சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

காட்டுயிர்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்  Khan11

காட்டுயிர்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்

Go down

காட்டுயிர்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்  Empty காட்டுயிர்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்

Post by Atchaya Sun 25 Sep 2011 - 16:57

வனவிலங்குகள் என்றவுடன் எங்கோ தொலைவில் வாழும் பெரிய விலங்குகள் என்ற சித்திரமே நமது மனதில் தோன்றுகிறது. வனவிலங்கு என்று சாதாரணமாக குறிப்பிடுவது பெரிய பாலு£ட்டிகளை மட்டுமே. ஆனால் வனவிலங்குகள் (காட்டுயிர்கள்) என்பது இன்னும் விரிவான பொருளில் குறிப்பிடப்படுகிறது. ஐந்து பேரினங்களில் உள்ள உயிரினங்களை அடக்கியது. தாவரங்கள், விலங்குகளைத் தவிர, மூன்று பேரினங்கள் உள்ளன என்று நவீன இயற்கையியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பூஞ்சைகள், நுண்ணுயிர் நீர்த்தாவரங்கள்-புரோடோசோவாகள்,ஒரு செல் பாக்டீரியாகள் என்ற அந்த மூன்றும் காட்டுயிர்கள்தான். அப்படியானால் பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என அனைத்து வகைகளும் காட்டுயிர்களே. அனைத்து உயிரினங்களும் காட்டுயிர்களில் அடக்கம் என்பதால், நமது வீட்டிலுள்ள சிலந்திகள் தொடங்கி பார்க்கும் இடமெல்லாம் அவை வாழ்கின்றன.

மனிதர்கள் பழங்களை சேகரித்து, விலங்குகளை வேட்டையாடி உணவு தேடுபவர்களாக அறிமுகமானார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்த உலகம் இயற்கையியலாளர்களின் சொர்க்கமாக, காட்டுயிர்கள் மண்டிக்கிடந்தது என்று புதைபடிம ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

மனிதர்களின் அறிவுத் திறன் வளர்ந்தது. அவர்கள் வெற்றிகரமான உயிரினமாக மாறினார்கள். அவர்களது எதிரிகளாக இருந்த காட்டுயிர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அவர்களது எண்ணிக்கை கூடியது, பரவினார்கள். அதேநேரம் செயல்பாடுகளின் வரம்பு விரிவடைந்து கொண்டே போனது.

நகரங்கள், பட்டணங்கள், அணைகள், கால்வாய்கள், சாலைகள், வயல்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் காடுகளை அழித்தனர், ஏரிகளையும், குளங்களையும் நிரப்பினர். பூச்சிகளை விரட்டுவதற்காக பயிர்களில் நச்சை கவிழ்த்தனர். அவர்கள் அதிகம் பயணம் செய்தார்கள். அப்படிச் சென்றவோது வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாகளை சுமந்து சென்றனர். அவற்றை எல்லா இடங்களிலும் பரப்பினார்கள். வாகனங்கள், விண்கலங்கள், தொழிற்சாலைகள், அணுவெடிப்பு சோதனைகள் மூலம் நீர், நிலம், காற்றில் ஆபத்தான வேதிப்பொருள்களைக் கலந்தார்கள். இயற்கை உலகம் சுருங்க ஆரம்பித்தது, பின்வாங்கியது.

சுருங்கச் சொன்னால், காட்டுயிர்கள் மீது மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்பு பயங்கரமாக இருந்தது. நமது சமீபகால நினைவலைகளை ஆராய்ந்தால்கூட, காட்டுயிர்கள் அதிகம் இருந்ததை அறிய முடிகிறது. கடந்த தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையினரிடம் கேட்டால் காட்டுயிர்கள் பற்றிய அவர்கள் கூறும் விவரணைகள் நம்பமுடியாததாக இருக்கின்றன.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அதிக கற்பனை தேவையில்லை. தற்போது ஆங்காங்கு ஒட்டிக்கொண்டுள்ள இயற்கை வடிவமைப்புகள் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். காட்டுயிர்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கும். அவற்றில் பல மனிதர்களால் பார்க்கப்படாதவையாகவும், வகை பிரிக்கப்படாதவையாகவும் இருக்கும்.

உலகம் முழுவதும் மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். நாம் எங்கு சென்றாலும் வயல்கள், சாலைகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள், அணைகள்... நிரம்பியிருக்கும். இது மிகவும் மோசமான நிலைமை. நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் காட்டுயிர்கள் மறைந்துவிடும். நாம் இந்த பூமியின் குழந்தைகள், ஆனால் ஒரு முக்கிய புள்ளியில், நாம் பூமியின் மேலாளர்கள் ஆகிவிட்டோம்.

நாம் நீண்டகாலமாக செயற்கையான மனித உலகத்துக்குள் வாழ்ந்துவிட்டதுதான், எல்லாமே வேறு திசையில் செல்வதற்குக் காரணம். இப்பொழுது எல்லாமே நம்முடையது என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம். பழசை மறந்துவிட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றி குழந்தைகள் அறியாமல் இருக்கிறார்கள்.

அதேநேரம், இயற்கையின் படைப்புகளை நாம் இன்னமும் குறிப்பிட்ட அளவு போற்றித்தான் வருகிறோம். விலங்கு காட்சியகம் அல்லது காட்டுயிர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து குழந்தைகள், பெரியவர்கள் பரவசம் அடைகிறோம். காட்டுயிர்கள் தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆர்வத்தை அதிகரிக்கும், காட்டுயிர்களை பாதுகாப்புக்கு அதிக ஆதரவு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

காட்டுயிர்களை பாதுகாக்க நாம் எதுவும் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, சூழலியல் காரணங்கள் வலியுறுத்துகின்றன.

வாழும் உயிரின வகைகள் மிக அதிக அளவில் உள்ளன, அவை சிக்கலான வகையில் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அதிக வகைகள் அழிந்தால் என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் நாமும் இறந்துவிடுவோம். ஏனென்றால் நாம் மட்டும் தனியாக வாழ முடியாது.

காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று முன்மொழியும் மற்றொரு விவாதம், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனென்றால், காடுகளில் உள்ள பல உயிர் காக்கும் மருந்துகள் நமக்குக் கிடைக்காமலே போகக் கூடும். அந்தத் தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. அத்தகைய காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன.

காட்டுயிர்களை காக்க வலியுறுத்தும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் பெரிதும் மனிதர்களை மையமிட்டவை. நாம் நம் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும், நமது நலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியில்லாமல், செயற்கை வேதிப்பொருள்கள், பயிர்கள், பண்ணை விலங்குகள் மூலம் நாம் வாழ முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

அதற்குப் பிறகும் நாம் காட்டுயிர்களை காக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் நாம் வைத்துள்ள மதிப்பீடுகள் அப்படிப்பட்டவை. நாம் வைத்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எது சரி, எது சரியில்லை என்பதை தீர்மானிக்கிறோம். பூமியில் உயிரினம் தோன்றியதை சுருக்கமாக ஓராண்டு என்று வைத்துக் கொண்டால், நாகரிகமடைந்த மனிதனின் மொத்த வாழ்க்கையும் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், புதிதாக வந்த ஒருவர், உலகை ஒட்டுமொத்தமாக அழிப்பதும், ஆக்கிரமிப்பதும் மனித மதிப்பீடுகளின்படி சரியல்லவே.

இவற்றைத் தாண்டி இயற்கை, காட்டுயிர்களை நேரில் கண்டு உணர்ந்தவர்கள், ஆர்வம் கொண்டவர்களின் பிணைப்பு வலுவானது, கட்டாயம் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது.

நன்றி poovulagin nanbargal
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
» பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல் நடத்தும் குற்றங்கள் அனைத்தையும் கட்டாயம் முடிவு கட்ட வேண்டும்
» எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு
» எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum