Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
2 posters
Page 1 of 1
சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
- ஒன்றுபோல தோன்றினாலும், இரண்டும் வேறுவேறு.
சமர்ப்பணம் என்பது நம் கடமையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வது.
சமூகத்திற்காகவும் அதைச் செய்யலாம். வீட்டிற்காகவும் அதைச் செய்யலாம்.
பண்டிதர் அன்னமாசார்யார் தன் பாடல்களை இறைவனுக்கு சமர்ப்பித்தார். அது
அவருக்கு நிரந்தர புகழைத் தந்தது. அது சமர்ப்பணம்தான். தியாகம் அல்ல. ஆனால்
அவரே தான் இறைவனைத் தவிர வேறு யாரையும் பாட முன்வராத காரணத்தால்
வாழ்வாதாரங்களையும், வருமானத்தையும் இழந்தார். அதனால் அது தியாகம் என்ற
நிலையை அடைந்துவிடுகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். ஆனால் ராணுவ வீரர்களை
தியாகிகள் என்று கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டிற்காக தன்னை
சமர்ப்பணம் செய்கிறார்கள். அதற்கு கவுரவமிக்க ஊதியம் பெறுகிறார்கள்.
அவர்களின் சமர்ப்பணத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் விடுதலைப்
போராட்ட வீரர்கள், தங்கள் சொத்து, சுகம், இன்பதுன்பங்களை இழந்து
விடுதலைக்காக உழைத்தார்கள். அதனால் அது தியாகமாக போற்றப்படுகிறது.
சமர்ப்பணத்திற்கும், லட்சியத்திற்கும் தொடர்பு உள்ளது. நம் குறிக்கோளை அடைய நம் உழைப்பை சமர்பிக்க வேண்டியுள்ளது.
திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை உருவாக்கும் கடமை கணவன், மனைவி
இருவருக்கும் பொதுவாகிறது. அதனால் குடும்பத்தில் சமர்ப்பணம் என்பது
இருவரிடத்திலும் இருக்க வேண்டியதாகிறது.
குடும்பத்திற்கான
முதல் சமர்ப்பணம் கணவரின் முதல்மாத சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
குடும்பத்தின் நிர்வாக பொறுப்பை மனைவி ஏற்றுக்கொள்ளும்போது கணவரின்
பொருளாதார ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமாவதால், கணவரின் சமர்ப்பணம்
கட்டாயமாகிறது. அந்த குடும்பத்திற்காக மனைவியும் தன் உழைப்பையும்,
உணர்வுப்பூர்வமான வழி நடத்தலையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை அவர்கள்
மற்றவர்களுக் காகச் செய்யாமல் மனப்பூர்வமாக செய்யும்போது அது
சிறப்பிற்குரியதாகிறது. தன் குடும்ப வளர்ச்சிக்காக ஒரு பெண், சமர்ப்பிக்க
வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதேபோலத்தான் ஒரு ஆண் சமூக வளர்சிக்காக
சமர்ப்பிக்க வேண்டியதும் ஏராளம்.
தந்தை தன் மகனின் கல்விச் செலவிற்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிக்க
வேண்டியுள்ளது. அப்படி அவர் உழைப்பதை, தியாகம் என்று சொல்லிவிட முடியாது.
அதேபோல் மகனின் பரீட்சை நேரத்தில் தன் தூக்கத்தையும், ஓய்வையும்
தவிர்த்துவிட்டு தாய், அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அதுவும்
தியாகம் அல்ல. ஏனெனில் இருவருக்கும் குழந்தையிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
அதை அவர்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது.
தனி மனித வாழ்விலும் சரி, பொதுநல வாழ்விலும் சரி இந்த சமர்ப்பணமும்,
தியாகமும் ஒன்றை ஒன்று நெருங்கி நிற்கும். ஆனால் இந்த இரண்டுக்குமே
வித்தியாசம் உண்டு.
காந்திஜி இந்த நாட்டிற்காக தன் உயிரைக் கொடுத்தார். இது தியாகம். அதே
காந்திஜி, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து பொய் பேசுவதை தவிர்த்தார்.
அது சமர்ப்பணம். தியாகம் என்பது ஒருவரின் இறப்புக்கு பின்பும் சிறப்பு
அளிக்கும்.
சமர்ப்பணம் ஒருவரை மனிதனாக்குகிறது. தியாகம் ஒருவரை தெய்வமாக்குகிறது.
இந்த இரண்டிற்கும் சிறிய இடைவெளிதான். மனிதன் மனிதனாக வாழ சமர்ப்பணம் தேவை.
இது கடமையால் உருவாக்கப்படுவது. தியாகம் பிறர் நலனுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொள்வது. இது உயர்ந்த பண்பு உள்ளத்தால் உருவாக்கப்படுவது.
தாய் கஷ்டப்பட்டு உழைத்து தன் குழந்தைக்கு பிடித்த உணவை சமைத்துக்
கொடுத்தால் அது சமர்ப்பணம். பட்டினியோடு இருக்கும் தனக்காக கிடைத்த உணவை
வாங்கி, பசியோடு இருக்கும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தால் அது
தியாகம். எல்லா தாய்மார்களும் தியாகிகள் அல்ல. ஆனால் எல்லா தாய்மார்களும்
சமர்ப்பணவாதிகள்தான்!
அலுவலகத்தில் தன்னுடைய பதவி உயர்வை மற்றவருக்கு விட்டுக் கொடுத்தால் அது
தியாகம். தன்னுடைய பதவி உயர்வுக்காக நேர்மையாக உழைத்தால் அது சமர்ப்பணம்.
பொதுவாழ்வில் தங்களை தியாகிகள் என்று பலர் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள்
தியாகத்திற்கும், சமர்ப்பணத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தங்களை
குழப்பிக் கொண்டு மக்களையும் குழப்புகிறார்கள். மக்களின் நலனுக்காக பதவியை
துறந்தால் அது தியாகம். பதவிக்காக போராட்டம், உண்ணாவிரதம், ஜெயில் என்று
போனால் அது தியாகம் அல்ல. ஒரு குடிமகன் சரியாக வருமானவரி செலுத்தினால் அது
சமர்ப்பணம். நிவாரணநிதியாக ஒரு மாத ஊதியத்தை கொடுத்தால் அது தியாகம்.
பகவத்கீதையில் கிருஷ்ணர்..
“நீ எனக்கு எதையாவது சமர்பிக்கும்போது நான் உன்னுடன் இருக்கிறேன்.
நீ எதையாவது தியாகம் செய்யும்போது நான் உன்னுடன் இணைகிறேன்”- என்று கூறுகிறார்.
சமர்ப்பணத்திற்கும், தியாகத்திற்கும் உள்ள சிறந்த விளக்கம் இது.
***
- ஒன்றுபோல தோன்றினாலும், இரண்டும் வேறுவேறு.
சமர்ப்பணம் என்பது நம் கடமையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வது.
சமூகத்திற்காகவும் அதைச் செய்யலாம். வீட்டிற்காகவும் அதைச் செய்யலாம்.
பண்டிதர் அன்னமாசார்யார் தன் பாடல்களை இறைவனுக்கு சமர்ப்பித்தார். அது
அவருக்கு நிரந்தர புகழைத் தந்தது. அது சமர்ப்பணம்தான். தியாகம் அல்ல. ஆனால்
அவரே தான் இறைவனைத் தவிர வேறு யாரையும் பாட முன்வராத காரணத்தால்
வாழ்வாதாரங்களையும், வருமானத்தையும் இழந்தார். அதனால் அது தியாகம் என்ற
நிலையை அடைந்துவிடுகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். ஆனால் ராணுவ வீரர்களை
தியாகிகள் என்று கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டிற்காக தன்னை
சமர்ப்பணம் செய்கிறார்கள். அதற்கு கவுரவமிக்க ஊதியம் பெறுகிறார்கள்.
அவர்களின் சமர்ப்பணத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் விடுதலைப்
போராட்ட வீரர்கள், தங்கள் சொத்து, சுகம், இன்பதுன்பங்களை இழந்து
விடுதலைக்காக உழைத்தார்கள். அதனால் அது தியாகமாக போற்றப்படுகிறது.
சமர்ப்பணத்திற்கும், லட்சியத்திற்கும் தொடர்பு உள்ளது. நம் குறிக்கோளை அடைய நம் உழைப்பை சமர்பிக்க வேண்டியுள்ளது.
திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை உருவாக்கும் கடமை கணவன், மனைவி
இருவருக்கும் பொதுவாகிறது. அதனால் குடும்பத்தில் சமர்ப்பணம் என்பது
இருவரிடத்திலும் இருக்க வேண்டியதாகிறது.
குடும்பத்திற்கான
முதல் சமர்ப்பணம் கணவரின் முதல்மாத சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
குடும்பத்தின் நிர்வாக பொறுப்பை மனைவி ஏற்றுக்கொள்ளும்போது கணவரின்
பொருளாதார ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமாவதால், கணவரின் சமர்ப்பணம்
கட்டாயமாகிறது. அந்த குடும்பத்திற்காக மனைவியும் தன் உழைப்பையும்,
உணர்வுப்பூர்வமான வழி நடத்தலையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை அவர்கள்
மற்றவர்களுக் காகச் செய்யாமல் மனப்பூர்வமாக செய்யும்போது அது
சிறப்பிற்குரியதாகிறது. தன் குடும்ப வளர்ச்சிக்காக ஒரு பெண், சமர்ப்பிக்க
வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதேபோலத்தான் ஒரு ஆண் சமூக வளர்சிக்காக
சமர்ப்பிக்க வேண்டியதும் ஏராளம்.
தந்தை தன் மகனின் கல்விச் செலவிற்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிக்க
வேண்டியுள்ளது. அப்படி அவர் உழைப்பதை, தியாகம் என்று சொல்லிவிட முடியாது.
அதேபோல் மகனின் பரீட்சை நேரத்தில் தன் தூக்கத்தையும், ஓய்வையும்
தவிர்த்துவிட்டு தாய், அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அதுவும்
தியாகம் அல்ல. ஏனெனில் இருவருக்கும் குழந்தையிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
அதை அவர்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது.
தனி மனித வாழ்விலும் சரி, பொதுநல வாழ்விலும் சரி இந்த சமர்ப்பணமும்,
தியாகமும் ஒன்றை ஒன்று நெருங்கி நிற்கும். ஆனால் இந்த இரண்டுக்குமே
வித்தியாசம் உண்டு.
காந்திஜி இந்த நாட்டிற்காக தன் உயிரைக் கொடுத்தார். இது தியாகம். அதே
காந்திஜி, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து பொய் பேசுவதை தவிர்த்தார்.
அது சமர்ப்பணம். தியாகம் என்பது ஒருவரின் இறப்புக்கு பின்பும் சிறப்பு
அளிக்கும்.
சமர்ப்பணம் ஒருவரை மனிதனாக்குகிறது. தியாகம் ஒருவரை தெய்வமாக்குகிறது.
இந்த இரண்டிற்கும் சிறிய இடைவெளிதான். மனிதன் மனிதனாக வாழ சமர்ப்பணம் தேவை.
இது கடமையால் உருவாக்கப்படுவது. தியாகம் பிறர் நலனுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொள்வது. இது உயர்ந்த பண்பு உள்ளத்தால் உருவாக்கப்படுவது.
தாய் கஷ்டப்பட்டு உழைத்து தன் குழந்தைக்கு பிடித்த உணவை சமைத்துக்
கொடுத்தால் அது சமர்ப்பணம். பட்டினியோடு இருக்கும் தனக்காக கிடைத்த உணவை
வாங்கி, பசியோடு இருக்கும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தால் அது
தியாகம். எல்லா தாய்மார்களும் தியாகிகள் அல்ல. ஆனால் எல்லா தாய்மார்களும்
சமர்ப்பணவாதிகள்தான்!
அலுவலகத்தில் தன்னுடைய பதவி உயர்வை மற்றவருக்கு விட்டுக் கொடுத்தால் அது
தியாகம். தன்னுடைய பதவி உயர்வுக்காக நேர்மையாக உழைத்தால் அது சமர்ப்பணம்.
பொதுவாழ்வில் தங்களை தியாகிகள் என்று பலர் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள்
தியாகத்திற்கும், சமர்ப்பணத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தங்களை
குழப்பிக் கொண்டு மக்களையும் குழப்புகிறார்கள். மக்களின் நலனுக்காக பதவியை
துறந்தால் அது தியாகம். பதவிக்காக போராட்டம், உண்ணாவிரதம், ஜெயில் என்று
போனால் அது தியாகம் அல்ல. ஒரு குடிமகன் சரியாக வருமானவரி செலுத்தினால் அது
சமர்ப்பணம். நிவாரணநிதியாக ஒரு மாத ஊதியத்தை கொடுத்தால் அது தியாகம்.
பகவத்கீதையில் கிருஷ்ணர்..
“நீ எனக்கு எதையாவது சமர்பிக்கும்போது நான் உன்னுடன் இருக்கிறேன்.
நீ எதையாவது தியாகம் செய்யும்போது நான் உன்னுடன் இணைகிறேன்”- என்று கூறுகிறார்.
சமர்ப்பணத்திற்கும், தியாகத்திற்கும் உள்ள சிறந்த விளக்கம் இது.
***
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
உங்கள் கட்டுரை சேனைக்கு அற்ப்பணம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தாயகத்திற்காக தியாகம் செய்தவர்களின் தியாகம் வீண் போகாது- தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்
» பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்
» முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
» பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்
» முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|