சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

திஹார் சிறையிலிருந்து வெளிவந்தார் அன்னா- கொட்டும் மழையில் மக்கள் புடை சூழ ஊர்வலம் Khan11

திஹார் சிறையிலிருந்து வெளிவந்தார் அன்னா- கொட்டும் மழையில் மக்கள் புடை சூழ ஊர்வலம்

Go down

திஹார் சிறையிலிருந்து வெளிவந்தார் அன்னா- கொட்டும் மழையில் மக்கள் புடை சூழ ஊர்வலம் Empty திஹார் சிறையிலிருந்து வெளிவந்தார் அன்னா- கொட்டும் மழையில் மக்கள் புடை சூழ ஊர்வலம்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 9:46

டெல்லி: கடந்த 3 நாட்களாக திஹார் சிறையில் இருந்த அன்னா ஹஸாரே இன்று பிற்பகலில் வெளியே வந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ திஹார் சிறை வாசலிலிருந்து மாயாபுரி வரை அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அன்னாவின் ஊர்வலம் நடந்தது.

முன்னதாக இன்று பிற்பகல் 12 மணியளவில் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹஸாரேவை வாசலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர். அவர்களிடையே சிறிது நேரம் மைக் மூலம் பேசினார் ஹஸாரே.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் என்றார் அன்னா.

டிரக்கில் ஊர்வலம்

பின்னர் அவர் அங்கிருந்து ஒரு டிரக் மூலம் கிளம்பினார். வேன் மீது தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி காணப்பட்ட அன்னாவை நோக்கி ஆதரவாளர்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டனர். பின்னர் அந்த டிரக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் ஹஸாரே. வழியெங்கும் கூடியிருந்த ஆதரவாளர்கள் அன்னாவுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

பலத்த மழை பெய்து வந்த போதிலும் மகக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அன்னாவுடன் ஊர்வலமாக சென்றனர். எழுச்சி பொங்க அன்னாவின் டிரக்கைச் சுற்றிலும், பின் தொடர்ந்தும் மக்கள் அலையென வந்ததைப் பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது.

மாயாபுரி வரை ஊர்வலமாக செல்லும் ஹஸாரே அங்கிருந்து ராஜ்காட் செல்கிறார். காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் ராம்லீலா மைதானத்திற்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

அன்னாவின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்தது. இதை மீறப் போவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆவேசமடைந்த அன்னா சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அவருக்கு ஆதரவாக டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மத்திய அரசு பணிந்தது. அன்னாவை விடுதலை செய்தது.

இருப்பினும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளியே வர மாட்டேன் என்று அன்னா கூறி விட்டார். இதையடுத்து டெல்லி காவல்துறை, அன்னாவின் ஆதரவாளர்களோடு பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 15 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏற்பதாக அன்னா தரப்பு கூறி உத்தரவாதம் வழங்கி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தில், எனது ஆதரவாளர்கள் யாரேனும் விதிமுறைகளை மீறினால் என் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று அன்னா ஹஸாரேவே உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. 15 நாட்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பின்னர் தேவைப்பட்டால் நாட்களை நீடித்துக் கொள்ள முடியும் என்று அன்னா தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க பெரும்திரளானோர் குவிந்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் செய்து கொடுத்துள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum