Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
+6
kalainilaa
நிலாம்
நண்பன்
ராணி
Atchaya
அப்துல்லாஹ்
10 posters
Page 1 of 1
பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு
எல்லோரும் கடந்து செல்லும்
பாதையோரத்தில் பார்வைக்கு
குருவியொன்று கட்டிய கூடும்
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்
பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும்
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில்
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர்
மணிககையில் மல்லிகை சுற்றி
மைனராய் வலம் வந்தவராம்..
கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின்
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...
இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில்
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...
வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண
கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால்
பாழடைந்த ஒரு வரலாறு...
எல்லோரும் கடந்து செல்லும்
பாதையோரத்தில் பார்வைக்கு
குருவியொன்று கட்டிய கூடும்
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்
பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும்
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில்
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர்
மணிககையில் மல்லிகை சுற்றி
மைனராய் வலம் வந்தவராம்..
கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின்
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...
இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில்
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...
வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண
கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால்
பாழடைந்த ஒரு வரலாறு...
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
இன்னும் கிராமத்தில் சொல்ல்லுவார்கள்,
ஏன் அந்த வீடு விலைக்கு வந்தால் கூட வங்க மறுப்பார்கள்,
மறுப்பவர் சொல்லும் வார்த்தை வாழ்ந்து கேட்ட வீடு.
கவிதை உண்மையை சொல்லும் நிலை .எழுதிய சகோ ,பாராட்டுக்கள் .பழைய நினைவுகள் தந்தமைக்கு நன்றி .
ஏன் அந்த வீடு விலைக்கு வந்தால் கூட வங்க மறுப்பார்கள்,
மறுப்பவர் சொல்லும் வார்த்தை வாழ்ந்து கேட்ட வீடு.
கவிதை உண்மையை சொல்லும் நிலை .எழுதிய சகோ ,பாராட்டுக்கள் .பழைய நினைவுகள் தந்தமைக்கு நன்றி .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
பாழாய்ப் போன வரலாறு நான் 17வது நபராக பார்க்கிறேன் இரண்டு பின்னூட்டங்கள் மட்டும் இடப்பட்டுள்ளன இந்த கவிதை வரிகளில்
பல உண்மைகள் உள்ளன வரலாற்று சான்றுகளும் தெரிகின்றன என்ன கருவை இப்படி அலங்கரித்தார் சிறப்புக் கவிஞர் அப்துல்லாஹ் சின்ன விளக்கமும் தாருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்
பல உண்மைகள் உள்ளன வரலாற்று சான்றுகளும் தெரிகின்றன என்ன கருவை இப்படி அலங்கரித்தார் சிறப்புக் கவிஞர் அப்துல்லாஹ் சின்ன விளக்கமும் தாருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
தனது இவ்வுலக வாழ்வை விரயமாக்கி இறுதியில் விட்டுச் சென்ற ஒரு நினைவுச்சின்னம்...வாரிசுகள் இருந்தும் அனாதையாய் விடப்பட்டது அவர் மட்டுமல்ல அவர் வாழ்ந்து மரணித்த அந்த விடும் தான்..நண்பன் wrote:பாழாய்ப் போன வரலாறு நான் 17வது நபராக பார்க்கிறேன் இரண்டு பின்னூட்டங்கள் மட்டும் இடப்பட்டுள்ளன இந்த கவிதை வரிகளில்
பல உண்மைகள் உள்ளன வரலாற்று சான்றுகளும் தெரிகின்றன என்ன கருவை இப்படி அலங்கரித்தார் சிறப்புக் கவிஞர் அப்துல்லாஹ் சின்ன விளக்கமும் தாருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்
பயனற்ற பேய் வீடாகவே இன்னும் ஊரில் உள்ளது....
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
இதுதான் எனக்கும் புரிந்தது வேறேதும் உண்டோ என்று நினைத்தேன்அப்துல்லாஹ் wrote:தனது இவ்வுலக வாழ்வை விரயமாக்கி இறுதியில் விட்டுச் சென்ற ஒரு நினைவுச்சின்னம்...வாரிசுகள் இருந்தும் அனாதையாய் விடப்பட்டது அவர் மட்டுமல்ல அவர் வாழ்ந்து மரணித்த அந்த விடும் தான்..நண்பன் wrote:பாழாய்ப் போன வரலாறு நான் 17வது நபராக பார்க்கிறேன் இரண்டு பின்னூட்டங்கள் மட்டும் இடப்பட்டுள்ளன இந்த கவிதை வரிகளில்
பல உண்மைகள் உள்ளன வரலாற்று சான்றுகளும் தெரிகின்றன என்ன கருவை இப்படி அலங்கரித்தார் சிறப்புக் கவிஞர் அப்துல்லாஹ் சின்ன விளக்கமும் தாருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்
பயனற்ற பேய் வீடாகவே இன்னும் ஊரில் உள்ளது....
மிகவும் அருமை சார்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மறுமைக்காவும் வாழ்வோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
உங்கள் கவிதையை
எங்கள் தெருவுக்கு
உதாரணம் கூறலாம்!
கொடுத்த கைகளுக்கு,
வாழும் வரை வாழ்க்கை,
போனபின்பு வாழ்கையே தணிக்கை !
உள்ளதை,ஒவ்வொரு வூரில்
இருப்பதை வெளிச்சமிட்டு
காட்கிறது !
இவர்களை மறந்தாலும்
வாழ்ந்த இவர்கள் வீடுக்கு
மட்டும் இன்னும் பேசப்படும் வாரலாறு!
உங்கள் சமுக கவிதைகளை,
தொடருங்கள்,வேட்டை ஆரம்பமாட்சி,
என்ற எண்ணத்தோடு ....வாழ்த்துகிறேன் .பாராட்டுகிறேன் !
எங்கள் தெருவுக்கு
உதாரணம் கூறலாம்!
கொடுத்த கைகளுக்கு,
வாழும் வரை வாழ்க்கை,
போனபின்பு வாழ்கையே தணிக்கை !
உள்ளதை,ஒவ்வொரு வூரில்
இருப்பதை வெளிச்சமிட்டு
காட்கிறது !
இவர்களை மறந்தாலும்
வாழ்ந்த இவர்கள் வீடுக்கு
மட்டும் இன்னும் பேசப்படும் வாரலாறு!
உங்கள் சமுக கவிதைகளை,
தொடருங்கள்,வேட்டை ஆரம்பமாட்சி,
என்ற எண்ணத்தோடு ....வாழ்த்துகிறேன் .பாராட்டுகிறேன் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
வாழ்ந்து கெட்டவர்கள் பலருண்டு..
கெட்டே வாழ்ந்தவர் இன்னுமுண்டு..
வாழத்தெரியாமல் வளரும்வகையறியாமல்
வீழ்ந்து பட்டவர் எண்ணற்று உண்டு..
இங்கே நீவிர் காட்டிய இந்த வரலாறு இதனை வாசிக்கும் பலருக்கும் கட்டிடும் வாழுமாறு*..
பாராட்டுகள் அப்துல்லாஹ் அவர்களே..!
*வாழுமாறு - வாழும் ஆறு - வாழும் வழி.
கெட்டே வாழ்ந்தவர் இன்னுமுண்டு..
வாழத்தெரியாமல் வளரும்வகையறியாமல்
வீழ்ந்து பட்டவர் எண்ணற்று உண்டு..
இங்கே நீவிர் காட்டிய இந்த வரலாறு இதனை வாசிக்கும் பலருக்கும் கட்டிடும் வாழுமாறு*..
பாராட்டுகள் அப்துல்லாஹ் அவர்களே..!
*வாழுமாறு - வாழும் ஆறு - வாழும் வழி.
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
அருமையான வரிகள் வரலாட்டு உண்மைகள் கண் முண்னே காட்சியாகிறது தாழரே.
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
இந்தக் கவிதையை நான் காலையிலேயே படித்துவிட்டேன். எல்லோரும் பின்னூட்டம் இடட்டும் பிறகு எழுதலாமென இருந்தேன். காரணம் இதுவரை யாருமே எழுதாத ஒரு கருவிது. கவிதை வடிக்க காதலும் , காமமும், சோகமும் சோதனையும், சாதனையும் வேதனையுமே கருக்களாகக் கொண்டு கவிதை படைக்கும் நம்மிலிருந்து மிக மிக வித்யாசமாக புதியதோற சிந்தனையுடன் கூடிய கவிதையிது .
பாழடைந்த வீட்டின் வைக்கோல் தூசியை ஏன் நம் கவிஞர் நுகர்ந்து பார்க்கிறார் என கேள்விக்குறியோடு நான் படிக்கையில் ... அடுத்த வரிகளில் தான் தெரிகிறது... மணிக்கையில் மல்லிகையோடு வலம் வந்த மைனர் வாப்பா வாழ்ந்த வீடாம்... பாழடைந்தும் அதே வாசமுடன்... நம்மிடம் காட்டுகிறார்.
"இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்
பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பா வாழ்நது கெட்ட வீடாம்
மணிககையில் மல்லிகை சுற்றி
மைனராய் வலம் வந்தவராம்"
அவரின் வரலாற்றை என்ன ஒரு அருமையாக பத்திக்கிறார் ...
"கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் வீணாய்ப்போன வரலாறு"
பரவசப் பட்ட உடல் இன்று தன்வசமில்லாது... பார்வையும் பாதியாய் கால்களும் கோணலாய் ஆகி ... துணைவியும் தொலைந்தபின் ....கிடையாடாக மாறிக் கிடந்டந்தே இறந்துவிட்ட ஒருவரின் வரலாறு...
"பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண
கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
பாழடைந்த ஒரு வரலாறு..."
தங்களுக்குத் தோன்றிய சிந்தனை அருமை அப்துல்லா... அதையும் நாசூக்கான வார்த்தைகளால் நயமாக எடுத்து வடித்த பாங்கு அற்புதம். பாழடைந்த வரலாறை தங்கள் கவிதை வடிவில் படித்து நாமடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
இன்னும் தொடர்க .. இதுபோன்ற புதிய கருத்துக்களை
அன்புடன், யாதுமானவள்
பாழடைந்த வீட்டின் வைக்கோல் தூசியை ஏன் நம் கவிஞர் நுகர்ந்து பார்க்கிறார் என கேள்விக்குறியோடு நான் படிக்கையில் ... அடுத்த வரிகளில் தான் தெரிகிறது... மணிக்கையில் மல்லிகையோடு வலம் வந்த மைனர் வாப்பா வாழ்ந்த வீடாம்... பாழடைந்தும் அதே வாசமுடன்... நம்மிடம் காட்டுகிறார்.
"இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்
பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பா வாழ்நது கெட்ட வீடாம்
மணிககையில் மல்லிகை சுற்றி
மைனராய் வலம் வந்தவராம்"
அவரின் வரலாற்றை என்ன ஒரு அருமையாக பத்திக்கிறார் ...
"கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் வீணாய்ப்போன வரலாறு"
பரவசப் பட்ட உடல் இன்று தன்வசமில்லாது... பார்வையும் பாதியாய் கால்களும் கோணலாய் ஆகி ... துணைவியும் தொலைந்தபின் ....கிடையாடாக மாறிக் கிடந்டந்தே இறந்துவிட்ட ஒருவரின் வரலாறு...
"பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண
கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
பாழடைந்த ஒரு வரலாறு..."
தங்களுக்குத் தோன்றிய சிந்தனை அருமை அப்துல்லா... அதையும் நாசூக்கான வார்த்தைகளால் நயமாக எடுத்து வடித்த பாங்கு அற்புதம். பாழடைந்த வரலாறை தங்கள் கவிதை வடிவில் படித்து நாமடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
இன்னும் தொடர்க .. இதுபோன்ற புதிய கருத்துக்களை
அன்புடன், யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sun 4 Sep 2011 - 21:25; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்
://:-: ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» கடுகு - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|