Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக. 17-
முதல் - அமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் சட்டசபையில் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
மக்கள்
தொகைப் பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும் வன விலங்குகளின் இயற்கை
வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன விலங்குகள் அடிக்கடி காடுகளை
விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள்,
பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால்நடைகள் இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு
உள்ளாகின்றனர்.
சில நேரங்களில் வன விலங்குகளால்
தாக்கப்படுவதால், மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, வன
விலங்குகளின் வாழ்விடங்களை மேம் படுத்துதல்; அவை விரும்பி உண்ணும் பயிர்களை
வனப் பகுதிகளில் வளர்ப்பது; வனங்களின் எல்லைப் பகுதிகளில் தடைகளை
உருவாக்குவது, மனித உயிர்களுக்கும், விவசாயப் பயிர்களுக்கும்,
உடமைகளுக்கும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு
வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல் திட்டத்தின் மூலம்
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று, 4.8.2011 அன்று இந்த
மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்த
வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
வன
விலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்டுத்
தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வன விலங்குகளால்
மனிதர்களுக்கு உயிர் இழப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்படும் போது
வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம்
ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம்,
கால்நடைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும்
எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதன்
அடிப்படையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீட்டுத்
தொகை இது வரை ஏக்கருக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் இருந்து, ஏக்கருக்கு
25,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படுவதுடன், சேதம் அடைந்த தென்னை
மரங் களுக்கும், மரத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு
வழங்கப்படும். வன விலங்குகளால், ஓட்டு வீடுகள் / ஆர்.சி.சி. வீடுகள் / கூரை
வீடுகள், எந்த அளவுக்கு சேதம் அடைந்தாலும், இதுவரை 5,000 ரூபாய் மட்டும்
இழப் பீடாக வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் தொகை, இனி,
முழுவதும் சேதம் அடைந்த ஓட்டு வீடு / ஆர்.சி.சி. வீடுகளுக்கு 35,000
ரூபாயாகவும், கூரை வீடுகளுக்கு 10,000 ரூபாயாகவும் இனி உயர்த்தி
வழங்கப்படும். பெருமளவில் பாதிப்புக்கு உள்ளான ஓட்டு வீடு / ஆர்.சி.சி.
வீடுகளுக்கு 5,000 ரூபாயும், கூரை வீடுகளுக்கு 2,000 ரூபாயும், பகுதி
சேதமடைந்த வீடுகளுக்கு 1,500 ரூபாயும் இனி வழங்கப்படும். மேலும், வன
விலங்குகளால் ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால்,
இதுவரை அனைத்துக்கும் 1000 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை
வழங்கப்பட்டு வந்தது.
இனி, அந்தத் தொகை, ஆட்டுக்கு
2,000 ரூபாய் என்ற அளவிலும், செம்மறி ஆட்டுக்கு 1,500 ரூபாய் என்ற
அளவிலும், பன்றிக்கு 1,000 ரூபாய் என்ற அளவிலும் வழங்கப்படும். கோழி போன்ற
வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்கள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை பறவைக்கு
30 ரூபாய் என்ற அளவில் இருந்த இழப்பீட்டுத் தொகை, இனி பறவைக்கு 100 ரூபாய்
என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.
வன விலங்குகளால்
உடமைகளுக்கு இழப்பு ஏற்பட்டால், உண்மையான இழப்பின் அளவு அல்லது 100
ரூபாய், இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை இழப்பீட்டுத் தொகையாக இதுவரை
வழங்கப்பட்டது. இனி, வன விலங்குகளால் உடமைகள் இழப்பு ஏற்பட்டால், 2,000
ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் - அமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் சட்டசபையில் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
மக்கள்
தொகைப் பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும் வன விலங்குகளின் இயற்கை
வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன விலங்குகள் அடிக்கடி காடுகளை
விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள்,
பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால்நடைகள் இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு
உள்ளாகின்றனர்.
சில நேரங்களில் வன விலங்குகளால்
தாக்கப்படுவதால், மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, வன
விலங்குகளின் வாழ்விடங்களை மேம் படுத்துதல்; அவை விரும்பி உண்ணும் பயிர்களை
வனப் பகுதிகளில் வளர்ப்பது; வனங்களின் எல்லைப் பகுதிகளில் தடைகளை
உருவாக்குவது, மனித உயிர்களுக்கும், விவசாயப் பயிர்களுக்கும்,
உடமைகளுக்கும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு
வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல் திட்டத்தின் மூலம்
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று, 4.8.2011 அன்று இந்த
மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்த
வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
வன
விலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்டுத்
தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வன விலங்குகளால்
மனிதர்களுக்கு உயிர் இழப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்படும் போது
வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம்
ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம்,
கால்நடைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும்
எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதன்
அடிப்படையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீட்டுத்
தொகை இது வரை ஏக்கருக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் இருந்து, ஏக்கருக்கு
25,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படுவதுடன், சேதம் அடைந்த தென்னை
மரங் களுக்கும், மரத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு
வழங்கப்படும். வன விலங்குகளால், ஓட்டு வீடுகள் / ஆர்.சி.சி. வீடுகள் / கூரை
வீடுகள், எந்த அளவுக்கு சேதம் அடைந்தாலும், இதுவரை 5,000 ரூபாய் மட்டும்
இழப் பீடாக வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் தொகை, இனி,
முழுவதும் சேதம் அடைந்த ஓட்டு வீடு / ஆர்.சி.சி. வீடுகளுக்கு 35,000
ரூபாயாகவும், கூரை வீடுகளுக்கு 10,000 ரூபாயாகவும் இனி உயர்த்தி
வழங்கப்படும். பெருமளவில் பாதிப்புக்கு உள்ளான ஓட்டு வீடு / ஆர்.சி.சி.
வீடுகளுக்கு 5,000 ரூபாயும், கூரை வீடுகளுக்கு 2,000 ரூபாயும், பகுதி
சேதமடைந்த வீடுகளுக்கு 1,500 ரூபாயும் இனி வழங்கப்படும். மேலும், வன
விலங்குகளால் ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால்,
இதுவரை அனைத்துக்கும் 1000 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை
வழங்கப்பட்டு வந்தது.
இனி, அந்தத் தொகை, ஆட்டுக்கு
2,000 ரூபாய் என்ற அளவிலும், செம்மறி ஆட்டுக்கு 1,500 ரூபாய் என்ற
அளவிலும், பன்றிக்கு 1,000 ரூபாய் என்ற அளவிலும் வழங்கப்படும். கோழி போன்ற
வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்கள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை பறவைக்கு
30 ரூபாய் என்ற அளவில் இருந்த இழப்பீட்டுத் தொகை, இனி பறவைக்கு 100 ரூபாய்
என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.
வன விலங்குகளால்
உடமைகளுக்கு இழப்பு ஏற்பட்டால், உண்மையான இழப்பின் அளவு அல்லது 100
ரூபாய், இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை இழப்பீட்டுத் தொகையாக இதுவரை
வழங்கப்பட்டது. இனி, வன விலங்குகளால் உடமைகள் இழப்பு ஏற்பட்டால், 2,000
ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு
» நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு
» பிரேசில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை 608 ஆக உயர்வு _ வீரகேசரி
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவ குடும்பத்துக்கு ரூ. 4000 நிவாரண தொகை: ஜெயலலிதா உத்தரவு
» நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு
» பிரேசில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை 608 ஆக உயர்வு _ வீரகேசரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|