Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
புதுடெல்லி, ஆக, 22-
ஊழலை
ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி
அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி
வருகிறார்.
இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடித்தது.
ராம்லீலா
மைதானத்தில் அன்னா ஹசாரேவுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில்
பங்கேற்றுள்ளனர். கடந்த வாரம் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்துக்கு வந்த
போது முதலில் 7 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டனர். அதன் பிறகு மக்கள் திரண்டு
வரத்தொடங்கினார்கள்.
கடந்த 2 தினங்களாக ஊழலுக்கு
எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. அலை, அலையாக மக்கள் ராம்லீலா
மைதானத்துக்கு வந்து குவிந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால்
நாடெங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு வகையான
போராட்டங்களை நடத்தினார்கள்.
மும்பை நகரில் சுமார் 1
லட்சம் பேர் திரண்டதால் பெரும் எழுச்சி காணப்பட்டது. சென்னை, பெங்களூர்,
கொல்கத்தா, உள்பட நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து
நடந்து வருகிறது.
ராம்லீலா மைதானத்தில் மக்கள் ஒரு
வாரத்துக்குப் பிறகு கலைந்து சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு
எதிர்பார்த்தது. ஆனால் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது
தான் சூடுபிடித்துள்ளது.
ராம்லீலா மைதானத்தில்
மக்கள் வெள்ளம் போல திரண்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போராட்டக் குழுவினரும், போலீசாரும் திணறியபடி உள்ளனர். 73 வயதாகும் அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும்
ஈர்த்துள்ளது.
பெரியவர்கள் மட்டுமின்றி
சிறுவர்களையும் அன்னா ஹசாரே கவர்ந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் ஏராளமான
சிறுவர், சிறுமிகள் தேசியக்கொடி ஏந்தியும், தேசியக்கொடி ரிப்பனை தலையில்
கட்டிக் கொண்டும் வலம் வருகிறார்கள். வந்தே மாதரம், பாரதமாதாவுக்கு ஜே
என்று சிறுவர், சிறுமிகள் கோஷம் போடுவதும், தேசப்பக்தி பாடல்களை பாடுவதும்
பெரியவர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.
சிறுவர்களிடம்
ஏற்பட்டுள்ள எழுச்சி, ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல
மாறி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களிடம் அன்னா
ஹசாரே பற்றி கேட்டால், அந்த தாத்தாவை தெரியும், ஊழலுக்கு எதிராக
உண்ணாவிரதம் இருக்காங்க என்று துல்லியமாக சொல்கிறார்கள்.
நாடு
முழுவதும் எல்லாரது மனதிலும் அவர் இடம் பிடித்து விட்டதையே இது
காட்டுகிறது. ஒரு சாயலில் மகாத்மா காந்தி போலவும் மற்றொரு சாயலில் முன்னாள்
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போலவும் இருப்பதால் அவரை எல்லாருக்கும்
பிடித்து விட்டது.
இத்தகைய காரணங்களால் இன்று நாடே
அன்னா ஹசாரே பின்னால் அணிவகுத்தது போல மாறியுள்ளது. இந்த எழுச்சியை தடுக்க
வேண்டுமானால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
மத்திய அரசு இதற்காக மராட்டிய மாநில கூடுதல் தலைமை
செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி மூலம் ரகசிய பேச்சு நடத்தியது. இந்த
பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே வேறு வழிகளில் சமரச
முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே
மந்திரிகள், எம்.பி.க்கள் வீடு முன்பு மக்கள் முற்றுகை போராட்டங்களை
தொடங்கியுள்ளனர். வரும் 30-ந் தேதிக்குள் ஜன லோக்பாலை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று அன்னா ஹசாரே குழுவினர்
மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
ஆலோசனை நடத்தி வருகிறது.
மாலை மலர்
ஊழலை
ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி
அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி
வருகிறார்.
இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடித்தது.
ராம்லீலா
மைதானத்தில் அன்னா ஹசாரேவுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில்
பங்கேற்றுள்ளனர். கடந்த வாரம் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்துக்கு வந்த
போது முதலில் 7 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டனர். அதன் பிறகு மக்கள் திரண்டு
வரத்தொடங்கினார்கள்.
கடந்த 2 தினங்களாக ஊழலுக்கு
எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. அலை, அலையாக மக்கள் ராம்லீலா
மைதானத்துக்கு வந்து குவிந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால்
நாடெங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு வகையான
போராட்டங்களை நடத்தினார்கள்.
மும்பை நகரில் சுமார் 1
லட்சம் பேர் திரண்டதால் பெரும் எழுச்சி காணப்பட்டது. சென்னை, பெங்களூர்,
கொல்கத்தா, உள்பட நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து
நடந்து வருகிறது.
ராம்லீலா மைதானத்தில் மக்கள் ஒரு
வாரத்துக்குப் பிறகு கலைந்து சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு
எதிர்பார்த்தது. ஆனால் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது
தான் சூடுபிடித்துள்ளது.
ராம்லீலா மைதானத்தில்
மக்கள் வெள்ளம் போல திரண்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போராட்டக் குழுவினரும், போலீசாரும் திணறியபடி உள்ளனர். 73 வயதாகும் அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும்
ஈர்த்துள்ளது.
பெரியவர்கள் மட்டுமின்றி
சிறுவர்களையும் அன்னா ஹசாரே கவர்ந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் ஏராளமான
சிறுவர், சிறுமிகள் தேசியக்கொடி ஏந்தியும், தேசியக்கொடி ரிப்பனை தலையில்
கட்டிக் கொண்டும் வலம் வருகிறார்கள். வந்தே மாதரம், பாரதமாதாவுக்கு ஜே
என்று சிறுவர், சிறுமிகள் கோஷம் போடுவதும், தேசப்பக்தி பாடல்களை பாடுவதும்
பெரியவர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.
சிறுவர்களிடம்
ஏற்பட்டுள்ள எழுச்சி, ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல
மாறி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களிடம் அன்னா
ஹசாரே பற்றி கேட்டால், அந்த தாத்தாவை தெரியும், ஊழலுக்கு எதிராக
உண்ணாவிரதம் இருக்காங்க என்று துல்லியமாக சொல்கிறார்கள்.
நாடு
முழுவதும் எல்லாரது மனதிலும் அவர் இடம் பிடித்து விட்டதையே இது
காட்டுகிறது. ஒரு சாயலில் மகாத்மா காந்தி போலவும் மற்றொரு சாயலில் முன்னாள்
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போலவும் இருப்பதால் அவரை எல்லாருக்கும்
பிடித்து விட்டது.
இத்தகைய காரணங்களால் இன்று நாடே
அன்னா ஹசாரே பின்னால் அணிவகுத்தது போல மாறியுள்ளது. இந்த எழுச்சியை தடுக்க
வேண்டுமானால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
மத்திய அரசு இதற்காக மராட்டிய மாநில கூடுதல் தலைமை
செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி மூலம் ரகசிய பேச்சு நடத்தியது. இந்த
பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே வேறு வழிகளில் சமரச
முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே
மந்திரிகள், எம்.பி.க்கள் வீடு முன்பு மக்கள் முற்றுகை போராட்டங்களை
தொடங்கியுள்ளனர். வரும் 30-ந் தேதிக்குள் ஜன லோக்பாலை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று அன்னா ஹசாரே குழுவினர்
மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
ஆலோசனை நடத்தி வருகிறது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
அப்படியானால் மக்களுக்கு சரியான பொழுதுபோக்கு கூடங்களை அரசு இன்னும் மக்களுக்கு சரியாக வழங்கவில்லை என்றுதானே அர்த்தம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|