சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு Khan11

சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு

Go down

சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு Empty சரக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்: தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:25

சேலம், ஆக. 17-


நாளை
நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குதால் சரக்கு ஏற்றுமதி
பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தினமும் ரூ.500 கோடி வருவாய் இழப்பு
ஏற்படும்.

சரக்கு இல்லாமல் காலியாக செல்லும்
லாரிகளுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும். தனியார் மூலம்
சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.இன்சூரன்ஸ், டீசல், டயர்,
உதிரிபாகங்கள் மீது ஏற்றப்பட்ட விலை உயர்வை குறைக்க வேண்டும், 2010
டிசம்பர் 4-ந் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ஏற்படுத்தப்பட்ட
ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
நாளை நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

தென்னந்திய
அளவிலான தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும்
மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 26 லட்சம் லாரிகள் முற்றிலும்
இயக்கப்படாது என்றும் அவிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கை முன்னிட்டு கடந்த
14-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் அனைத்தும்
நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து மும்பை
மற்றும் மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு பரிமாற்றத்தில் நாள்
ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.தமிழத்தில்
ஈரோடு, கரூர், சேலம் பகுதியில் இருந்து சேலை, பெட் ஷீட், துண்டுகள், தரை
விரிப்புகளும், கோவை, திருப்பூரில் இருந்து பனியன், ஜட்டி உள்ளிட்ட
ரெடிமேட் ஆடைகளும், ஊட்டியில் இருந்து காய்கறிகளும், அதிக அளவில் மும்பை
உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சேலத்தில்
இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், தேங்காய், வெல்லம், மேட்டூர் தனியார்
ஆலைகளில் இருந்து இரும்பு கம்பிகள், கல்மாவு ஆகியவை மும்பைக்கு எடுத்து
செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முட்டை, கறிகோழி, தீவனம்
ஏற்றுமதியும் தடைப்பட்டுள்ளது.

இன்று காலை வரை
சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.மறு
மார்க்கத்தில் இருந்து இந்த லாரிகள் மூலம் மராட்டிய மாநிலத்தில் இருந்து
பருப்பு, பூனா, நாசிக், பகுதிகளில் இருந்து பூண்டு, பஞ்சு, நூல் பேல்கள்
ஆகியவை தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது.

லாரி
ஸ்டிரைக் தொடங்குவதையடுத்து தமிழகத்துக்கு பொருட்களை எடுத்து வரும் பணி
முற்றிலும் தடைப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை நள்ளிரவு முதல் லாரிகள்
ஸ்டிரைக் தொடங்கும் பட்சத்தில் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு
அதிகளவில் இருக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் 6 ஆயிரம்
லாரிகள் இயங்குகின்றன. தினமும் 300 லாரிகள் வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து
வந்து செல்கின்றன. வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் புக்கிங்
நிறுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து புறப்படும் லாரிகள் இன்று இரவுக்குள்
ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநில எல்லையை கடந்து செல்ல இயலாது
என்பதால், ஈரோட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

வெளி
மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு புறப்பட வேண்டி லாரிகளிலும்,
நேற்று முன்தினம் முதல் லோடு ஏற்றப்படவில்லை. லாரி வேலை நிறுத்தம் காரணமாக
ஈரோடு மாவட்டத்தில் ரூ. 10-கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.


இதே போல் சென்னைக்கு தினமும் பெங்களூரில் இருந்து
லாரிகள் மூலம் இங்கிலீஷ் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. ஸ்டிரைக்
தொடங்கினால் லாரிகள் வராது. இதனால் காய்கறிகளின் விலை உயர்வும்
அதிகரிக்கும். லாரி ஸ்டிரைக் தொடங்கினால் தமிழகத்தில் மட்டும் ஒரு
நாளைக்கு சுமார் ரூ. 500 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி தேங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.

மேலும் தென் மாநிலம் முழுவதும் ஒரு
நாளைக்கு ரூ. 3500 கோடிக்கு இழப்பு ஏற்படும். வெளிமாநில லாரிகள் அனைத்தும்
ஆங்காங்வே உள்ள லாரி ஆபிசுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் சங்க
அலுவலகத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்டிரைக் தொடங்கினால் தென் மாநிலத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்ல தம்பி கூறியதாவது:-

மத்திய
அரசுடன் ஏற்கனவே 2 கட்டமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில்
மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் லாரி
உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, தீர்க்கமான முடிவை அறிவித்தால் மட்டுமே
பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறி நாங்கள் புறக்கணித்து விட்டோம்.எனவே
திட்டமிட்டப்படி லாரி ஸ்டிரைக் தொடங்கும் என்றார்.

இதுகுறித்து
தமிழக லாரி உரிமையாளர் சங்க பொருளாளர் சென்ன கேசவன், சேலம் மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்க செயலாளர் தனராஜ் ஆகியோர் கூறியதாவது:-

லாரி
தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கவனத்தை எங்கள் தொழிலின் மீது
பட செய்வதே எங்கள் நோக்கம். அகில இந்திய அளவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து
தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் இயக்கப் படுகின்றன. அதில் சேலம்,
நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் 50 சதவீத லாரிகள் இயக்கப்பட்டு
வருகிறது.எனவே மராட்டிய, தமிழக லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலே நாடு
முழுவதுமே சரக்கு பரிமாற்றம் தடைப்படும் என்றனர்.

இந்நிலையில்
நேற்று தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டிய
முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக போக்குவரத்து கமிஷனர் முருகையா,
லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மேலும்
சேலம் மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
குறித்தும் நேற்று ஆலோசனை செய்யப்பட்டது.ஏற்கனவே லாரி ஸ்டிரைக்குக்கு ரிக்
உரிமையாளர்கள், தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு
கொடுத்துள்ளது.

இந்நிலையில் தென்மண்டல எல்.பி. ஜி.
டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நாமக்கல்லில் இன்று
சங்கத்தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடக்கிறது. இதில் லாரி ஸ்டிரைக்குக்கு
ஆதரவு தெரிவிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
» புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
» தவறான கொள்கையால் பாஜக கூட்டணி ஆட்சியில் ரூ. 43,000 கோடி இழப்பு- தொலைத் தொடர்புத்துறை
» அமலாபால், பகத்பாசில் போல 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு கேரள அரசுக்கு ரூ.60 கோடி இழப்பு
» அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum