சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தத்து எடுக்க.... Khan11

தத்து எடுக்க....

4 posters

Go down

தத்து எடுக்க.... Empty தத்து எடுக்க....

Post by Atchaya Mon 25 Jul 2011 - 19:13

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, திருமணமாகி இருந்தாலும் அல்லது திருமணமாகாவிட்டாலும் தத்து எடுக்கமுடியும். தத்து எடுப்பதற்குச் சட்டபூர்வ சம்பிரதாயங்களோ அல்லது விழாவோ தேவை இல்லை என்றாலும் தத்து எடுக்கப்பட்டதை பதிவு செய்து கொள்வது நல்லது.

தத்து எடுத்தவர், தத்து எடுக்கும் நேரத்தில் 18 வயதிற்குக் குறைந்தவராகவோ அல்லது மனநோயாளியாகவே இருக்கக்கூடாது. ஒரு பையனைத் தத்து எடுக்கும் பெற்றோருக்கு, அவர்கள் தத்து எடுக்கும் நேரத்தில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஆண் குழந்தை எதுவும் இருக்கக்கூடாது. இந்து சட்டப்படி மகன்/ பேரன் / கொள்ளுப்பேரன் பரம்பரையாகவோ, அல்லது தத்து எடுத்தோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.

அதே போன்று ஒரு பெண்ணைத் தத்து எடுக்கும் இந்துப் பெற்றோருக்கு, மகளோ, மகள் வயிற்றுப் பேத்தியோ, அல்லது தத்து எடுத்த பெண்ணோ இருக்கக்கூடாது. ஒரு பெண்ணையோ, ஆணையோ தத்து எடுக்கும்போது, தந்து எடுப்பவருக்கும், தத்து எடுக்கப்படும் ஆண் அல்லது பெண்ணிற்கும் இடையில், குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்து எடுக்கும்போது, அந்தப் பையனின் தாய், தத்து எடுப்பவருக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவின் முறைப்பெண்ணாக இருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, தனது மகள் அல்லது சகோதரியின் புதல்வனைத் தத்து எடுத்துக் கொள்ள முடியாது. இதர உறவினர்கள் மற்றும் அந்நியர்கள் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் ஆணுக்கு மனைவி இருந்தால் அவரது சம்மதத்தைப் பெற்றே தத்து எடுக்க வேண்டும். அந்த மனைவி மனநோயாளியாகவோ, உலகைத் துறந்தவராகவோ (துறவறம்) இந்து மதத்தைச் சாராதவராகவோ இருந்தால், சம்மதம் தேவை இல்லை.

கணவனை இழந்தவர் தத்து எடுத்துக் கோள்ள முடியும். திருமணமான பெண்ணிற்குக் கணவன் இருந்து, அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டிருந்தால், அல்லது கணவன் மனநோயாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால், சன்யாசியாக அல்லது கணவன் வேறு மதத்தவராக, இந்து அல்லாதவராக இருந்தால், அந்தப் பெண் தத்து எடுக்க முடியும்.

தத்து எடுக்க யார் குழந்தையைத் தருவது?

ஒரு இந்து மட்டுமே, தத்து எடுக்கவோ அல்லது தனது குழந்தையைத் தத்து எடுப்பதற்கோ தர முடியும். கீழ்கண்ட மூன்று தரப்பினருக்கு, தத்து எடுப்பதற்காக குழந்தையைத் தர முடியும்.

1. குழந்தையின் தந்தை, தாயின் சம்மதத்தோடு குழந்தையைத் தத்து எடுக்கத் தரலாம்.
2. குழந்தையின் தந்தை இறந்து விட்டால்/ மனநோயாளியாகி விட்டால் / துறவறம் பூண்டு விட்டால் குழந்தையின் தாய். குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.
3. குழந்தையின் பெற்றோர்கள் இறந்து விட்டாலோ அல்லது தத்து கொடுப்பதற்கான தகுதி இல்லாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தின் அனுமதியோடு அந்தக் குழந்தையின் புரவலர் / காப்பாளர் குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.

அங்கீகரிக்கப்பட்ட (அரசு அங்கீகாரம் உள்ள) ஓர் ஆனாதை விடுதியிலிருந்து, குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தத்து எடுப்பதற்கு பதிவு செய்வதைத் தவிர வேறு எந்தச் சம்பிரதாயச் சடங்குகளும் இல்லை. தத்து எடுக்கும் குடும்பத்தின் தகுதியை ஆராய்ந்துதான் அனாதை விடுதிகள், தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகளைத் தத்து எடுப்பதற்காகத் தருகின்றன. சில அமைப்புகள், நாடுவிட்டு நாடு குழந்தைகளைத் தத்து எடுப்பதில் உதவுகின்றன.

தத்து எடுக்கப்பட்ட தேதியிலிருந்து, தத்து எடுத்த குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு உரிமை கிடைக்கிறது.

பிற மதத்தவர்

இந்து அல்லாதவர் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. ஆனால், ஒரு குழந்தையின் காப்பாளராக / புரவலராக இருக்கலாம். குழந்தை, தனது இயற்பெயரையே வைத்துக் கொள்ளலாம் (தாய், தந்தை சூட்டிய பெயர்). 21 வயதானதும் ஆண் அல்லது பெண் சுதந்திரமாகச் செயல்பட முடியும். காப்பாளர்/ புரவலரின் பராமரிப்பு மன நிறைவளிப்பதாக இல்லாவிட்டால் அல்லது காப்பாளர்/ புரவலரே விரும்பி ரத்து செய்யச் சொன்னால், நீதிமன்றம் அந்தப் புரவலர்/ காப்பாளர் பொறுப்பை ரத்து செய்யமுடியும்.

நன்றி....தத்து எடுக்க.... Madona_adopted_child
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தத்து எடுக்க.... Empty Re: தத்து எடுக்க....

Post by முனாஸ் சுலைமான் Mon 25 Jul 2011 - 21:51

கணவனை இழந்தவர் தத்து எடுத்துக் கோள்ள முடியும். திருமணமான பெண்ணிற்குக் கணவன் இருந்து, அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டிருந்தால், அல்லது கணவன் மனநோயாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால், சன்யாசியாக அல்லது கணவன் வேறு மதத்தவராக, இந்து அல்லாதவராக இருந்தால், அந்தப் பெண் தத்து எடுக்க முடியும்.
இந்த சட்டம் இஸ்லாம் மதத்தில் இல்லை ##*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தத்து எடுக்க.... Empty Re: தத்து எடுக்க....

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 22:04

:”@: ##*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தத்து எடுக்க.... Empty Re: தத்து எடுக்க....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Jul 2011 - 6:52

நன்றி நல்ல பதிவு


தத்து எடுக்க.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தத்து எடுக்க.... Empty Re: தத்து எடுக்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum