சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Khan11

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

+2
farah
gud boy
6 posters

Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by gud boy Wed 12 Oct 2011 - 6:39

siந்திக்க வைத்த வாழ்க்கையை பற்றிய கதை.

அவள், ஒரு நடுத்தர வயது பெண்மணி. அமெரிக்காவில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். கம்பீரமான நடை, உடை, பாவனை. கையிலே ஒரு தோல் பை. வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பெண்மணி, எடுப்பான முகம் அதிகாரமும், தெளிவும், உரிமையும் அவளை சுற்றி காற்றில் மிதப்பது போல் இருந்தது. காரிலிருந்து இறங்கினாள்; வீட்டுக்குள் வந்தாள். அவளது ஆறு வயது மகன், அம்மாவைக் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான்.
"சாப்பிட்டாயா? பள்ளிக் கூடம் நன்றாக போயிற்றா?" என்று விசாரித்தாள். சோபாவில் உட்கார்ந்தாள். டெலிபோனை தன் பக்கத்திற்கு நகர்த்தி வைத்துக் கொண்டாள். தன் தோல் பையிலிருந்து டெலிபோன் விலாச நோட்டை எடுத்தாள். டெலிபோனை சுழற்றினாள், தலைமயிரைத் தள்ளியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

o ''அம்மா!'' என்றான் குழந்தை. "அம்மா போன் செய்யப் போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு!" அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில் பேசாமல் ஏறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, ஒரு சந்தேகம், ஒரு ஆசை! "அம்மா! அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?" என்றான்.

o முக்கியமானவர்களின் விலாசம், பெயர் எல்லாம் இருக்கிறது. நான் இப்போது சிலருடன் பேச வேண்டும்!" என்றாள் அம்மா. "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" என்று கேட்டான் தயங்கியபடி. இந்த சம்பவத்தைப் படித்த நான், அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் ஒரு கணம். "என்ன வாழ்க்கை இது? எதற்காக வாழ்கிறோம்?" என்ற கேள்வி மனதில். அத்துடன் அந்த பையனின் சோக முகமும் அங்கே தெரிந்தது!

o ''வேலைக்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?" என்றொரு கேள்வி. வாழ்க்கை ஒரே ஓட்டம், ஒரே நெருக்கடி, போட்டி நிறைந்த உலகம்! "எனக்கு நேரமில்லை..." என்ற புலம்பல். "ஏன் ஓடுகிறேன் இப்படி?"

பிறர் என்னைப் பார்க்கும் போது, என் காரையும், வீட்டையும், என் தோல்பையையும், என் பேங்க் பேலன்சையும் பார்த்து அவர்கள் பிரமிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசை. இது என் ஜீவதாகம்; என் ஆசையும் இதுதான். என் ஆசையின் பின்னால் நான் ஓடுகிறேன்!

இந்த ஊரும், உலகமும் என்னை ஆசைகளால் முடுக்கி விட்டிருக்கிறது; ஓடுகிறேன்!

என் பையைப் பார்க்கிறேன். என் பேனா. எழுத ஒரு சாதாரண பேனா போதாதா? என் பையில் இருப்பது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாண்ட் பிளாங்க்! வாழ்வில் இவையெல்லாம் தேவையா?

"இவை எல்லாம் அத்தியாவசியமா?"

கேள்வி மேல் கேள்விகள். "யாருமில்லை சாட்சியாக. மனமே கேள்வியாக!" என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இதுதானா வாழ்க்கை?

சில நாட்களுக்கு முன் நான் சென்ற காந்திஜியின் அருங்காட்சியகம் என் கண்முன் சினிமா போல திடீரென ஓடியது.

என் எல்லைகளைப் பற்றி எனக்கு ஒரு திட்டம் உண்டா அல்லது அவ்வப்போது மனதில் பட்டதை வைத்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறேனா? வருமானம் வாழ்வின் முக்கிய தேவைதான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல...

நம் வாழ்வில் நாம் பெருமைப்படும்படி செய்யும் சிறு, சிறு சாதனைகளில், உலகைப் புரிந்து கொள்வதில் ஊருக்கு உதவுவதில், மனித உறவில், அந்த மகிழ்ச்சியில் வாழ்க்கை நெறிகளில் தான் நமது நிரந்தர மகிழ்ச்சி இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும் போதும், அது போதுமானதாக இருக்கும் போதும், நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன.

www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by farah Wed 12 Oct 2011 - 12:09

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" 480414

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 16:42


o ''அம்மா!'' என்றான் குழந்தை. "அம்மா போன் செய்யப் போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு!" அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில் பேசாமல் ஏறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, ஒரு சந்தேகம், ஒரு ஆசை! "அம்மா! அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?" என்றான்.
- இத்துடன் முடித்துவிட்டிருந்தால் இச்சிறுகதை அபாரமானதாக இருந்திருக்கும்.

அருமையான சிறுகதை.... பகிர்வுக்கு நன்றி கிவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 19:05

இப்பதான் இந்தக் கட்டுரை படிக்க நேர்ந்தது மிகவும் சிந்தித்தேன் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" 930799 "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by gud boy Wed 12 Oct 2011 - 19:17

நண்பன் wrote:இப்பதான் இந்தக் கட்டுரை படிக்க நேர்ந்தது மிகவும் சிந்தித்தேன் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" 930799 "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" 930799

சிந்திப்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by *சம்ஸ் Wed 12 Oct 2011 - 20:47

இந்த சிறுகதை பற்றி இன்னும் சிந்திக்கிறேன் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 21:16

முக்கியமானவர்களின் விலாசம், பெயர் எல்லாம் இருக்கிறது. நான் இப்போது சிலருடன் பேச வேண்டும்!" என்றாள் அம்மா. "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" என்று கேட்டான் தயங்கியபடி. இந்த சம்பவத்தைப் படித்த நான், அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் ஒரு கணம். "என்ன வாழ்க்கை இது? எதற்காக வாழ்கிறோம்?"

உண்மைதான் ஊருக்காக தான் வாழ்கிறோம் ,உலகம் போற்ற வாழ்கிறோம் .இறைவன் சொன்ன ஈகை மறந்து வாழ்கிறோம் .

பகிர்வுக்கு நன்றி ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" Empty Re: "அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum