சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

செங்கல், ஜல்லி விலை குறையும்: தமிழக அரசு Khan11

செங்கல், ஜல்லி விலை குறையும்: தமிழக அரசு

Go down

செங்கல், ஜல்லி விலை குறையும்: தமிழக அரசு Empty செங்கல், ஜல்லி விலை குறையும்: தமிழக அரசு

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 7:28

செங்கல், ஜல்லி ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக அவற்றின் உற்பத்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வியாழக்கிழமை உறுதி அளித்தனர். இதனால் தமிழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான செலவு இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் ஜல்லி தயாரிப்பு உரிமையாளர்களும், செங்கல் தயாரிப்பு உரிமையாளர்களும் முதல்வரைத் தனித்தனியே சந்தித்து விலை குறைப்பு செய்வதாக உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, செங்கல் விலை ஒரு லோடுக்கு ரூ. 3 ஆயிரமும், ஜல்லி விலை ஒரு லோடுக்கு ரூ. 700 வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச்
செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிந்தார்.

கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் செங்கல் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்றும், அதனால் மக்களின் நலன் கருதி செங்கல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

முதல்வரின் அறிவுரையை ஏற்று செங்கல் விலையை இப்போதைய விலையில் இருந்து உடனடியாக லோடுக்கு ரூ. 3 ஆயிரம் குறைப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதி அளித்தனர்.

ஜல்லி விலை: ஜல்லிகளை உற்பத்தி செய்யும், கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் ஜல்லியின் விலையைக் குறைத்திட முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். அதன்படி, கருங்கல் ஜல்லியின் விலையை லோடுக்கு ரூ. 700 வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

செங்கல் விலை ஒரு லோடு ரூ. 21 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. முதல்வரின் தலையீட்டைத் தொடர்ந்து ஒரு லோடு செங்கல் விலை இனி ரூ. 18 ஆயிரத்துக்குக் கிடைக்கும். ஒரு லோடு ஜல்லி விலை ரூ. 4,400 வரை விற்கப்பட்டு வருகிறது. இதன் விலையும் குறையும் எனத் தெரிகிறது.

இதனால் புதிய கட்டடங்களுக்கான செலவில் சதுர அடிக்கு ரூ.100 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கட்டட காண்ட்ராக்டர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இத்துடன் மணல் விற்பனையில், தனி நபர்கள் தலையிட்டு மணலை கிடங்கில் சேமித்து விற்பதால், செயற்கையாக விலை ஏற்றம் இருக்கிறது என மணல் லாரிகள் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

இதில் முதல்வர் தலையிட்டு நேரடியாக மணல் குவாரியிலேயே லாரிகளுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு லாரிக்கு அனுமதிக்கப்பட்ட 3 யூனிட் மணலை ஏற்றுவதில் தடை ஏதும் செய்யக் கூடாது என்றும் கோரி முதல்வருக்கு அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

இதனால் மணல் விலை பெரிதும் குறையும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கம்பி, சிமெண்ட் விலையும் குறைய அரசு நடவடிக்கை எடுத்தால், புதிய கட்டடங்கள் கட்டுவதில் நடுத்தர வர்க்கத்தினர் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum