Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாராby rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி
2 posters
Page 1 of 1
அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி
அல்லல் நீங்கும் தொல்லை குறையும் என்ற தலைப்பில் தனது தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உடன்பிறப்பே,
"ஆரம்பமாகி விட்டன அரூபத்தின் லீலைகள்!" என்று "மனோகரா" படத்தில் ஒரு உரையாடல் கேட்டிருப்பாய்! அதைத் தொடர்ந்து வருகின்ற வசந்த சேனையின் அட்டகாசங்களையும் பார்த்திருப்பாய்!
எதுவுமே அறியாமல் அவள் மடிதான் தனக்குச் சொர்க்கலோக மெத்தை என்று கூறிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் புருசோத்தம மன்னனையும் கண்டிருப்பாய்!
இப்படி அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் மனோகரனாலும், அவனைப் பெற்றெடுத்த பத்தினித் தங்கமாம் பத்மாவதியின் சாபத்தினாலும் எப்படியெல்லாம் பட்டொழிந்தார்கள்; கெட்டுத் தொலைந்தார்கள் என்ற முடிவையும் ரசித்து மகிழ்ந்திருப்பாய்.
இது நாடகத்தில்-திரைக்காவியத்தில் படமாக மட்டுமல்ல; பாடமாகவும் உன் நெஞ்சில் பதிய வைக்கப்பட்ட பம்மல் சம்மந்தனார் எழுதிய பழைய சரித்திரத்தின் ஒரு புதிய பொன்னேடு.
அந்த ஏடு இதோ மீண்டும் திரும்புகிறது என்பதற்கு அடையாளமாக தமிழகத்தில் ‘‘கள்ளி’’யாகப் படர்ந்துள்ள புதிய அரசு "பழையகள், புதிய மொந்தை" என்ற பழமொழிக்கேற்ப, தன்னுடைய அராஜக ஆட்டத்தை இதோ மீண்டும் தொடர்ந்திருக்கின்றது.
குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடைபெற்றாலும், அதை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திட மாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.
இதோ! இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஏமாந்த தமிழ் நாட்டு மக்களால் அவர்கள் தோளில் ஏறிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும், அடக்குமுறையை தனது போர் வாளாகவும் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு
"எதிர்க்கட்சிகளை குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரை அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்திருந்தாலும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி
முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்" என்று ஆங்காரக் கூச்சலிட்டு, ஓங்கார முழக்கம் செய்து தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்து விட்டு நாட்டையே சுடுகாடாக ஆக்கி; "மாகாளி" நர்த்தனம் ஆடுவேன் என்று தன் காலடியில் உள்ள காவல் துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் வாயில் நுரை பொங்க வாட்டி வதைத்து
"இதோ வந்தேனடா எங்கும் காண முடியாத பத்ரகாளி" என்று பல்லைக்கடித்து, நாக்கை நீட்டி, ரத்தப் பலி வரையிலே கேட்பேன் என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்.
நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்த படியெல்லாம் திட்டங்களை அறிவித்து பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் எள்ளி நகையாட- எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் தூள்தூளாக நொறுங்கிப்போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக் கொண்டு "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம் ? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல் ?" என்று பொய்த்திரை போட்டு
இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி, இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்கு தடா! எட்டுத் திசையும் ‘‘இனி தொலைவாய்’’ என்ற முழக்கமடா.
இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே. நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்.
அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ, தெரிகிறது வெளிச்சம். அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்.
அல்லல் நீங்கும்! தொல்லை குறையும் !
இவ்வாறு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உடன்பிறப்பே,
"ஆரம்பமாகி விட்டன அரூபத்தின் லீலைகள்!" என்று "மனோகரா" படத்தில் ஒரு உரையாடல் கேட்டிருப்பாய்! அதைத் தொடர்ந்து வருகின்ற வசந்த சேனையின் அட்டகாசங்களையும் பார்த்திருப்பாய்!
எதுவுமே அறியாமல் அவள் மடிதான் தனக்குச் சொர்க்கலோக மெத்தை என்று கூறிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் புருசோத்தம மன்னனையும் கண்டிருப்பாய்!
இப்படி அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் மனோகரனாலும், அவனைப் பெற்றெடுத்த பத்தினித் தங்கமாம் பத்மாவதியின் சாபத்தினாலும் எப்படியெல்லாம் பட்டொழிந்தார்கள்; கெட்டுத் தொலைந்தார்கள் என்ற முடிவையும் ரசித்து மகிழ்ந்திருப்பாய்.
இது நாடகத்தில்-திரைக்காவியத்தில் படமாக மட்டுமல்ல; பாடமாகவும் உன் நெஞ்சில் பதிய வைக்கப்பட்ட பம்மல் சம்மந்தனார் எழுதிய பழைய சரித்திரத்தின் ஒரு புதிய பொன்னேடு.
அந்த ஏடு இதோ மீண்டும் திரும்புகிறது என்பதற்கு அடையாளமாக தமிழகத்தில் ‘‘கள்ளி’’யாகப் படர்ந்துள்ள புதிய அரசு "பழையகள், புதிய மொந்தை" என்ற பழமொழிக்கேற்ப, தன்னுடைய அராஜக ஆட்டத்தை இதோ மீண்டும் தொடர்ந்திருக்கின்றது.
குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடைபெற்றாலும், அதை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திட மாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.
இதோ! இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஏமாந்த தமிழ் நாட்டு மக்களால் அவர்கள் தோளில் ஏறிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும், அடக்குமுறையை தனது போர் வாளாகவும் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு
"எதிர்க்கட்சிகளை குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரை அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்திருந்தாலும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி
முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்" என்று ஆங்காரக் கூச்சலிட்டு, ஓங்கார முழக்கம் செய்து தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்து விட்டு நாட்டையே சுடுகாடாக ஆக்கி; "மாகாளி" நர்த்தனம் ஆடுவேன் என்று தன் காலடியில் உள்ள காவல் துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் வாயில் நுரை பொங்க வாட்டி வதைத்து
"இதோ வந்தேனடா எங்கும் காண முடியாத பத்ரகாளி" என்று பல்லைக்கடித்து, நாக்கை நீட்டி, ரத்தப் பலி வரையிலே கேட்பேன் என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்.
நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்த படியெல்லாம் திட்டங்களை அறிவித்து பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் எள்ளி நகையாட- எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் தூள்தூளாக நொறுங்கிப்போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக் கொண்டு "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம் ? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல் ?" என்று பொய்த்திரை போட்டு
இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி, இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்கு தடா! எட்டுத் திசையும் ‘‘இனி தொலைவாய்’’ என்ற முழக்கமடா.
இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே. நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்.
அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ, தெரிகிறது வெளிச்சம். அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்.
அல்லல் நீங்கும்! தொல்லை குறையும் !
இவ்வாறு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு
» உண்மையென்ன என தெரியாது அதிமுக தொண்டர்கள் ஜெ.வை பாராட்டுகின்றனர் - கருணாநிதி
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
» இலங்கையில் தமிழீழம் மலரும் என்றால் ஆட்சியை இழக்கத் தயார் என்றவன் நான்: கருணாநிதி
» உண்மையென்ன என தெரியாது அதிமுக தொண்டர்கள் ஜெ.வை பாராட்டுகின்றனர் - கருணாநிதி
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
» இலங்கையில் தமிழீழம் மலரும் என்றால் ஆட்சியை இழக்கத் தயார் என்றவன் நான்: கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|