Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
2 posters
Page 1 of 1
இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் ரூ. 1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும்.
தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.
இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன.
அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன.
எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
திமுகவினர் மீதான நிலப் பறிப்பு வழக்குகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அ.தி.மு.க.வினர் மீது வரும் உண்மையான நிலப் பறிப்பு புகார்கள் கூட காவல் துறையினரால் சமரசம் செய்து தீர்த்து வைக்கப்படுகின்றன.
ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள் என்றார் கருணாநிதி.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வினைக்கூட இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவரவிருக்கும் நேரத்தில் - அதிலே தெரிவிக்காமல் தமிழக அரசு தனியானதொரு ஆணையின் மூலமாக அறிவித்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு குறித்து கருணாநிதி கூறுகையில்,
ஆகஸ்ட் 4-ந் தேதியன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் பேரவையிலே வைக்கப்படும் என்று கவர்னர் அறிவித்திருக்கிறார். 4-ந் தேதி பேரவை கூடும் என்ற அறிவிப்பும் பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இந்த திட்டம் பற்றி அரசின் சார்பில் அறிவிப்பு வந்திருக்கிறது என்றால், கவர்னர் அறிவிப்புக்கும், நிதிநிலை அறிக்கைக்கும் மற்றும் பேரவைக்கும் இந்த அரசு எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
சன் டிவி சக்சேனா மீதான வழக்குகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இதன் மூலம் உண்மையாகிறது என்றார் கருணாநிதி.
முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் எம்.எல்.ஏக்கள் கருணாநிதியைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினர்.
பின்னர் கருணாநிதியைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சட்டசபையில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, சட்டப்பேரவையில் நிலமைக்கு ஏற்ப திமுக நடந்துகொள்ளும். நிதிநிலை அறிக்கையைப் பார்த்த பின்பு தான் எங்களுடைய கருத்தை சொல்லமுடியும் என்றார்.
திமுகவுக்கு சட்டசபையில் ஒரே இடத்தில் இடம் தரப்படவில்லையே என்ற கேள்விக்கு, சட்டப்பேரவையில் எங்களுக்கு இடமே ஒதுக்கீடு செய்யாதபோது, நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர்ந்தால், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டபோது, திமுக மீது அடக்குமுறை தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றார்.
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நாங்கள் வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை என்று பதிலளித்தார் கருணாநிதி.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும்.
தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.
இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன.
அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன.
எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
திமுகவினர் மீதான நிலப் பறிப்பு வழக்குகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அ.தி.மு.க.வினர் மீது வரும் உண்மையான நிலப் பறிப்பு புகார்கள் கூட காவல் துறையினரால் சமரசம் செய்து தீர்த்து வைக்கப்படுகின்றன.
ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள் என்றார் கருணாநிதி.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வினைக்கூட இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவரவிருக்கும் நேரத்தில் - அதிலே தெரிவிக்காமல் தமிழக அரசு தனியானதொரு ஆணையின் மூலமாக அறிவித்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு குறித்து கருணாநிதி கூறுகையில்,
ஆகஸ்ட் 4-ந் தேதியன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் பேரவையிலே வைக்கப்படும் என்று கவர்னர் அறிவித்திருக்கிறார். 4-ந் தேதி பேரவை கூடும் என்ற அறிவிப்பும் பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இந்த திட்டம் பற்றி அரசின் சார்பில் அறிவிப்பு வந்திருக்கிறது என்றால், கவர்னர் அறிவிப்புக்கும், நிதிநிலை அறிக்கைக்கும் மற்றும் பேரவைக்கும் இந்த அரசு எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
சன் டிவி சக்சேனா மீதான வழக்குகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இதன் மூலம் உண்மையாகிறது என்றார் கருணாநிதி.
முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் எம்.எல்.ஏக்கள் கருணாநிதியைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினர்.
பின்னர் கருணாநிதியைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சட்டசபையில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, சட்டப்பேரவையில் நிலமைக்கு ஏற்ப திமுக நடந்துகொள்ளும். நிதிநிலை அறிக்கையைப் பார்த்த பின்பு தான் எங்களுடைய கருத்தை சொல்லமுடியும் என்றார்.
திமுகவுக்கு சட்டசபையில் ஒரே இடத்தில் இடம் தரப்படவில்லையே என்ற கேள்விக்கு, சட்டப்பேரவையில் எங்களுக்கு இடமே ஒதுக்கீடு செய்யாதபோது, நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர்ந்தால், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டபோது, திமுக மீது அடக்குமுறை தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றார்.
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நாங்கள் வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை என்று பதிலளித்தார் கருணாநிதி.
Re: இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நாங்கள் வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை என்று பதிலளித்தார் கருணாநிதி.
விட்டது சனி என்று இருப்போம் என்று சொன்னால் என்ன .
விட்டது சனி என்று இருப்போம் என்று சொன்னால் என்ன .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி
» மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி
» மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|