Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
குழந்தைகள் படுக்கையில் சிறு நீர்......
Page 1 of 1
குழந்தைகள் படுக்கையில் சிறு நீர்......
சிறு குழந்தைகள் தன்னை அறியாமல் படுக்கையில் இரவு பகலென்று பாராமல் சிறு நீர் கழித்து விடுவது உண்டு. அதுவே 5 அல்லது 6 வயதுக்கு மேலும் சுய கட்டுப்பாடு இல்லாமல் , குறிப்பாக இரவில், படுக்கையில் சிறு நீர் கழித்தால் அதற்கு காரணங்கள் பல. காரணமறிந்து அப்பழக்கத்தை மாற்றுவது பெற்றோர் கடமை.
சாதாரணமாக குழந்தைகள் கழிப்பறையில் தான் சிறு நீர், மலம் கழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை 5 - 6 வயதிற்குள் பழகி விடுவார்கள். 5 - 6 வயதிற்கு மேலும் இரவில் மாதம் இரண்டு முறைக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழித்தால், அது கவனிக்கப்பட வேண்டிய Bed wetting அல்லது Nocturnal Enuresis என்ற குறையாகும்.
கழிவறை செல்ல பழக்கப் படுத்திய பின், ஆறு மாதங்கள் வரை படுக்கையில் சிறு நீர் போகாமலிருந்து, மீண்டும் அந்தப் பழக்கம் ஏற்பட்டால் அதை Secondary Enuresis என்கிறார்கள். இது குழந்தைகளின் தவறோ அல்லது பெற்றோரின் தவறோ அல்ல. இது ஒரு சில குடும்பங்களில் வழி வழியாய் வர வாய்ப்புண்டு. ஏழு வயது வரையிலும் கூட 9% ஆண் குழந்தைகளும், 6 % பெண் குழந்தைகளும் இரவில் படுக்கையை ஈரமாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
உடல் நிலை கோளாறு, மனோ நிலை பாதிப்பு அல்லது சரியான தூக்கமின்மை போன்றவை இதன் காரணங்களாக இருக்கலாம்.
இது இயற்கையாகவே அந்தந்த குழந்தைகளுக்கு இரவில் அதிகமாக சிறு நீர் உற்பத்தியாகி, விழிப்பு வராமல் இருக்கலாம்.
சிறு நீர்ப்பை நிறைந்தது என்பதை அந்த குழந்தையின் மூளைப் பகுதி உணராமல் இருக்கலாம்.
தண்டுவடத்தில் ஏற்படும் கோளாறு, பிறவியிலேயே சிறு நீர்ப்பாதையில் ஏற்படும் மாறுபாடு மற்றும் தொற்று நோய், சர்க்கரை நோய் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.
ஆறு வயதுக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழிப்பது தொடர்ந்தால், குழந்தையை தகுந்த குழந்தை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நலம்.
இவர் நோய்க் குறிகளை (History) பெற்றோரிடம் கேட்டறிந்து, குழந்தையை முழுமையாகச் சோதிப்பார்.
சிறு நீரில் சர்க்கரை நோய்க் குறி, நோய்க் கிருமித் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிப்பார்.
தேவையானால், சிறு நீரகம், சிறு நீர்ப்பை (X Ray Kidney Urinary Bladder area) மற்றும் பிற சோதனைகள் செய்யலாம்.
குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிக்காமல் இருக்க எளிய யோசனைகள்:
இரவில் குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிப்பதைப் பற்றி பெற்றோர் கவலைப் படாமல் இருப்பதோ, தண்டிப்பதோ சரியான அணுகு முறையாகாது.
எனவே குழந்தைக்கு தைரியம் சொல்லி, இது குணப்படுத்தக் கூடியது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
விளையாட்டு மும்முரத்தில் சிறு நீரை அடக்காமல் பகல் நேரங்களிலும், மாலை வேளைகளிலும் தகுந்த இடைவெளிகளில் கழிவறை சென்று சிறு நீர் கழிக்கப் பழக்கப் படுத்த வேண்டும்.
படுப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பிருந்து அதிகமாக திரவ பானங்களை கொடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
படுப்பதற்கு இரண்டு மணிக்கு முன் 250 மி.லி அளவு மட்டும் திரவ பானங்கள்-தண்ணீர் அல்லது பால்-கொடுக்கலாம்.
படுப்பதற்கு முன் கண்டிப்பாக குழந்தையை கழிவறையில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.
இரவில் அலாரம் வைத்து, ஒரு முறையாவது குழந்தையை எழுப்பி, கழிவறைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
அலாரத்திற்கு குழந்தையும் விழித்து கழிவறை செல்ல பழக்கப் படுத்துக் கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கையில் ஈரமாக்காத நாட்களில் குழந்தையைப் பாராட்டி, சிறு சிறு பரிசளித்துப் பாராட்டுங்கள்.
குழந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி,
1. DDAVP (Desmopressin) என்ற மருந்தும், Tricyclic antidepressants (Imipramine) என்ற மருந்தும் கொடுக்கலாம். இதனால் சிறு நீர் உற்பத்தி குறைகிறது.
2. சிலருக்கு Oxybutynin (Ditropan) அல்லது Hyosyamine (Levsinex) அல்லது Tolterodine (Detrol) என்ற மருந்தும் தரலாம். இதனால் சிறு நீர்ப்பை சுருங்குவது குறைந்து அதன் கொள்ளளவும் கூடுகிறது. சிறு நீர் அடிக்கடி செல்வதும் தவிர்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மருந்துகளால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவர் ஆலோசனையின்றியும், தொடர்ந்து வெகு நாட்களுக்கும் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
மேலே சொன்ன எளிய முறைகளைப் பின் பற்றினால் மாத்திரைகளுக்குத் தேவையில்லாமல், படுக்கையை ஈரமாக்குவதை சரி செய்யலாம்.
வ.க.கன்னியப்பன்
சாதாரணமாக குழந்தைகள் கழிப்பறையில் தான் சிறு நீர், மலம் கழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை 5 - 6 வயதிற்குள் பழகி விடுவார்கள். 5 - 6 வயதிற்கு மேலும் இரவில் மாதம் இரண்டு முறைக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழித்தால், அது கவனிக்கப்பட வேண்டிய Bed wetting அல்லது Nocturnal Enuresis என்ற குறையாகும்.
கழிவறை செல்ல பழக்கப் படுத்திய பின், ஆறு மாதங்கள் வரை படுக்கையில் சிறு நீர் போகாமலிருந்து, மீண்டும் அந்தப் பழக்கம் ஏற்பட்டால் அதை Secondary Enuresis என்கிறார்கள். இது குழந்தைகளின் தவறோ அல்லது பெற்றோரின் தவறோ அல்ல. இது ஒரு சில குடும்பங்களில் வழி வழியாய் வர வாய்ப்புண்டு. ஏழு வயது வரையிலும் கூட 9% ஆண் குழந்தைகளும், 6 % பெண் குழந்தைகளும் இரவில் படுக்கையை ஈரமாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
உடல் நிலை கோளாறு, மனோ நிலை பாதிப்பு அல்லது சரியான தூக்கமின்மை போன்றவை இதன் காரணங்களாக இருக்கலாம்.
இது இயற்கையாகவே அந்தந்த குழந்தைகளுக்கு இரவில் அதிகமாக சிறு நீர் உற்பத்தியாகி, விழிப்பு வராமல் இருக்கலாம்.
சிறு நீர்ப்பை நிறைந்தது என்பதை அந்த குழந்தையின் மூளைப் பகுதி உணராமல் இருக்கலாம்.
தண்டுவடத்தில் ஏற்படும் கோளாறு, பிறவியிலேயே சிறு நீர்ப்பாதையில் ஏற்படும் மாறுபாடு மற்றும் தொற்று நோய், சர்க்கரை நோய் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.
ஆறு வயதுக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழிப்பது தொடர்ந்தால், குழந்தையை தகுந்த குழந்தை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நலம்.
இவர் நோய்க் குறிகளை (History) பெற்றோரிடம் கேட்டறிந்து, குழந்தையை முழுமையாகச் சோதிப்பார்.
சிறு நீரில் சர்க்கரை நோய்க் குறி, நோய்க் கிருமித் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிப்பார்.
தேவையானால், சிறு நீரகம், சிறு நீர்ப்பை (X Ray Kidney Urinary Bladder area) மற்றும் பிற சோதனைகள் செய்யலாம்.
குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிக்காமல் இருக்க எளிய யோசனைகள்:
இரவில் குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிப்பதைப் பற்றி பெற்றோர் கவலைப் படாமல் இருப்பதோ, தண்டிப்பதோ சரியான அணுகு முறையாகாது.
எனவே குழந்தைக்கு தைரியம் சொல்லி, இது குணப்படுத்தக் கூடியது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
விளையாட்டு மும்முரத்தில் சிறு நீரை அடக்காமல் பகல் நேரங்களிலும், மாலை வேளைகளிலும் தகுந்த இடைவெளிகளில் கழிவறை சென்று சிறு நீர் கழிக்கப் பழக்கப் படுத்த வேண்டும்.
படுப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பிருந்து அதிகமாக திரவ பானங்களை கொடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
படுப்பதற்கு இரண்டு மணிக்கு முன் 250 மி.லி அளவு மட்டும் திரவ பானங்கள்-தண்ணீர் அல்லது பால்-கொடுக்கலாம்.
படுப்பதற்கு முன் கண்டிப்பாக குழந்தையை கழிவறையில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.
இரவில் அலாரம் வைத்து, ஒரு முறையாவது குழந்தையை எழுப்பி, கழிவறைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
அலாரத்திற்கு குழந்தையும் விழித்து கழிவறை செல்ல பழக்கப் படுத்துக் கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கையில் ஈரமாக்காத நாட்களில் குழந்தையைப் பாராட்டி, சிறு சிறு பரிசளித்துப் பாராட்டுங்கள்.
குழந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி,
1. DDAVP (Desmopressin) என்ற மருந்தும், Tricyclic antidepressants (Imipramine) என்ற மருந்தும் கொடுக்கலாம். இதனால் சிறு நீர் உற்பத்தி குறைகிறது.
2. சிலருக்கு Oxybutynin (Ditropan) அல்லது Hyosyamine (Levsinex) அல்லது Tolterodine (Detrol) என்ற மருந்தும் தரலாம். இதனால் சிறு நீர்ப்பை சுருங்குவது குறைந்து அதன் கொள்ளளவும் கூடுகிறது. சிறு நீர் அடிக்கடி செல்வதும் தவிர்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மருந்துகளால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவர் ஆலோசனையின்றியும், தொடர்ந்து வெகு நாட்களுக்கும் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
மேலே சொன்ன எளிய முறைகளைப் பின் பற்றினால் மாத்திரைகளுக்குத் தேவையில்லாமல், படுக்கையை ஈரமாக்குவதை சரி செய்யலாம்.
வ.க.கன்னியப்பன்
Similar topics
» சிறு நீர் கழிக்க முடியாமல் அவஸ்தையா ?
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» படுக்கையில் மனக்கசப்பு
» படுக்கையில் சிறுநீர்…!
» படுக்கையில் மனக்கசப்பு
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» படுக்கையில் மனக்கசப்பு
» படுக்கையில் சிறுநீர்…!
» படுக்கையில் மனக்கசப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|