Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பற்களைப் பலப்படுத்த..
Page 1 of 1
பற்களைப் பலப்படுத்த..
என் வயது 63. மூன்று கடைவாய்ப் பற்கள் கூசுகின்றன. பல் மற்றும் ஈறு தேய்மானம் இருப்பதால் அந்தப் பற்களை எடுத்துவிடுவது நல்லது என்று பல் மருத்துவர் கூறுகிறார். சொத்தை இல்லாததால் நான் பல்லை எடுக்க விரும்பவில்லை. எனக்குச் சர்க்கரையும் இரத்தக் கொதிப்பும் உள்ளது. இந்த உபாதை ஏற்படக் காரணம் என்ன? எப்படிக் குணப்படுத்தலாம்?
"போதக கபம்' எனும் உமிழ்நீர், வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் ஒரு நீர் ஊற்றாகும். இந்த நீர், நாம் சாப்பிடும் உணவிலுள்ள காரம், புளிப்பு, சூடு போன்றவற்றால் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. இதற்கு நேர்மாறாக, இரைப்பையில் உள்ள பித்தத் திரவம், சூடும், வேக வைக்கும் தன்மையும் கொண்டது. இந்தப் பித்தத்திலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வாயிலுள்ள உமிழ்நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது.
பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், இந்த போதக கபமும், வயிற்றிலுள்ள பித்தத் திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளாலும் உணவு வகைகளாலும் உங்களுடைய வாயிலுள்ள உமிழ்நீர் வலுவிழந்திருக்கக் கூடும். அப்போது, இரைப்பையின் பித்தத் திரவத்திலுள்ள புளிப்பு, வாய்ப் பகுதியைத் தாக்கினால் வாய் வேக்காடு, நாக்குப் புண், பல் கூச்சம், வாய்நாற்றம், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். அதனால் உமிழ்நீரையும், அதிலுள்ள சக்தியைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதம் கசப்பு, துவர்ப்பு உவர்ப்புமிக்க பொருட்களைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறது.
அந்த வகையில் எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது, மா, வேலம் போன்றவற்றின் குச்சிகளைப் பரிந்துரை செய்கிறது. இரவின் தூக்கத்தினால், உமிழ்நீர் கோளங்கள் சிறிது ஓய்வு பெறுவதால், பித்த வேகத்தை மறுநாள் காலையில் வாய் உலர்வு மற்றும் சிறிது கசப்பின் மூலமாகவும் உணரலாம். கை, கால் கழுவி வாயை நீரால் கொப்பளித்ததும், கோளங்கள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. அப்போது துவர்ப்பும் கசப்பும் வாயிலுள்ள கபத்தையும் பித்தத்தையும் அகற்றவும், உரைப்பு அவற்றை நெகிழச் செய்யவும் உதவுகின்றன. அந்த வகையில் "தசனகாந்தி' எனும் பல்பொடியைக் கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர, பல் கூச்சத்திலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.
எலும்புகளின் வலுவானது சர்க்கரையின் உபாதையினால் குறையக் கூடும். அதனால் எலும்புகளை வலுப்படுத்தும் கோதுமை, பூண்டு, பச்சைப் பயறு, முருங்கை இலை, கொண்டைக் கடலை சுண்டல், பிரண்டைத் துவையல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். எலும்புகளின் ஒரு கழிவான பற்கள் இதுமாதிரியான உணவு வகைகளால் வலுப்படும் என்பதால் உங்கள் உபாதை குறையக் கூடும்.
வெளிப்புறத்திலே மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு (தந்தவல்கம்), உள்புறத்திலே மிக மென்மையான நரம்பு மண்டலம் அமைந்த ஜவ்வு (தந்த மஜ்ஜா) என்ற அமைப்புடன் கூடிய பற்களை வலுப்படுத்தும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அரிமேதஸ் தைலத்தை நீங்கள் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு, நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் உபாதை விரைவில் மட்டுப்படும். பற்களின் மேல் புளிப்பு, இனிப்பு கலந்த பொருள் சிறிது நேரம் தங்கியிருந்தாலும் சிறிது சிறிதாகப் பற்களின் கவசம் நொறுங்க ஆரம்பித்துவிடும். அப்போது உட்புற நரம்பு மண்டலம் பாதிப்படையும். அதை இந்தத் தைலம் கெடாமல் பாதுகாத்துவிடும். உணவுப் பொருளைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கழுவவும்.
"போதக கபம்' எனும் உமிழ்நீர், வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் ஒரு நீர் ஊற்றாகும். இந்த நீர், நாம் சாப்பிடும் உணவிலுள்ள காரம், புளிப்பு, சூடு போன்றவற்றால் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. இதற்கு நேர்மாறாக, இரைப்பையில் உள்ள பித்தத் திரவம், சூடும், வேக வைக்கும் தன்மையும் கொண்டது. இந்தப் பித்தத்திலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வாயிலுள்ள உமிழ்நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது.
பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், இந்த போதக கபமும், வயிற்றிலுள்ள பித்தத் திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளாலும் உணவு வகைகளாலும் உங்களுடைய வாயிலுள்ள உமிழ்நீர் வலுவிழந்திருக்கக் கூடும். அப்போது, இரைப்பையின் பித்தத் திரவத்திலுள்ள புளிப்பு, வாய்ப் பகுதியைத் தாக்கினால் வாய் வேக்காடு, நாக்குப் புண், பல் கூச்சம், வாய்நாற்றம், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். அதனால் உமிழ்நீரையும், அதிலுள்ள சக்தியைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதம் கசப்பு, துவர்ப்பு உவர்ப்புமிக்க பொருட்களைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறது.
அந்த வகையில் எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது, மா, வேலம் போன்றவற்றின் குச்சிகளைப் பரிந்துரை செய்கிறது. இரவின் தூக்கத்தினால், உமிழ்நீர் கோளங்கள் சிறிது ஓய்வு பெறுவதால், பித்த வேகத்தை மறுநாள் காலையில் வாய் உலர்வு மற்றும் சிறிது கசப்பின் மூலமாகவும் உணரலாம். கை, கால் கழுவி வாயை நீரால் கொப்பளித்ததும், கோளங்கள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. அப்போது துவர்ப்பும் கசப்பும் வாயிலுள்ள கபத்தையும் பித்தத்தையும் அகற்றவும், உரைப்பு அவற்றை நெகிழச் செய்யவும் உதவுகின்றன. அந்த வகையில் "தசனகாந்தி' எனும் பல்பொடியைக் கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர, பல் கூச்சத்திலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.
எலும்புகளின் வலுவானது சர்க்கரையின் உபாதையினால் குறையக் கூடும். அதனால் எலும்புகளை வலுப்படுத்தும் கோதுமை, பூண்டு, பச்சைப் பயறு, முருங்கை இலை, கொண்டைக் கடலை சுண்டல், பிரண்டைத் துவையல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். எலும்புகளின் ஒரு கழிவான பற்கள் இதுமாதிரியான உணவு வகைகளால் வலுப்படும் என்பதால் உங்கள் உபாதை குறையக் கூடும்.
வெளிப்புறத்திலே மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு (தந்தவல்கம்), உள்புறத்திலே மிக மென்மையான நரம்பு மண்டலம் அமைந்த ஜவ்வு (தந்த மஜ்ஜா) என்ற அமைப்புடன் கூடிய பற்களை வலுப்படுத்தும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அரிமேதஸ் தைலத்தை நீங்கள் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு, நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் உபாதை விரைவில் மட்டுப்படும். பற்களின் மேல் புளிப்பு, இனிப்பு கலந்த பொருள் சிறிது நேரம் தங்கியிருந்தாலும் சிறிது சிறிதாகப் பற்களின் கவசம் நொறுங்க ஆரம்பித்துவிடும். அப்போது உட்புற நரம்பு மண்டலம் பாதிப்படையும். அதை இந்தத் தைலம் கெடாமல் பாதுகாத்துவிடும். உணவுப் பொருளைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கழுவவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பற்களைப் பாதுகாப்பது எப்படி?
» ஈரலை பலப்படுத்த.
» புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு.
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
» ஈரலை பலப்படுத்த.
» புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு.
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|