சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Khan11

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

2 posters

Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 13:25

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ 300desktop

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்தது போல் கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழமை மிக்க கற்கோவில்களில் தங்க புதையல் இருப்பதாக ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் உள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொல் பொருள் துறையினர் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty Re: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 13:25

தங்க புதையல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பூட்டி கிடந்த அறைகளை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் திறந்து பார்த்தனர். அப்போது அறைகள் முழுவதும் குவியல், குவியலாக தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான கோவில்களிலும் அரசர் காலத்தில் புதைக்கப்பட்ட நகைகள், தங்க புதையல்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் விதமாக கிருஷ்ணகிரி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது மலை உச்சியில் மண்ணில் பாதி புதைந்து மீதி வெளியே தெரியும் அளவிற்கு உள்ள கற்கோவில்களில் தங்க நகைககள் புதைந்து கிடப்பதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த குறிப்புகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty Re: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 13:25

குந்தாணி மலை கிருஷ்ணகிரி அருகேயுள்ள நெடுசாலை, தேவர்குந்தாணி, வேப்பனப்பள்ளி, பேரிகை போன்ற பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குந்தாணி ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பகுதியாகும். தேவர்குந்தாணியை தலைநகராக கொண்டு குந்தாணி மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். மேலும் கர்நாடகா மன்னர் ஒய்சால வம்சத்தை சேர்ந்த ராமநாத அரசரின் ஆளுகை கோலார் முதல் திருச்சி ஸ்ரீரங்கம் வரை இருந்தது. அவர்களும் குந்தாணியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர்.

இத்தனை வரலாற்று சிறப்புமிக்க தலைநகராக இருந்த குந்தாணியில் உள்ள மலைகளில் அப்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கற்கோவில்கள் தற்போது அழியும் நிலையில் மண்ணில் புதைந்துள்ளன. குந்தாணியை சுற்றி உள்ள 6 மலைகளில் மன்னர்கள் 6 விதமான கோவில்களை கட்டினார்கள்.

மலை உச்சியில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. குந்தாணி மலைகளில் சென்றாயசாமி, அனுமான், நந்திகேஸ்வரா, குநந்தாணியம்மா, வீரேஸ்வரா, குந்தீஸ்வரா ஆகிய 6 சாமிகளுக்கும் கோவில்கள் மிக பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. இந்த கோவில்கள் தற்போதும் மலை உச்சியில் காணப்படுகின்றன. ஆனால் கோவிலில் பெரும் பகுதி மண்ணில் புதைந்தும், மீதிப்பகுதி மட்டும் வெளியில் தெரிந்த வண்ணமும் உள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty Re: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 13:26

குளத்தில் தங்க புதையல்?

குந்தாணி மலைப்பகுதியின் வடக்கு திசையில் `பைரேகவுனி செருவி' என்ற குளமும், `நீர்தெப்ப ஜுனை' என்ற குளமும் உள்ளது. `நீர்தெப்ப ஜுனை' என்ற குளத்தில் கோவில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆங்கிலேயர்கள் தங்களது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கோவிலின் நகைகள் குளத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆங்கிலேயர் குறிப்பேட்டு தகவல் குறித்து அறிந்த தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மற்றும் அருங்காட்சியகத் துறை அதிகாரிகள் அந்த குறிப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வெட்டு தகவல்கள்

இதேபோல் குந்தீஸ்வரா கோவில் சுவற்றில் மிகப்பழமையான கல்வெட்டு குறிப்புகளும் ஏராளமாக உள்ளன. கல்வெட்டு குறிப்பிலும் தங்க புதையல் குறித்து எழுதப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கருதுகிறார்கள். எனவே கல்வெட்டுகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty Re: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by lafeer Mon 8 Aug 2011 - 13:26

நல்ல செய்திதான் நன்றி தந்தமைக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _ Empty Re: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லாரி - அமைந்தகரையில் பரபரப்பு
» "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!
» ஈராக்கில் அமெரிக்க படைகள் ஆண்டு இறுதிவரை தங்க அனுமதி
» எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum