Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
2 posters
Page 1 of 1
சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
கடந்த 45 ஆண்டுகளாக குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரிய திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், சிவந்திபுரம் கிராமம், இனாம் ஒழிப்புச் சட்டம் 26/63-ன் கீழ் 15.4.1965-ல் கையகப்படுத்தப்பட்ட கிராமம் ஆகும். இதன்படி அன்றைய நிலையில் நஞ்சை, புஞ்சை நிலங்களை அனுபவத்தில் வைத்துள்ளவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1987-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நத்தம் நில அளவைத் திட்டத்தில், குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 780 வீடுகளுக்கு நத்தம் மனைவரி தோராயப் பட்டா தயாரிக்கப்பட்டு, அதற்கான நில அளவை கணக்குகள் தயார் செய்யப்பட்டது.
அரசின் இந்த நத்தம் நிலவரித் திட்ட அளவை தொடர்ந்து பல்வேறு உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றன. அரசுக்கு பாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து 2005-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் தீவிர நடவடிக்கையால் இந்த வழக்கு 10.6.2011, 20.6.2011 மற்றும் 27.6.2011 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1.7.2011 அன்று அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நிலவரித் திட்ட அளவையில் தயார் செய்யப்பட்ட நத்தம் நிலவரி தூய அடங்கல் பதிவுகள் அனைத்தையும் தல ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தல ஆய்வில் மொத்தம் 2 ஆயிரத்து 780 குடியிருப்பு வீடுகள் கண்டறியப்பட்டது. இவ்வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 45 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா பெற போராடி வந்த திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழு குடும்பங்களுக்கு நேற்று தலைமைச் செயலகத்தில், வீட்டுமனைப் பட்டாக்களை நேரில் வழங்கினார். மேலும், மற்ற பயனாளிகளுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவின்படி நேற்றே சிவந்திபுரம் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்டது.
வீட்டுமனை பட்டாக்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் பலகாலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டு, உடனடியாக தாங்கள் குடியிருந்த வீடுகளுக்கு பட்டா வழங்கியமைக்காக தங்களது நன்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Re: சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2,780 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கினார் ஜெயலலிதா
நல்ல தகவல் நல்ல செய்தி நல்ல காரியம் நன்மையே நடக்கட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|