சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

கதைசொல்லும் பாடல்கள்  Khan11

கதைசொல்லும் பாடல்கள்

+2
Atchaya
சர்ஹூன்
6 posters

Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Tue 20 Sep 2011 - 11:31



எப்போதாவது சில விடயங்கள் திடீரென உதிக்கும். உண்மையில் நாம் அது பற்றி சிந்தித்துக்கூட இருக்கமாட்டோம். ஆனாலும் அது நிகழ்ந்துவிடும். இன்று காலை எனக்கு அது நிகழ்ந்தது. ஒரு பாடல்.. திடீரென எங்கிருந்தோ பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

சில பாடல்கள் தனிப்பட்ட வாழ்வில் மிக அதிக கனதி கொண்டிருப்பது உணர்வுபூர்வமான ஒன்று அல்லவா? சில வேளைகளில் சில பாடல்கள், எம்மை எமது சிறு பருவத்திற்கு அழைத்துப்போகும், சில வேறு சம்பவங்களை… என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளினை சுமந்து திரியும். எனக்கு இன்று நிகழ்ந்ததும் அதுதான்.

“என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க …… ‘

காலை வேக வேகமாக அலுவலகம் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது அது நிகழ்ந்தது. நினைவுகள் கோர்வையாகி பல்கலைக்கழக நோக்கி விரட்டியது. ஆமாம் இப்பாடல் எப்போதும் எனக்கு சிறிது அசௌகரியத்தினையும் வலியினையும் கொண்டு சேர்க்கும். அதனால் இதனை தவிர்ப்பதில் என்னாலான எல்ல முயற்சிகளினையும் எடுத்துக்கொள்வேன். இருந்தும் சில வேளைகளில் என்னையும் மீறி அது நிகழ்ந்து விடுகின்றது.

இன்றும் அப்படித்தான், சே! என்ன ஆனது?

“என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க …… ‘

மீண்டும் ரீங்காரமிடத்தொடங்கி விட்டது. இம்முறை இன்னும் ஆழமாக அது உள்ளிறங்குவது போல ஒரு பிரம்மை.

“ஏ! பாடலே! இன்று நான் உன் கைதி, நீ உன் இஷ்டம் போல என்னை வதைக்கலாம்” என எனக்குள் சொல்லிக்கொண்டேன். சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை.

பல்கலைக்கழக வாழ்வில் மெல்லிதாய் அரும்பிய உறவொன்று.. நட்புக்கும் காதலுக்குமிடையில் நின்று திணறிக்கொண்டிருந்தது. எனக்கு குடும்ப தளைகள் தாண்டி அக்கோட்டினை தாண்ட திராணியில்லை. ஆனாலும் அவள் தாண்ட தயாராய் இருந்தாள். காலங்கள் இப்படியே என்களை ஒத்திச்சென்ற போது, அது காதலாகிப்போய்விட்டது. இன்னும் குழப்பத்துடன் நான் இருந்தாலும் அது காதல்தான்..

எனக்காக வாழ / மாற தொடங்கிவிட்டாள். அவ்வேகம் பிரமிப்பாக மாறியது எனக்கு. பின்னர் அதுவே பயமாக மாறலானது. உண்மை! ஏனெனில் அதீதமான அவள் காதல் என சுதந்திரத்தினை கேள்விக்குறியாக்கலானது. வேறு நண்பிகளுடன் கதைப்பது, நேரம் பிந்துவது …என ஒவ்வொன்றிற்கும் அவளிடமிருக்குமொரே பதில்: “உனக்கு என்னில் காதலில்லை” அவளின் முரட்டுத்தனமான அன்பிற்கு முன்னால் ஒப்பிடும்போது அது உண்மையோ எனத்தோன்றும். ஆனால் நான் அவளை காதலித்தேன். அத்தருணங்களில் இப்பாடல் வரிகளே எனக்கு கை கொடுக்கும். மெல்லிய முறுவலோடும் கண்களில் காதலோடும் குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற்றுக்கொள்வாள்.

எத்தனை முறை இவ்வரிகள் எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரு சமாதான தூதுவனாக இருந்திருக்கும்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… நினைவுகளுக்கு கடிவாளமில்லை. அது சென்று கொண்டே இருக்கும். இன்னும் அதற்கு மேலாக ஊக்கிகள் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா? தனிமையில் இதை எழுதும் போது, அவளின் காதலின் தீவிரத்தினை இன்று உணர்கின்றேன். ஆனாலும் காலம் பிந்திய ஞானங்கள் எதற்கும் உதவாது அல்லவா? அது முடிந்து போய்விட்டது.

அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by Atchaya Tue 20 Sep 2011 - 12:12

இளம் வயதில் தொலைவில் இருக்கின்றீர்கள். நினைவுகள் உங்களை நிறையவே பாதிக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் கற்பனைக்கும் நிஜத்திருக்குமுள்ள வேறுபாடுகளை உங்களுக்கு உணர்த்தி வருகிறான்.
இதுபோன்ற வுனர்வுகள் ஏற்படுவது இயற்கை. மனதை தெளிவாக்குங்கள். ஆகவில்லை என்றால் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 13:00

இளவயதுக்காதலில் சிக்காதவர் யாருமில்லை எனலாம் அக்காதல் நிச்சயமற்றது என்பது தோல்வியான பின்னர்தான் அறியவருகிறது சதையும் நகமுமாய் உடலும் உயிருமாய் உருகி பருகி காதலிக்கும் போதுள்ள சுகமிருக்கே உலகை ஒரு கணம் மறந்துவிடுவோம் அவ்வாறே உங்களின் நிலை என உணர்கிறேன்

அன்றய நினைவுகள் இன்று திரும்பிப்பார்க்கச் செய்த பாடலுக்கு ஒரு சலூட் அதை எங்களோடு பகிர்ந்திட்ட உங்களுக்கும் உங்கள் படைப்புக்கும் பாராட்டுகள்
உங்களுக்காகப் பிறந்தவள் ஒருவள் காத்திருப்பாள் அவளோடு இணையும் காலம் இந்த பழைய நினைவுகளும் மறந்து புது மனிதனாவீர்கள் அப்போது உணர்வீர்கள் வாழ்வின் அர்த்தத்தினை அதனால் இன்றய கவலை இன்றொடு அகன்றிடட்டும் நன்றிகள் நண்பா


கதைசொல்லும் பாடல்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 13:07

கண்டிப்பாக உங்கள் கதை சொல்லும் பாடலுடன் வந்த பசுமையான நினைவுகள் மிகவும் விருவிருப்பாக உள்ளது அதை நீங்கள் தந்த விதம் இன்னும் அழகு அனுதாப வாழ்த்துக்கள்.

அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?

கண்டிப்பாக முதல் மனதில் தோண்றும் காதல் யாராலும் மறக்க முடியாது மறுக்க முடியாது அப்படியான ஒரு சம்பவத்தை நீங்கள் எங்களுக்காக படைத்து பகிர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்
வாழ்க வழமுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 13:12

இது தான் தல ,காதல் இருகொல்லி தீ .அணையாது ,அணைத்துவிட
முடியாது ..........!

காதல் வேண்டுமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 16:30

நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..


பகிர்வுக்கு நன்றி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 18:00

அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..


பகிர்வுக்கு நன்றி

வரேவா அடிச்சாரு பாரு பாயின்டு காதல் என்பது தேன் கூடு
ரசனை சூப்பருதான் சார் காதல் வாழ்க கதைசொல்லும் பாடல்கள்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Wed 21 Sep 2011 - 7:53

Atchaya wrote:இளம் வயதில் தொலைவில் இருக்கின்றீர்கள். நினைவுகள் உங்களை நிறையவே பாதிக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் கற்பனைக்கும் நிஜத்திருக்குமுள்ள வேறுபாடுகளை உங்களுக்கு உணர்த்தி வருகிறான்.
இதுபோன்ற வுனர்வுகள் ஏற்படுவது இயற்கை. மனதை தெளிவாக்குங்கள். ஆகவில்லை என்றால் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்.

இதையெல்லாம் கடந்து வந்தாச்சு நண்பரே! இப்போது இவை எல்லாம் ஒரு ஞாபகங்கள் அவ்வளவே..

தங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றிகள்..

நட்போடு

-சர்ஹூன் -
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Wed 21 Sep 2011 - 7:56

நேசமுடன் ஹாசிம் wrote:இளவயதுக்காதலில் சிக்காதவர் யாருமில்லை எனலாம் அக்காதல் நிச்சயமற்றது என்பது தோல்வியான பின்னர்தான் அறியவருகிறது சதையும் நகமுமாய் உடலும் உயிருமாய் உருகி பருகி காதலிக்கும் போதுள்ள சுகமிருக்கே உலகை ஒரு கணம் மறந்துவிடுவோம் அவ்வாறே உங்களின் நிலை என உணர்கிறேன்

அன்றய நினைவுகள் இன்று திரும்பிப்பார்க்கச் செய்த பாடலுக்கு ஒரு சலூட் அதை எங்களோடு பகிர்ந்திட்ட உங்களுக்கும் உங்கள் படைப்புக்கும் பாராட்டுகள்
உங்களுக்காகப் பிறந்தவள் ஒருவள் காத்திருப்பாள் அவளோடு இணையும் காலம் இந்த பழைய நினைவுகளும் மறந்து புது மனிதனாவீர்கள் அப்போது உணர்வீர்கள் வாழ்வின் அர்த்தத்தினை அதனால் இன்றய கவலை இன்றொடு அகன்றிடட்டும் நன்றிகள் நண்பா

நன்றிகள் ஹாசீம்.. பழைய பக்கங்களை புரட்டினேன் அவ்வளவே.. அதெல்லாம் முடிந்துவிட்டது..

பாராட்டுக்கு நன்றிகள்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Wed 21 Sep 2011 - 7:57

நண்பன் wrote:கண்டிப்பாக உங்கள் கதை சொல்லும் பாடலுடன் வந்த பசுமையான நினைவுகள் மிகவும் விருவிருப்பாக உள்ளது அதை நீங்கள் தந்த விதம் இன்னும் அழகு அனுதாப வாழ்த்துக்கள்.

அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?

கண்டிப்பாக முதல் மனதில் தோண்றும் காதல் யாராலும் மறக்க முடியாது மறுக்க முடியாது அப்படியான ஒரு சம்பவத்தை நீங்கள் எங்களுக்காக படைத்து பகிர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்
வாழ்க வழமுட
ன்
நண்பன்.

நன்றி நண்பன், உங்களுக்கும் பழைய நினைவுகள் இருந்தால் பகிருங்களேன்... :!#: :!#: :!#: ( இதான் கோர்த்துவிடுறது.. :”: :”: :”: )
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Wed 21 Sep 2011 - 7:59

kalainilaa wrote:இது தான் தல ,காதல் இருகொல்லி தீ .அணையாது ,அணைத்துவிட
முடியாது ..........!

காதல் வேண்டுமா ?

ரொம்ப அனுபவப்பட்டிருக்கீங்க போல,, சும்மா சொல்லுங்களேன் சார் அந்தக்கால கறுப்பு வெள்ளை காதல் எப்பிடி இருந்துச்சுன்னு கேட்போம் @. @.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by சர்ஹூன் Wed 21 Sep 2011 - 8:00

அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..


பகிர்வுக்கு நன்றி

இன்று காலை - ஜெயா டீவியில் ஒளிபரப்பாகும் , " தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில் நீங்கள் மேற்கோள் காட்டிய பாடல் ஒளிபரப்பானது... உண்மைதான்

பாராட்டுக்கு நன்றிகள் :”@: :”@:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கதைசொல்லும் பாடல்கள்  Empty Re: கதைசொல்லும் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum