Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
4 posters
Page 1 of 1
மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
பிரிட்டனில் ரயிலில் வைத்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார் இலங்கைத் தமிழர் ஒருவர். இவரின் பெயர் வி. எஸ். வாசன். வயது - 64. ஐந்து பிள்ளைகளின் தந்தை. மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் பெற்று லண்டனில் வாழ்ந்து வருகின்றார். இவரது பிள்ளைகளில் இருவர் 1996 ஆம் ஆண்டு எத்தியோப்பிய விமானம் ஒன்று கோமரோஸ் தீவில் விபத்தில் சிக்கியபோது இறந்து விட்டனர். வாசன் மிகுந்த பிரயாசைக்காரர். நேர்மையானவர். அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். இதனால் இவர் மீது அபிமானமும், மரியாதையும் மிகுந்த கூட்டம் ஒன்று லண்டனில் உள்ளது. ஓய்வூதியர். பல்லினங்களைச் சேர்ந்த மக்களும் இவருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆங்கிலேய நண்பர்களும் ஏராளம். இவர் Letchworth நகரத்தில் உள்ள ஆங்கிலேய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வார இறுதி விடுமுறையை கழிக்க சென்று விட்டு பிரிட்டிஷ் புகையிரதத்தில் கடந்த 10 ஆம் திகதி திரும்பி வந்து கொண்டு இருந்தார். இப்புகையிரத பயணத்தின்போது மறக்க முடியாத அநுபவம் ஒன்று இவருக்கு கிடைத்தது. இவரது ஆசனத்தோடு இணைந்த ஆசனங்களில் இளம்பிராயத்தினர் ஐவர் அமர்ந்து இருந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்கள். வலியால் ஒரு பெண் அழுகின்றமையை பார்த்து இந்த ஆங்கிலேயர்கள் நையாண்டியாக சிரித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பயணிகள் என்ன நடக்கின்றது? என வேடிக்கை பார்த்தார்களே ஒழிய பெண்ணுக்கு உதவ முன் வந்து இருக்கவில்லை. சீரியஸான பிரச்சினை ஒன்று போய்க் கொண்டு இருக்கின்றது என்று உணர்ந்தார் வாசன். என்ன பிரச்சினை? என்று அப்பெண்ணுடன் கூட வந்திருந்தவரிடம் வினவினார். பிரசவ வேதனையால் அப்பெண் துடித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார். அப்பெண்ணுக்கு உதவ முன்வருமாறு சக பயணிகளிடம் கேட்டுக் கொண்டார். இரு பெண்கள் மாத்திரம் உதவ முன் வந்தனர். ஏனையோரை வேறு பகுதிக்கு செல்லச் சொன்னார். ரயிலை அவசரமாக நிறுத்துகின்றமைக்கான நெம்புகோலை பிடித்து இழுத்தார். மெதுவாக நகரத் தொடங்கியது புகையிரதம். கைப்பையை திறந்து இரண்டு துணிகளை வெளியில் எடுத்தார். தரையில் ஒரு துணியை விரித்தார். அதில் பெண்ணை கிடத்தினார். பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்கள். தேற்றினார்கள். பெண்ணை பிரசவத்துக்கு தயார்ப்படுத்தினர். பெண் பிரசவ வேதனையின் உச்சத்தில் கத்தத் தொடங்கினார். குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. குழந்தையின் தலை வெளியே வந்தது. உடல் வெளியே வருவது வெகு சிரமமாக இருந்தது. குழந்தையின் உடலை வாசன் மெதுமெதுவாக வெளியே எடுத்தார். மற்றத் துணியின் மேல் குழந்தையை கிடத்தினார். தாயின் மார்பில் குழந்தையை வைத்தார். இரு ரயில் பணியாளர்கள் வந்தனர். நிலைமையை புரிந்து கொண்டனர். அடுத்த நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. தயார் நிலையில் இருந்த அம்புலன்ஸ் வண்டியில் தாயும் சேயும் மிகவும் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பெரியவர் வாசனை கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார் அப்பெண்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
நல்ல செய்தி ஒன்று பகிர்ந்தீர்கள் முபீஸ் இது போல் செய்திகள் படித்து நீண்ட நாட்களாகி விட்டது நன்றி முபீஸ் மனம் நெகிழ்ந்து விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
கண்ணீர் வந்து விட்டது இதைப் படிக்கும்போது.... ! ஆழ்ந்த மூச்சு விட்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்..
வாழ்க அந்த மனிதர்! நற்செயல் புரிந்த அந்த நல்லவரின் உயர்ந்த குணம் நம் அனைவருக்கும் வரவேண்டும்.... காலத்தில் செய்யும் உதவி... கர்மம்... இதுதான் !
வாழ்க அந்த மனிதர்! நற்செயல் புரிந்த அந்த நல்லவரின் உயர்ந்த குணம் நம் அனைவருக்கும் வரவேண்டும்.... காலத்தில் செய்யும் உதவி... கர்மம்... இதுதான் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
பெரியவர் வாசனை கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார் அப்பெண்.
சேனை சார்பாக,பெரியவர் வாசனை வாழ்த்துவோம் .
நன்றி தோழரே !பகிர்வுக்கு .
சேனை சார்பாக,பெரியவர் வாசனை வாழ்த்துவோம் .
நன்றி தோழரே !பகிர்வுக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|