Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
2 posters
Page 1 of 1
3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
சென்னை, ஆக. 21-
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வரி வசூலை முறைப்படுத்த வேண்டும், டீசல் விலை, உதிரி பாகங்களின் விலையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி நள்ளிரவு லாரி ஸ்டிரைக் தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுவை, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மட்டும் லாரி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. லாரி அதிபர்கள் சங்கத்தில் ஒரு பிரிவினர் இதில் பங்கேற்கவில்லை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணல் லாரிகள் ஓடுகின்றன. நாமக்கல்லில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு லாரி அதிபர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லாரி ஸ்டிரைக்குக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் முட்டை லாரிகள் இயக்கப்படுகிறது. லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சரக்கு போக்குவரத்து முடங்கியது. ஈரோட் டில் மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் நகரங்களில் கோடிக்கணக்கில் ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது. டேங்கர் லாரிகள் சங்கமும், டிரைலர் லாரிகள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பங்க்குகளுக்கு பெட்ரோல்-டீசல் சப்ளையாகவில்லை. ஏற்கனவே பங்க்குகளில் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே பெட்ரோல்-டீசல் விநியோகம் நடைபெறும். ஸ்டிரைக் நீடித்தால் தட்டுப்பாடு ஏற்படும். சென்னை உள்பட துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு ஏராளமான சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் காய்கறி விலை தற்போது வரை கட்டுக்குள் இருக்கிறது. ஸ்டிரைக் நீடித்தால் காய்கறி வரத்து குறைய வாய்ப்புள்ளது. மினி வேன், மினி லாரிகள், டெம் போக்களில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து ஓரளவுக்கு வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் வெங்காயம், தக்காளி போன்ற அழுகும் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெங்காயம் தேவைக்கு உள்ளூரில் 10 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது. மராட்டியத்தில் இருந்து 60 சதவீதமும், கர்நாடகத்தில் இருந்து 30 சதவீதமும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்கனவே வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து சில நாட்களுக்கு நிலைமையை சமாளிக்கலாம். அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை சற்று உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.15-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. கேரட், தக்காளி விலையும் கிலோவுக்கு ரூ.2 வரை அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருக்கிறது. மரம், செங்கல், மணல் போன்ற கட்டுமான பொருட் கள் கொண்டு செல்ல முடியாததால் கட்டிடப்பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் மினிவேன்கள் மூலம் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமான அளவு உள்ளது.
இதனால் தற்போதைக்கு விலைவாசி உயரவில்லை. ஸ்டிரைக் நீடித்து பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டால் விலை உயரும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே லாரி ஸ்டிரைக்கை தீவிரப்படுத்த லாரி அதிபர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஸ்டிரைக் நீடிக்கும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-
சுங்க வரியை குறைக்க வேண்டும், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு சுங்க வரியை மேலும் 10 சதவீதம் இப்போது உயர்த்தி இருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
1.9.11 முதல் சுங்கவரி அமுலுக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தென்மாநில அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை அகில இந்திய அளவில் மாற்ற டெல்லியில் இன்று லாரி அதிபர்கள் கூட்டம் நடக்கிறது. கச்சா எண்ணை டாலர் 121 ஆக உயர்ந்தபோது மத்திய அரசு டீசல் விலையை 3 ரூபாய் உயர்த்தியது. ஆனால் இப்போது டாலர் விலை 80 ஆக குறைந்து விட்டது. ஆனாலும் டீசல் விலையை மத்திய அரசு இன்னும் குறைக்கவில்லை.
இதுபற்றியும் ஆலோசிக்க இருக்கிறோம்.
இவ்வாறு நல்லதம்பி கூறினார்.
இதேபோல் தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் ஆர். சுகுமார் கூறுகையில், சுங்க வரியை 5 ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்த சட்டத்தை மாற்றவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தம் கால அவகாசம் கொடுத்து அறிவிக்கப்பட்டால் அதை வரவேற்போம் என்றார்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வரி வசூலை முறைப்படுத்த வேண்டும், டீசல் விலை, உதிரி பாகங்களின் விலையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி நள்ளிரவு லாரி ஸ்டிரைக் தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுவை, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மட்டும் லாரி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. லாரி அதிபர்கள் சங்கத்தில் ஒரு பிரிவினர் இதில் பங்கேற்கவில்லை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணல் லாரிகள் ஓடுகின்றன. நாமக்கல்லில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு லாரி அதிபர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லாரி ஸ்டிரைக்குக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் முட்டை லாரிகள் இயக்கப்படுகிறது. லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சரக்கு போக்குவரத்து முடங்கியது. ஈரோட் டில் மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் நகரங்களில் கோடிக்கணக்கில் ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது. டேங்கர் லாரிகள் சங்கமும், டிரைலர் லாரிகள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பங்க்குகளுக்கு பெட்ரோல்-டீசல் சப்ளையாகவில்லை. ஏற்கனவே பங்க்குகளில் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே பெட்ரோல்-டீசல் விநியோகம் நடைபெறும். ஸ்டிரைக் நீடித்தால் தட்டுப்பாடு ஏற்படும். சென்னை உள்பட துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு ஏராளமான சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களின் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் காய்கறி விலை தற்போது வரை கட்டுக்குள் இருக்கிறது. ஸ்டிரைக் நீடித்தால் காய்கறி வரத்து குறைய வாய்ப்புள்ளது. மினி வேன், மினி லாரிகள், டெம் போக்களில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து ஓரளவுக்கு வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் வெங்காயம், தக்காளி போன்ற அழுகும் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெங்காயம் தேவைக்கு உள்ளூரில் 10 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது. மராட்டியத்தில் இருந்து 60 சதவீதமும், கர்நாடகத்தில் இருந்து 30 சதவீதமும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்கனவே வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து சில நாட்களுக்கு நிலைமையை சமாளிக்கலாம். அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை சற்று உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.15-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. கேரட், தக்காளி விலையும் கிலோவுக்கு ரூ.2 வரை அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருக்கிறது. மரம், செங்கல், மணல் போன்ற கட்டுமான பொருட் கள் கொண்டு செல்ல முடியாததால் கட்டிடப்பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் மினிவேன்கள் மூலம் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமான அளவு உள்ளது.
இதனால் தற்போதைக்கு விலைவாசி உயரவில்லை. ஸ்டிரைக் நீடித்து பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டால் விலை உயரும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே லாரி ஸ்டிரைக்கை தீவிரப்படுத்த லாரி அதிபர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஸ்டிரைக் நீடிக்கும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-
சுங்க வரியை குறைக்க வேண்டும், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு சுங்க வரியை மேலும் 10 சதவீதம் இப்போது உயர்த்தி இருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
1.9.11 முதல் சுங்கவரி அமுலுக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தென்மாநில அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை அகில இந்திய அளவில் மாற்ற டெல்லியில் இன்று லாரி அதிபர்கள் கூட்டம் நடக்கிறது. கச்சா எண்ணை டாலர் 121 ஆக உயர்ந்தபோது மத்திய அரசு டீசல் விலையை 3 ரூபாய் உயர்த்தியது. ஆனால் இப்போது டாலர் விலை 80 ஆக குறைந்து விட்டது. ஆனாலும் டீசல் விலையை மத்திய அரசு இன்னும் குறைக்கவில்லை.
இதுபற்றியும் ஆலோசிக்க இருக்கிறோம்.
இவ்வாறு நல்லதம்பி கூறினார்.
இதேபோல் தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் ஆர். சுகுமார் கூறுகையில், சுங்க வரியை 5 ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்த சட்டத்தை மாற்றவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தம் கால அவகாசம் கொடுத்து அறிவிக்கப்பட்டால் அதை வரவேற்போம் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
அனியாயம் அக்கிரமம் கேட்க ஆள் இல்லையா...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலை {))jasmin wrote:அனியாயம் அக்கிரமம் கேட்க ஆள் இல்லையா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2-வது நாளாக லாரி ஸ்டிரைக்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
» தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
» தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|