Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
5 posters
Page 1 of 1
தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
சென்னை: மறைமலையடிகள் தலைமையிலான புலவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
`தை` முதல் நாளுக்குப் பதிலாக சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று மாற்றி நேற்று அதிமுக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இது குறித்து கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: `தை' முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
கருணாநிதி: மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.
அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியில், `தை` முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டித்தான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்தோம்.
கேள்வி: திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து அதிமுக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்திருக்கிறார்களே?
பதில்: அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
தமிழ்ப் புத்தாண்டை மாற்றக்கூடாது-ராமதாஸ்:
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை மாற்றி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வகை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இது தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தை மாதம் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று நானும், தமிழ் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே கடந்த 2008ம் ஆண்டு தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பதற்கான சட்ட திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது. இந் நிலையில், தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல.
சித்திரை முதல் நாள் இந்துக்களின் புத்தாண்டு என்ற போதிலும், குஜராத்தியர்களும், மராட்டியர்களும் தங்களது இனத்தின் அடிப்படையில் தனி புத்தாண்டை கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் முன்தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் உரிமையை பறிக்கக்கூடாது.
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
கி.வீரமணி கண்டனம்:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில், ஏற்கனவே தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் `தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.
அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அதிமுக அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
ராம்தாஸ ஆட்கள் வாயே திறக்காமல் சட்டசபையில் இருந்துவிட்டு இப்ப என்ன அறிக்கை வேண்டிருக்கு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அப்படியே அம்மாவிடமும் வந்துள்ளது அம்மா பார்த்து கவனம்
விழுந்திரப்போறீங்கள்
விழுந்திரப்போறீங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
மெதுவாக ஆடினால் , நிலை தடுமாறும் நிலைமை வரும் பொது, சுதாரித்துக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
:,”,: :,”,: @.sikkandar_badusha wrote:மெதுவாக ஆடினால் , நிலை தடுமாறும் நிலைமை வரும் பொது, சுதாரித்துக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு,,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» இவர் எடுத்த முடிவு சரியா?
» சுய விளம்பரத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய கருணாநிதி: ஜெ தாக்கு
» திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
» தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்: 'அப்பப்பப்பா'...பாஜக: 'அடடடடடடா'...விஸ்வ ஹிந்து பரிஷத்!
» இவர் எடுத்த முடிவு சரியா?
» சுய விளம்பரத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய கருணாநிதி: ஜெ தாக்கு
» திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
» தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்: 'அப்பப்பப்பா'...பாஜக: 'அடடடடடடா'...விஸ்வ ஹிந்து பரிஷத்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|