Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:31 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
Engeyum Eppothum(எங்கேயும் எப்போதும்)
3 posters
Page 1 of 1
Engeyum Eppothum(எங்கேயும் எப்போதும்)
சற்றும் சிந்திக்காத அவசரம் மனிதனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்
ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து
விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல உயிர்கள் நிம்மதியுடன் வாழும்.
அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பயணமாக இருந்தாலும் சரி. இந்த கருத்தை
இரு பேருந்துகளின் விபத்து மூலம் நம் முகத்தில் அறைய வைக்கிறார் அறிமுக
இயக்குநர் சரவணன். இதனூடே மெல்லினக் காதலையும், வல்லினக் காதலையும்,
இடையினக் காட்சிகளையும் நேர்த்தியாய் கொடுத்து தமிழ் போல்
அழகாக்கியிருக்கிறார்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது,
திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. இந்த இரண்டும்
விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சர்வானந்த்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் யார்?
இவர்களுக்குள் என்ன தொடர்பு? இந்த விபத்தால் இவர்கள் வாழ்க்கையில்
நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன? என்பதுதான் 'எங்கேயும் எப்போதும்'
படத்தின் திரைக்கதை.
விபத்து நிகழ்வதில் இருந்தே தொடங்குகிறது படம். விபத்தான பேருந்துகளில்
பயணித்த கதாபாத்திரங்களின் கடந்த கால வாழ்கையை பின்நோக்கிச் சென்று
விவரிக்கிறார் இயக்குநர். அந்த பயணத்தில் திக் திக் என்று நெஞ்சைப்
பிடித்தபடி நாமும் பயணமாகிறோம். அந்த விபத்தில் நாமும் சிக்கிக் கொண்டது
போல உணர வைத்து விடுகிறார் இயக்குநர். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் இனி
வேகமாக வாகனம் ஓட்டக் கூடாது என உணரவைத்து விடுகிறது படம்.
இப்படி ஒரு நல்ல காதல் ஜோடிகளைப் பார்த்து நாட்கள் பலவாகிவிட்டது.
கதிரேசன் (ஜெய்) மணிமேகலை (அஞ்சலி) என்ற பெயர் தமிழ் சினிமாவில் இன்னும் பல
ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும். தியேட்டரில் இருப்பவர்களை இதழோரம்
புன்னகை வழிய ரசித்து ரசித்து பார்க்க வைத்த அருமையான காதல்.
நெகட்டிவ் கேரக்டர்களே படத்தில் இல்லை என்பது தமிழ் சினிமாவில் புதுசு மற்றும் ஆறுதல்.
ஜெய் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக கச்சிதமாக செய்து இருக்கின்றார்..
அந்த இன்னோசென்ட் அவருக்கு நன்றாகவே வருகின்றது.. வெல்டன் ஜெய் சான்சே
இல்லை..
அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல்கல். 'கற்றது தமிழுக்கு' பிறகு 'அங்காடித்
தெரு'. இப்போது 'எங்கேயும் எப்போதும்' என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை
இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு??
கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ
லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. அதே போல
ஜெய்யை தானே கட்டிபிடிக்கும் இடத்தில் ஒரு சின்ன கியூட்நெஸ் அதில் இருப்பதை
மறுக்க முடியாது.
ஆண் அடங்கி பெண் பொங்கும் கேரக்டர்.. ஜெய்-அஞ்சலிக்கு நன்றாகவே
ஒர்க்அவுட் ஆகின்றது... ஜெய் வீட்டில் அஞ்சலி தன் பிரண்ட்ஸோடு சீட்டு ஆடும்
போது, அஞ்சலி ஜெய் கையை எடுத்து தனது தோள் மேல் போட்டுக்கொள்ள,
விளையாட்டின் போது அஞ்சலி முன் பின்னாக சாய்ந்து இயல்பாக ஆட, ஜெய்யின் கை
அஞ்சலியின் மார்பகங்களில் படுவதையும், அதனால் ஜெய் கூச்சத்தில்
தவிப்பதையும் விஷுவலாக காட்டாமல் ஜெய்யின் முக ரியாக்ஷனில் காட்டி இருப்பது
செம க்யூட்.
அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும், ஓவர் முன் ஜாக்கிரதையும்
சர்வானந்த்துக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு புன்னகையையே
தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா
வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவாரஸ்யமான
சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும்
முதுகுப்பக்கம் மடக்கி போவது செம.. (கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்..)மெல்ல
மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம்
பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது.
மொத்தத்தில் சர்வானந்த், அனன்யா இருவரும் கதாபாத்திரத்தின் இயல்பு மாறாமல்
நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன்,
மாணவிக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர்
மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய முடியாமல் பஸ் ஏற்ற வரும்
கணவன், குட்டிப் பெண், சமையல்கார பயணி, ஜெய்யின் ஊர்க்கார பெரியவர்.
வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த
குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்பா, அவரது
ரிங்டோன். அனன்யாவின் அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும்
பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார்
இயக்குநர்.
படத்தின் டயலாக்குகள் அற்புதம் முக்கியமாக அனன்யா தன் அக்காவிடம் ஒரு
நிமிடம் பெண் பார்க்க வந்து காபி கொடுத்து விட்டு பிடித்து இருக்கின்றது
என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றாய்..ஆனால் நான் ஒரு நாள்
அவனோடு பயணித்து இருக்கின்றேன் என்று சொல்வதும்... அஞ்சலி கோபம் வந்தால்
உடனே கோபப்பட்டு விடு அதை விட்டு விட்டு ஏதாவது ஒரு நாளில் உனக்கா நான்
எவ்வளவு விட்டு கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லாதே என்று சொல்லும்
உரையாடல்கள் வாழ்வியல் நிதர்சனங்கள்.
படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்டேக் சென்னைக்கு நேர்முகதேர்வுக்கு வரும் அனன்யாவிடம் ஏன் செல்போன் இல்லை..???
படத்தின் டாப் மோஸ்ட் ஹீரோ கேமராமேன் வேல்ராஜ்தான் என்றால் அது மிகை
இல்லை என்று சொல்லலாம்.. சென்னை மற்றும் திருச்சியின் லைவ்லிநைஸ் திரையில்
அப்படியே கொண்டு வந்து இருக்கின்றார்கள்..சின்ன சின்ன கியூட் ஷாட்டுகள்
படத்தில் அதிகம்... மிக முக்கியமாக பேருந்துகள் கிளம்பும் முன் அவைகள்
எவ்விதமாக ஒரு நீண்ட நெடிய பயணத்துக்கு தயராகின்றன என்று சின்ன சின்ன
ஷாட்டுகளில் விளக்கும் காட்சிகள் கவிதை.. அதே போல ஒரு விபத்து ஏற்பட்டதும்,
அது யார் யாருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் யார் யார் அதை ரொம்ப
சர்வசாதாரணமாக அணுகுவார்கள் என்று காட்சிப்படுத்திய இடங்களும் அருமை.
சத்யா இசையில் 'கோவிந்தா...' பாடல் அருமை. எடிட்டிங்.. ஆன்டனி..வெல்டன்
முக்கியமாக 'கோவிந்தா' சாங் கட்டிங் மற்றும் சாலைகாட்சிகள் மற்றும் விபத்து
காட்சிகயில் தனது கத்திரியால் ஷார்ப் பண்ணி இருக்கின்றார்.
ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன், குருவிற்கு ஏற்ற
சிஷ்யன் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். பிளாஷ்பேக்கிற்குள்
பிளாஷ்பேக் என்றாலும் அதை தனது திறமையான திரைக்கதையால் நேர்த்தியாக கதை
சொல்லி இருக்கிறார். இத்தனை சம்பவங்களையும் தன் அழகான வசனத்தால் கோர்த்து
மாலையாக்கி தந்திருக்கிறார். இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பளார்
ஏ.ஆர்.முருகதாஸிற்கு எங்கேயும் எப்போதும் நன்றி சொல்லலாம்.
எங்கேயும் எப்போதும் - கவிதை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Engeyum Eppothum(எங்கேயும் எப்போதும்)
நல்ல படம். விமர்சனம் அருமை.
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: Engeyum Eppothum(எங்கேயும் எப்போதும்)
அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல்கல். 'கற்றது தமிழுக்கு' பிறகு 'அங்காடித்
தெரு'. இப்போது 'எங்கேயும் எப்போதும்' என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை
இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு??
கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ
லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. ://:-: ://:-:
தெரு'. இப்போது 'எங்கேயும் எப்போதும்' என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை
இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு??
கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ
லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. ://:-: ://:-:
Similar topics
» எங்கேயும் காதல் - Engeyum Kadhal
» கிருமிகள்... எங்கேயும் எப்போதும்...
» எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )
» உலகக்கிண்ணத்தால் 'எங்கேயும் காதல்' பாதிப்பு!
» மகிழ்ச்சியாக எப்போதும் வாழ...
» கிருமிகள்... எங்கேயும் எப்போதும்...
» எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )
» உலகக்கிண்ணத்தால் 'எங்கேயும் காதல்' பாதிப்பு!
» மகிழ்ச்சியாக எப்போதும் வாழ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|