Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு
Page 1 of 1
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு
ஐந்து கரடிகள் உறங்குநிலையைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஈடுபடுத்தப்பட்டன. அவற்றின் குளிர்கால உறங்குநிலையின் போது நிகழும் மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டன.
ஆச்சரியில் மிகப்பெரிய மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
உறங்குநிலை (hibernation - கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது. ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட கால உறக்கத்தில் வாழ்வதனைக் குறிக்கும். அப்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் - metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும்.
இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து "தொந்தரவு" கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.
ஆச்சரியில் மிகப்பெரிய மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
உறங்குநிலை (hibernation - கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது. ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட கால உறக்கத்தில் வாழ்வதனைக் குறிக்கும். அப்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் - metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும்.
இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து "தொந்தரவு" கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு
குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது. அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது.
ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.
அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது.
இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.
எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.
அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது.
இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.
எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு.
» காருக்குள் மலசலகூடம்: ஆராய்ச்சியின் புதுமை
» மருத்துவத்தில் இறை சக்தி
» மருத்துவத்தில் இறை சக்தி - 2
» சித்த மருத்துவத்தில் அல்சர்
» காருக்குள் மலசலகூடம்: ஆராய்ச்சியின் புதுமை
» மருத்துவத்தில் இறை சக்தி
» மருத்துவத்தில் இறை சக்தி - 2
» சித்த மருத்துவத்தில் அல்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|