Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
5 posters
Page 1 of 1
4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
வங்காள தேசத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு, இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்ட ரத்தக் கசிவை நிறுத்த 4வது முறையாக ஆபரேஷன் செய்து, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சரி செய்தனர்.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது பிலால். இவரது 5 வயது மகள் புஷ்பதன்ஷியா பிலால், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
இதையடுத்து, அவருக்கு 3 வயதில் அந்த நாட்டிலேயே இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைப்பதற்கான ஆபரேஷன் செய்தனர். ஒன்றரை ஆண்டு குழந்தை நலமாக இருந்தது. பின்னர், ஆபரேஷன் செய்த பகுதியில் மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் நுரையீர லும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டாள். ஒரு தனியார் மருத்துவமனையில் இருதயத்துக்கு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவை சரி செய்ய 3 ஸ்டென்ட் (கம்பி போன்ற வலை)பொருத்தப்பட்டது.
Re: 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
அதன்பிறகும் ரத்தக்கசிவு நிற்காதததால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
மியாட் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.வி.பாஷி தலைமையிலான டாக்டர்கள் குழு, கடந்த 15ம் தேதி ரத்தக் கசிவை நிறுத்த மீண்டும் இரண்டு ஸ்டென்ட்களை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர்.
ஆனாலும், கசிவு நிற்கவில்லை. பின்னர், 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பு பகுதியை திறந்து, இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (அயோட்டா) அடைப்பை சரி செய்தனர்.
ஆபரேஷன் குறித்து டாக்டர் வி.வி.பாஷி கூறியதாவது: இதய நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தைக்கு ஏற்கனவே இரண்டு ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் சரியாகாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். நாங்கள் 3வது முறையாக ரத்தக் குழாய் பாதிப்பை சரி செய்யும் ஸ்டென்ட் பொருத்தும் அறுவை சிகிச்சையை முதலில் செய்தோம்.
பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஸ்டென்டை குழந்தைக்கும் பொருத்தியதால் ரத்தக் கசிவை நிறுத்த முடியவில்லை. எனவே, 4வதாக வேறு எந்த மாற்று வழிகளும் இல்லாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.
இதயம் மற்றும் நுரை யீரல் பகுதியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி, 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு ரத்தம் குளிரூட்டப்பட்டது. அதன்பிறகு ஏற்கனவே குழந்தையின் ரத்தக் குழாயில் வைக்கப்பட்டிருந்த 5 ஸ்டென்ட்களை அகற்றி விட்டு, புதிதாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ‘சின்தடிக் கிராப்ட்’ என்ற ரப்பர் குழாய் போன்ற டியூப் வைத்து தைக்கப்பட்டு ரத்தக் கசிவு சரி செய்யப்பட்டது.
எங்களுக்கு தெரிந்தவரை இவ்வளவு சிறிய வயதில், ஒரு குழந்தைக்கு 4 ஆபரேஷன் இதய பகுதியில் நடைபெற்றதும், 5 ஸ்டென்ட் பொருத்தப்பட்டு மீண்டும் அது அகற்றப்பட்டு, ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சரி செய்ததும், உலகத்தில் இதுதான் முதன்முறையாகும். இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார். பேட்டியின் போது, மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் இருந்தார்.
Re: 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
இந்த இளம் வயதில் நீ பெற்ற கஷ்டங்களுக்கு மறுமையில் பலன் காண்பாய் இன்ஷா அல்லாஹ்..
இந்த வியாதி இந்த பாலகனை விட்டு விலக ஏகனிடம் இறைஞ்சுவோம்.
இந்த வியாதி இந்த பாலகனை விட்டு விலக ஏகனிடம் இறைஞ்சுவோம்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
இறைவா இந்தக் குழந்தை போல் எத்தனை குழந்தைகள் இது போன்று அவஸ்த்தைப் படுகிறது நீதான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
kiwi boy wrote:இந்த இளம் வயதில் நீ பெற்ற கஷ்டங்களுக்கு மறுமையில் பலன் காண்பாய் இன்ஷா அல்லாஹ்..
இந்த வியாதி இந்த பாலகனை விட்டு விலக ஏகனிடம் இறைஞ்சுவோம்.
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
kiwi boy wrote:இந்த இளம் வயதில் நீ பெற்ற கஷ்டங்களுக்கு மறுமையில் பலன் காண்பாய் இன்ஷா அல்லாஹ்..
இந்த வியாதி இந்த பாலகனை விட்டு விலக ஏகனிடம் இறைஞ்சுவோம்.
இன்ஷா அல்லாஹ் @. @.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|