Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்திய மத்திய அரசு திணறிப்போயுள்ளது. ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள் ஹசாரேவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
டில்லியில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, ‘அரசின் கருவூலத்தில் உள்ள நிதி மக்களுக்கு சொந்தமானது. இந்த கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட்டுள்ளனரோ அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது.
லோக்பால் மசோதா விவகாரத்தை தொடர்ந்து மற்ற பல விஷயங்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.
‘என் போராட்டத்தின் பின்னணியில் பா. ஜ. மற்றும் ஆர். எஸ். எஸ். இருப்பதாக சொல்பவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் மேலும் அமெரிக்காவுடனும் என் போராட்டத்தை தொடர்புபடுத்தி பேசினர். இனி பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தி பேசுவர்’ என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் கூறுகையில் :- ‘லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் அரசு தரப்பில் இதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என எங்களுக்கு தெரியவில்லை’ என்றனர். அதேநேரத்தில் லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காமல் விட்டுக் கொடுத்துச் செல்லவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ ஹசாரே குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திணறல் பிரதமரின் மழுப்பலான பதிலும் காங்கிரஸ் கட்சியினரின் கோபமும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் இன்னும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு பெரும் போராட்டமும் நெருக்கடியாகவுமே இருக்கும் என்கின்றன டில்லி அரசியல் வட்டாரங்கள்.
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பாராளுமன்ற நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை நேரத்தை வீணடிக்கும் செயல் என ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர். இது சரியல்ல பாராளுமன்ற நிலைக்குழு என்பது சிறு பாராளுமன்றம் போன்றது.
இந்த அமைப்பை விமர்சனம் செய்வது பாராளுமன்றை விமர்சனம் செய்வது போன்றது. எனவே இது உரிமை மீறல் விவகாரமாகும். சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்ளைக்காரர்கள் என கூறுகின்றனர். இது தனிநபர் தாக்குதல் அல்ல பாராளுமன்றை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்பவர்கள் ஜனநாயக அமைப்புகளை அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்கக் கூடியதல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறினார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்திய மத்திய அரசு திணறிப்போயுள்ளது. ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள் ஹசாரேவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
டில்லியில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, ‘அரசின் கருவூலத்தில் உள்ள நிதி மக்களுக்கு சொந்தமானது. இந்த கருவூலத்துக்கு திருடர்களால் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட்டுள்ளனரோ அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது.
லோக்பால் மசோதா விவகாரத்தை தொடர்ந்து மற்ற பல விஷயங்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.
‘என் போராட்டத்தின் பின்னணியில் பா. ஜ. மற்றும் ஆர். எஸ். எஸ். இருப்பதாக சொல்பவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் மேலும் அமெரிக்காவுடனும் என் போராட்டத்தை தொடர்புபடுத்தி பேசினர். இனி பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தி பேசுவர்’ என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் கூறுகையில் :- ‘லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் அரசு தரப்பில் இதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என எங்களுக்கு தெரியவில்லை’ என்றனர். அதேநேரத்தில் லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காமல் விட்டுக் கொடுத்துச் செல்லவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ ஹசாரே குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திணறல் பிரதமரின் மழுப்பலான பதிலும் காங்கிரஸ் கட்சியினரின் கோபமும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் இன்னும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு பெரும் போராட்டமும் நெருக்கடியாகவுமே இருக்கும் என்கின்றன டில்லி அரசியல் வட்டாரங்கள்.
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பாராளுமன்ற நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை நேரத்தை வீணடிக்கும் செயல் என ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர். இது சரியல்ல பாராளுமன்ற நிலைக்குழு என்பது சிறு பாராளுமன்றம் போன்றது.
இந்த அமைப்பை விமர்சனம் செய்வது பாராளுமன்றை விமர்சனம் செய்வது போன்றது. எனவே இது உரிமை மீறல் விவகாரமாகும். சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்ளைக்காரர்கள் என கூறுகின்றனர். இது தனிநபர் தாக்குதல் அல்ல பாராளுமன்றை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்பவர்கள் ஜனநாயக அமைப்புகளை அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்கக் கூடியதல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
பலமாதிரியான செய்திகள் இவரைப் பற்றி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்kalainilaa wrote:இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
நண்பன் wrote:பலமாதிரியான செய்திகள் இவரைப் பற்றி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்kalainilaa wrote:இந்த ஆளின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது இப்பதான் .
ஆ ஸ்ஸ்,கையாளன இவர் ,அமெரிக்காவுடன நெருகிய தொடர்பு கொண்டவராய் இருப்பதும் ,இந்தியாவில் குழப்பத்தை எப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் இந்த போராட்டம் என்று செய்திகள் வருகிறது .
https://chenaitamilulaa.forumta.net/t19234-topic
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உயிருக்கு உத்தரவாதமே இல்லாத சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்க மக்கள் அமோக ஆதரவு
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு
» ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
» ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு
» ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா
» ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|