கள்தொகையை விட அதிகமா இருக்கும் போலங்க. பத்தாக்கொறைக்கு வெர்சன் வேற 1.0 , 2.0 -ன்னு. கருமம்டா சாமி. இந்தப் படிப்பை படிச்சவனுக்கெல்லாம் மூலம் நட்சத்திரமா இருக்கும் போல. எப்போதும் குடும்பத்தைப் பிரிஞ்சே இருப்பானுக. இந்த வேலை மூலம் ஆதி மூலம் முதல் பேதி "மூலம்" வரை நட்பாகக் கிடைக்கும். இதுல வேற இந்த ட்ரெய்னிங் அந்த ட்ரெய்னிங்-னு போட்டு உயிரை எடுப்பாணுக. நம்மெல்லாம் மத்தியான சோறு ஓசியாப் போடுற ட்ரெய்னிங் மட்டும்தான் கலந்துக்கிறது. நல்லா ட்ரெய்னிங் எடுத்து நிறைய சம்பாதிக்கிறது எடுத்துக்கு மனுஷன் வயிறார சாப்புடுறதுக்குத்தானே. அதுக்கு நேரடியாவே சாப்பாடு போடுற ட்ரெய்னிங்-ல கலந்துக்கிறது தானே புத்திசாலித்தனம்.
எப்பவாவது அதிசயமா ஒருவாரம், ரெண்டுவாரம் லீவு குடுப்பாணுக. சரி வீட்டுல போயி பெத்தவங்களோடவும், மத்தவங்களோடவும் சந்தோசமா இருந்துட்டு வரலாம்னு போனா.... அங்க சில கொடுமை "தலப்பா" (தலைப்பாகை) கட்டிக்கிட்டு ஆடும். கிராமப்புறம் வேற... நம்ம கூட வேற டெக்னாலஜி-ல வேலை பாக்குறவனுக்கே நம்ம என்ன வேலை பாக்குறம்னு புரியவைக்க முடியாது. இதுல இவங்களுக்கு புரியவைக்கனுமா... விளங்கிடும்...
அவங்க கேக்குற கேள்வியெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா...? கம்புட்டர் வேலை பாக்குறங்கிரியே உனக்கு கம்பியூட்டர் செய்யத் தெரியுமா? இந்த ஜோசியம் சொல்ற கம்பியூட்டர் உங்க கம்பெனில செய்யிறாங்களா? அது எவ்வளவு விலை இருக்கும்? இந்த கம்பியூட்டர் அப்புடி என்னதான் பண்ணும் அதைப்போயி இவ்வளவு விலை சொல்றானுக? புதுசா தொறந்த ராசி மளிகைக்கடையில கூட கம்பியூட்டர் பில்லிங் தான். அங்க நமக்கு தெரிஞ்ச பயதான் வேலை பாக்குறான். அவனுக்கு மூவாயிரம் சம்பளந்தான் தாராக. அவன் ரொம்ப நல்ல பையன். கைசுத்தமான ஆளு. கெட்டிக்காரன் கூட. நீ அவனுக்கு உன் கம்பெனில முப்பாதாயிரம் ரூவாய்க்கு வேலை வாங்கித்தரக்கூடாதா?
இதை பக்கத்துல இருக்குற இன்னொரு மங்குனி அமைச்சரு விளக்குவாரு... அட அப்புடி இல்ல மச்சான். வேறவேற கம்பெனில ஸ்க்ரூ, தகரம், கண்ணாடின்னு செஞ்சு வரும் அதை இவுகளை மாதிரி பெரிய கம்பெனில இருக்கவுக மாட்டி ஒக்குட்டு வியாபாரத்துக்கு அனுப்புவாக. (அப்புடித்தானே மருமயனே-ன்னு நம்மகிட்ட கேள்வி வேற). இல்ல நான் வேலைபாக்குறது ஒரு பேங்குக்கு அப்புடின்னு சொன்னா... அங்க உங்களுக்கு லோன் எல்லாம் தருவாய்ங்களா? அப்பா உனக்கு கம்பியூட்டர்ல கணக்கெழுதுற வேலையா? நீ பேசாம அங்கிட்டு இங்கிட்டு கெடந்து கஷ்டப்படுரதுக்கு உன் வேலைய நம்ம ஊரு இந்தியன் பேங்குக்கு மாத்திக்கிட்டு வந்துரலாமே... அங்ககூட மேனஜர் டேபிள்-ல ஒரு கம்பியூட்டர் பார்த்தேன் - அப்புடின்னு தாக்குவாய்ங்க பாருங்க... ரஷ்ய ராக்கேட்டேல்லாம் தோத்துப்போயிடும்.
இல்ல... அந்த பேங்குடைய வெப்சைட் இன்டர்நெட்-ல இருக்குறத பார்த்துக்கணும். அதை சில நேரம் மாத்தணும்... எல்லாத்தையும் ஆடோமெட் பண்ணனும்னு என்னென்னமோ விபரம் சொன்னாலும்... ம்ஹூம். என்னப்பா இன்டர்நெட் இருந்தா கெட்டுப் போயிருவானுகன்னு சொல்றாங்க...நீ அதுலே வேலை பாக்குறம்னு சொல்றே-ன்னு ஒன்னு விழும். இன்னொரு ராக்கெட்டு சீருனதைப்பாருங்க... ஏப்பா! உன் கம்பெனில கம்பியூட்டரை கொடுத்து வேலைபாக்க சொல்லி உனக்கு சம்பளம் கொடுக்குராணுக. அப்ப அவனுகளுக்கு செலவு போக என்னப்பா மிஞ்சும்? நம்ம ஊர்ல அந்த முருகேசன் பயலைப் பாரு நாலைஞ்சு கம்பியூட்டரை வச்சுக்கிட்டு சின்ன ஒரு இன்டர்நெட் கம்பெனி வச்சுகிட்டு... அங்க போயி அதுல வேலை பாக்குறவங்ககிட்ட ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூவாயின்னு டெக்னிக்கலா சம்பாரிக்கிராம்பா... (விளங்கிடும்)
அப்பவே புரிஞ்சுக்கணும் நமக்கு லீவு கொடுத்த மேனஜர் அவருகும்பிடுற குலதெய்வத்துக்கிட்ட சொல்லி, சனியனுக்கு சகல வசதியும் பண்ணிக்குடுத்து நம்ம கூட அனுப்பி வச்சிட்டார்னு. யாராவது புரிய வச்ச மாகாராசனுங்க, எப்புடின்னு சொல்லுங்கப்பா... இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஏன்டா லிப்ட்ல வந்தது குத்தமாடா...
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» வேலைக்கு போகும் பெண்களா ?
» சுடிதார் போட்டுக்கிட்டுதான் வேலைக்கு வரணும்..!
» மதுரையில் தட்டச்சர் வேலைக்கு ஆள் தேவை!
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» வேலைக்கு போகும் பெண்களா ?
» சுடிதார் போட்டுக்கிட்டுதான் வேலைக்கு வரணும்..!
» மதுரையில் தட்டச்சர் வேலைக்கு ஆள் தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|