Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
Page 1 of 1
மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
மலையக பெருந்தோட்டப் பகுதிகளை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கிவரும் மர்ம மனிதர்களினால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக இரத்தினபுரி, காவத்தை, பதுளை, மாத்தளை போன்ற பெருந்தோட்டப் பகுதிகளில் மர்ம மனிதனின் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. தற்போது மலையகம் முழுவதிலும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் பெரும் அச்சுறுத்தலான சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினரால் செயற்படுத்தப்பட்டு வருகின்றதா அல்லது திட்டமிட்ட சதி முயற்சியா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். மர்ம மனிதர்களின் அச்சம் காரணமாக ஒருநேர உணவைக்கூட நிம்மதியாக உட்கொள்ள முடியாத நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள் அச்சமான சூழலில் எவ்வாறு கொழுந்து பறிப்பதென்று அங்கலாய்க்கின்றனர்.
மர்ம மனிதர்களின் செயற்பாடுகளினால் பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல் காரணமாக மலையகத்தில் நகரப்புறக் கடைகள் நேரகாலத்துடன் மூடப்படுவதாகவும் 6 மணிக்கு மேல் நடமாட்டத்தை மக்கள் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Re: மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
ஒருசிலர் வதந்திகளை பரப்புவதனாலேயே இத்தகைய பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்றுவரும் வேளையில் மர்ம மனிதனின் செயற்பாடுகள் மாணவர்களை சுமுகமான நிலையில் பரீட்சைக்குத் தோற்றமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் தனியாக அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பளை ஆண்டியாகடவத்தைப் பகுதியில் நேற்று முன்தினமிரவு மர்மமனிதர்களால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் 28 வயது பெண்ணொருவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பெண் நேற்று முன்தினமிரவு 8 மணியளவில் மலசலகூடத்துக்கு செல்வதற்காக வீட்டுக்கு வெளியே சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து மேற்படி மர்மமனிதர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் தனியாக அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பளை ஆண்டியாகடவத்தைப் பகுதியில் நேற்று முன்தினமிரவு மர்மமனிதர்களால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் 28 வயது பெண்ணொருவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பெண் நேற்று முன்தினமிரவு 8 மணியளவில் மலசலகூடத்துக்கு செல்வதற்காக வீட்டுக்கு வெளியே சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து மேற்படி மர்மமனிதர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Re: மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
இதேபோன்று நுவரெலியா தேஸ்பி தோட்டத்திற்கு சென்ற மர்ம மனிதர்களை பிடிக்க முற்பட்ட இரு இளைஞர்களை காயப்படுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடியதாகவும் அத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவரும் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொனவிஸ்டா, கலுகெல, கெலேகாலபோன்ற கிராமங்களில் நேற்று முன்தினம் இந்த மர்ம மனிதர்கள் உலவியதாகவும் இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த மர்ம மனிதர்களைக் கண்டுபிடித்து இரவில் உலாவுவதை நிறுத்துவதற்கும் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும் அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேசத்திலுள்ள தோட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மர்மமனிதர்கள் நையப்புடைப்பு
நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவரும் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொனவிஸ்டா, கலுகெல, கெலேகாலபோன்ற கிராமங்களில் நேற்று முன்தினம் இந்த மர்ம மனிதர்கள் உலவியதாகவும் இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த மர்ம மனிதர்களைக் கண்டுபிடித்து இரவில் உலாவுவதை நிறுத்துவதற்கும் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும் அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேசத்திலுள்ள தோட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மர்மமனிதர்கள் நையப்புடைப்பு
Re: மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
அப்புத்தளை பகுதிக்குட்பட்ட தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் சந்தேகதத்துக்கிடமான முறையில் நடமாடிய நான்கு இளைஞர்களை தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து அவர்களை நேற்று அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிறீஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்று கூடி இனம்தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டபோது அவ் இளைஞர்கள் காலிப் பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுதற்காகவே வந்தவர்களென்றும் தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
கிறீஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்று கூடி இனம்தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டபோது அவ் இளைஞர்கள் காலிப் பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுதற்காகவே வந்தவர்களென்றும் தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
Re: மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
ப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை மற்றும் பசறை போன்ற பகுதிகளில் கிறீஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்துவரும் தகவல்களையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் பதற்றதுடனும், பீதியுடனும் உள்ளனர். இதனால் மேற்குறிப்பிட்ட தோட்ட மக்கள் வெளியில் நடமாடாது வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் அவல நிலையேற்பட்டுள்ளது. வேறு சிலர் தொழிலுக்கு செல்வதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக தொழிலாளர்கள் பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த போதிலும் அம்மர்ம மனிதர்களைப் பிடித்து வந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படியும் தொழிலாளர்களை பொலிஸார் கேட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
Re: மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
பொலிஸார் பாதுகாப்பு
தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை கிறீஸ் மனிதர்கள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் தகவல்களையடுத்து மலையகத்தின் அட்டன், வட்டவல உட்பட பல தோட்டப் பகுதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெல தெரிவித்தார்.
தோட்டம் ஒன்றில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கிறிஸ் மனிதன் அச்சுறுத்தியதாகவும் கிறிஸ் மனிதன் ஒருவனை வட்டகல பிரதேசத்தில் இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டும் கிறிஸ் மனிதனை கண்டு பிடிக்கும் வகையில் தோட்டப் பகுதிகளில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். _
தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை கிறீஸ் மனிதர்கள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் தகவல்களையடுத்து மலையகத்தின் அட்டன், வட்டவல உட்பட பல தோட்டப் பகுதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெல தெரிவித்தார்.
தோட்டம் ஒன்றில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கிறிஸ் மனிதன் அச்சுறுத்தியதாகவும் கிறிஸ் மனிதன் ஒருவனை வட்டகல பிரதேசத்தில் இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தோட்டப் பகுதிகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டும் கிறிஸ் மனிதனை கண்டு பிடிக்கும் வகையில் தோட்டப் பகுதிகளில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|